என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக அமைச்சர்"

    • பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.
    • மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    டெல்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.

    அதில் அதிஷி சீக்கிய குரு தேக் பகதூரை அவமதித்ததாகக் கூறி கண்டனம் வலுத்தது. டெல்லி மற்றும் பஞ்சாப் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே அதிஷியின் உரையை எடிட் செய்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த வீடியோ பரப்பப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்தது.

    பஞ்சாபில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி பாஜக அமைச்சர் கபில் சர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிய தடயவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.   

    • அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில் தனது சொந்த அரசியல் விமர்சனங்களைச் சேர்த்ததற்காக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தூரில் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அமைச்சரின் இந்த அலட்சியமான பதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஆனந்த் மாளவியா, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்பாக ஒரு உத்தரவை வெளியிட்டார்.

    அந்த அரசு உத்தரவில், காங்கிரஸ் கட்சி அளித்த மனுவில் இடம்பெற்றிருந்த வாசகங்களை அப்படியே சேர்த்திருந்தார். அதில் அமைச்சரின் 'காண்டா' என்ற வார்த்தை பிரயோகம் "மனிதநேயமற்றது மற்றும் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது" என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனமும் இடம்பெற்றிருந்தது.

    அரசு சார்ந்த நிர்வாக உத்தரவில் இத்தகைய அரசியல் ரீதியான விமர்சனங்களை சேர்த்ததால் உஜ்ஜைனி மண்டல வருவாய் ஆணையர் ஆஷிஷ் சிங், ஆனந்த் மாளவியாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

    • இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு
    • ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கை மற்றும் காலில் மாவுக்கட்டுடன் குற்றவாளியை போலீசார் அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து பேசிய மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடம். கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு மிகப்பெரிய மோகம் இருப்பதால், அவர்கள் பொதுவெளியில் வருவதற்கு முன்பு பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை இது வீரர்களுக்கு நினைவூட்டும் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில், வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுகிறார் என பாஜக அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிவதை தனக்குப் பிடிக்காது என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது பதவி நீக்கத்தை "கோவா புரட்சி தினத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வெகுமதி" என்று கவுட் குறிப்பிட்டுள்ளார்.
    • பாஜகவில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    பாஜக ஆளும் கோவாவில் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கோவிந்த் கவுட், மாநில அமைச்சரவையிலிருந்து நேற்று (புதன்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பழங்குடியினர் நலத் துறையில் ஊழல் நடந்ததாக கவுட் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

    தனது பதவி நீக்கத்தை "கோவா புரட்சி தினத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வெகுமதி" என்று கவுட் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 18 கோவா புரட்சி தினம் ஆகும்.

    கோவா பாஜக தலைவர் தாமோதர் நாயக், கவுட் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். பதவி நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. "இது மாநில அரசின் முடிவு" என்று மட்டும் தெரிவித்தார்.

    பழங்குடியினர் நலத் துறையில் உள்ள அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்க லஞ்சம் வாங்குவதாக மே 26 அன்று ஒரு பொது நிகழ்ச்சியில் கவுட் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இது பாஜகவில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    கவுட்டின் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையைச் சந்தித்து, ஊழல் நிறைந்த பாஜக அரசாங்கத்தை நீக்கக் கோரியது.

    2022 மார்ச் மாதம் பாஜக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, வடக்கு கோவாவில் உள்ள பிரியோல் தொகுதி எம்.எல்.ஏ.வான 53 வயதான கவுட், அமைச்சராகப் பதவியேற்றார்.

    2019 முதல் 2022 வரையிலும் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் கவுட் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீ உன் நாக்கைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
    • தான் சுகாதார அமைச்சராக இருக்கும் வரை, மருத்துவர் விளக்கம் அளித்தாலும் கூட, மீண்டும் பணியில் அமர்த்தப்பட மாட்டார் என்று மிரட்டினார்.

    கோவா மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரியை (CMO) பொதுமக்கள் முன்னிலையில் அவமதித்த பாஜக அமைச்சர் விஸ்வஜித் ரானேவுக்கு எதிராக கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

    எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, கோவா சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

    சனிக்கிழமை அன்று, கோவா மருத்துவக் கல்லூரியில் மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் பகிரங்கமாக சத்தம் போட்டது வீடியோவாகப் பதிவாகியுள்ளது.

    "CMO யார்? அவரை இங்கே வரச் சொல்லுங்கள்?" என்று கேட்ட அமைச்சர், நாற்காலியில் அமர்ந்திருந்த மருத்துவரை, சட்டைப் பையிலிருந்து கையை எடுத்து முகமூடியைக் கீழே இறக்குமாறு கடுமையான குரலில் கூறினார். மேலும், "நீ உன் நாக்கைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ ஒரு மருத்துவர். நோயாளிகளிடம் பணிவாகப் பேச வேண்டும்" என்று கூறியபோது, மருத்துவர் பதிலளிக்க முயன்றார்.

    இதனால் கோபமடைந்த அமைச்சர், "நான் சொல்லும்போது அமைதியாக இருக்காதே! போய்விடு!" என்று கூறி அவரை விரட்டினார். "அவரது இடைநீக்க உத்தரவைச் சரி செய்யுங்கள்" என்று அவர் தனது சகாக்களிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.

    உடனடியாக அவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்ட அவர், தான் சுகாதார அமைச்சராக இருக்கும் வரை, மருத்துவர் விளக்கம் அளித்தாலும் கூட, மீண்டும் பணியில் அமர்த்தப்பட மாட்டார் என்றும் மிரட்டினார்.

    இந்த வீடியோ வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது. இதன் காரணமாக, அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கோரினார். தான் திடீர் தூண்டுதலால் கோபமடைந்ததாகவும், மருத்துவர்கள் சமூகத்தை மதிப்பதாகவும், மருத்துவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் விஸ்வஜித் ரானே தெரிவித்தார். 

    • குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
    • இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது

    "குப்பையில் இருந்து தங்கம் உருவாக்கும் இயந்திரத்தை மீரட்டில் தயாரித்து வருகிறோம். மிக விரைவில் அது பயன்பாட்டுக்கு வந்துவிடும்" என்று உத்தரபிரதேச பால்வளத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பாஜக அமைச்சர் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். .

    அந்த எக்ஸ் பதிவில், "குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கன்னோஜில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ஒரு பால் ஆலையை செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தரம்பால் சிங் கவனம் செலுத்த வேண்டும்.

    ஒருவேளை பாஜகவின் ஊழல் தற்போது மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்கள் இப்போது குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர் .இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • பச்சு கபாத் குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார்
    • குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.

    மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை அனுப்பாமலேயே அனுப்பியதாகவும், பணிகள் முடிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டி பணம் பெற்றதாக பல்வந்த் சிங் கபாத் புகார் அளிக்கப்பட்டது.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை அமைச்சர் மகன் பல்வந்த் சிங்கின் நிறுவனம் எடுக்காமலே அவரது நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

    பச்சு கபாத் குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார்.
    • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசினார்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இந்நிலையில், இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.

    கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஷா, "நான் பேசியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். பஹல்காம் தாக்குதலால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது குடும்பம் இராணுவ பின்னணியைக் கொண்டுள்ளது,

    நான் சோகமான இதயத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால் , 10 முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். இராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்" என்று தெரிவித்தார்.

    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார்.
    • கர்னல் சோபியா குரேஷி இணையத்தில் வைரலானார்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இந்நிலையில், இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.

    கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    குஜராத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி (35), இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் அதிகாரியாக உள்ளார். 1999 ஆம் ஆண்டு ஆபிஸர்ஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்து ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சோபியாவின் தாத்தாவும் தந்தையும் இராணுவத்தில் இருதவர்கள். சோபியா குரேஷி மெக்கானைஸ்டு காலால் படையைச் சேர்ந்த அதிகாரியை மணந்துள்ள்ளார். இதனால் சோபியா முழுமையான ராணுவ குடும்ப பின்னணியை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.
    • ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    வீட்டை பாதுகாக்க கதவுக்கு பூட்டுபோட்டு செல்வது வழக்கம். ஆனால் புதுவையில் பொது இடத்தில் வைத்துள்ள பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதை தடுப்பதற்காக பா.ஜனதா அமைச்சர் ஒருவர் பேனருக்கு பூட்டு போட்டுள்ளார். இது பார்ப்போரை வியப்படையச் செய்துள்ளது.

    புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பா.ஜனதா அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.

    ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது.

    புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.

    இந்த பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பின்பக்கமாக பூட்டு போட்டுள்ளார்.

    இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    • பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
    • பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புதிய தாங்கல் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது.

    இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் அங்கிருந்த பெண்களிடம் 100 நாள் வேலைவாய்ப்பு 200 நாட்களாகவும் அதற்கான கூலியையும் பிரதமர் மோடி உயர்த்திருக்கிறார்.

    மேலும் மக்களுக்கு வருகின்ற நிதியை உயர்த்தி கொடுக்க சொல்லியும் கூறி இருக்கிறார் என்றார். அப்போது பெண்கள் இதனை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் நீங்கள் கைதட்டுங்கள் என்று அமைச்சர் கூறினார். அங்கிருந்த பெண்கள் சிரித்துக்கொண்டே கைதட்டினர்.

    இதையடுத்து அங்கிருந்து பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி மந்திரம் ஓதினார். இதை பார்த்த பெண்கள் சிரித்தனர். பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    இதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 'Beti Bachao, Beti Padhao' மத்திய அரசு திட்டத்தின் பெயரை இந்தியில் எழுத்து பிழையுடன் எழுதிய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் தார் தொகுதியில் வென்ற சாவித்ரி தாக்கூர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், தனது தொந்த தொகுதியில் அரசு சார்பில் நடந்த பள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ('Beti Bachao, Beti Padhao') என்ற மத்திய அரசின் திட்டத்தை இணையமைச்சர் இந்தியில் எழுதும் பொழுது எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளார்.

    மத்திய இணையமைச்சர் இந்தியில் எழுத்துப் பிழையுடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வைரல் வீடியோவிற்கு காங்கிரஸ் தலைவர் கேகே மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதில், "தங்களது தாய்மொழியை கூட எழுத தெரியாதவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் துரதிஷ்டம். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு துறையை நிர்வகிக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினராவதற்கு கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சாவித்ரி தாகூர் தனது வேட்புமனுவில் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×