என் மலர்
நீங்கள் தேடியது "100 நாள் வேலைதிட்டம்"
- பச்சு கபாத் குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார்
- குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை அனுப்பாமலேயே அனுப்பியதாகவும், பணிகள் முடிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டி பணம் பெற்றதாக பல்வந்த் சிங் கபாத் புகார் அளிக்கப்பட்டது.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை அமைச்சர் மகன் பல்வந்த் சிங்கின் நிறுவனம் எடுக்காமலே அவரது நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
பச்சு கபாத் குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
- எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பாம்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஏழைஎளிய மக்களுக்காக 100 நாள் வேலைதிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2009-ம் ஆண்டு 247 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாள் வேலைதிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரு கின்றனர்.
தற்போது இப்பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கும் பணி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பழைய கணக்கெடுப்புபடியே பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திர மடைந்த கிராம பெண்கள் குப்பாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணி யாளர்கள் வேலை செய்த இடத்தில் முற்றுகையிட்ட னர்.
அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடு கள் நடைபெற்று வருகிறது.
எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர். இருந்தபோதும் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
- திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
"100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை விடுவிக்க வேண்டும் என பொங்கலுக்கு முன்பே பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், நிதி விடுக்காத பாஜகவை கண்டிக்காமல், தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி அவதூறு பரப்பி வருகிறார்" என்று தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய பழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?
எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு , ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?
தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.






