search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே 100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு
    X

    கோப்பு படம்.

    ஆண்டிப்பட்டி அருகே 100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு

    • 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
    • எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பாம்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஏழைஎளிய மக்களுக்காக 100 நாள் வேலைதிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2009-ம் ஆண்டு 247 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாள் வேலைதிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரு கின்றனர்.

    தற்போது இப்பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கும் பணி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பழைய கணக்கெடுப்புபடியே பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திர மடைந்த கிராம பெண்கள் குப்பாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணி யாளர்கள் வேலை செய்த இடத்தில் முற்றுகையிட்ட னர்.

    அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடு கள் நடைபெற்று வருகிறது.

    எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர். இருந்தபோதும் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×