search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100-day work scheme"

    • புதிய செயலி அறிமுகப்படுத்தியதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.
    • குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    ஊராட்சிகளில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைதிட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் போதுமான வருமானம் கிடைப்பதால் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    வேலை நேரத்தை 9 மணிமுதல் 5 மணிவரை என்பதை 10 மணிமுதல் 4 மணிவரை என குறைக்கவேண்டும் என பயனாளிகள் கேட்டுெகாண்டிருந்தனர். இந்தநிலையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.

    இதனால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலை 8 மணிக்கு வரவேண்டும் என பணித்தள பொறுப்பாளர்கள் அறிவுறுத்தினர். குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

    தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு உணவு சமைத்து கொடுத்து காலை 8 மணிக்கு வருவது என்பது இயலாத காரியம். எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும். முறையாக சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா கூறுகையில், அரசு கடந்தமாதம் ஒரு புதிய செயலியை அமல்படுத்தி உள்ளது. இதில் 9 மணிக்குள் மட்டுமே பயனாளிகள் பெயரை பதிய முடியும். எனவே அனைத்து 100 நாள் பணியாளர்களும் 8 மணிக்கு வரவேண்டும் என நிர்பந்திக்கவேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • 2 ஆண்டுகளாக எந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளும் செய்யப்படவில்லை.
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபட்டி கிராம மக்கள் தங்களது கிராமத்தில் பொதுமக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட வலியுறுத்தி விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

    மனுவில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பேரிலோவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முதலிபட்டி கிராமத்தில் கருப்பசுவாமி கோவில் கண்மாய், புதுஅம்மன் கோவில் கண்மாய், பழையபட்டி கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய், தில்லை ஊரணி கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் ஆகிய இடங்களில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளும் செய்யப்படவில்லை. எனவே முதலில் வெட்டி கிராம மக்கள் அருகில் உள்ள பேரிலோவென்பட்டியில் சென்று 100 நாள் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. எனவே தங்களது கிராமத்திலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இல்லாததால் யூனியன் அலுவலர்களிடம் மனுவை வழங்கிவிட்டு சென்றனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கி ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்திட வேண்டும் என்று கோஷமிட்டனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு சார்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். முன்னதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பெருமாள், மாவட்ட தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மோகன் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.

    அப்போது வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கி ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்திட வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாய தொழிலாளிகளுக்கு கூலியை உயர்த்திட வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை, நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டும், தனை நகர்புறத்திலும் விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

    மேலும் கல்வி, சுகாதாரத் துறை உள்ளிட்டவற்றை தனியார்களிடம் ஒப் படைக்க கூடாது எனவும், கிராமங்களில் கூடுதலான சுகாதார மையங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி அளித்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் கந்துவட்டி கொடுமை மற்றும் சாதிய வன்கொடுமை அதிகரித்து வருவதாகவும், உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து கந்து வட்டியை முற்றிலுமாக ஒழித்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    ×