search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilathikulam"

    • போட்டியில் விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
    • சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    பூஞ்சிட்டு, சின்னமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, ராமநா தபுரம், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 2-வது பூஞ்சிட்டு மாடு முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியை மூர்த்தி தொடங்கி வைத்தார். பூஞ்சிட்டு மாடு 2-வது சுற்றை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    • விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல்கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சாலை வரி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    விளாத்திகுளம்:

    தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல் கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் செல்வமுருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன், பொருளாளர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிகண்டன் வரவேற்று பேசினார். லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார். செய்யது யூசப் நன்றி கூறினார். இதில் முனியசாமி, ரஹ்மான், செல்வம், காளி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
    • கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப்பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலும் நாசம் செய்துள்ளது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்ட வற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

    காட்டுப்பன்றிகள்

    இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றி கள், மான்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம், தாப்பாத்தி, அழகாபுரி, அயன் கரிசல்குளம், ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, வெம்பூர், கீழக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலும் நாசம் செய்துள்ளதால் அது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இது குறித்து விவசாயி காசியம்மாள் என்பவர் கூறுகையில், இதுபற்றி வேளாண்மை துறை, வனத்துறை அதி காரிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை காட்டுப்பன்றிகள், மான்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கொஞ்சம் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

    நிலத்தில் இறங்கி வேலை செய்து எனது இரு கால்களும் காயம்பட்டு உள்ளது. இந்தக் காயத்துக்கு மருந்தாக கூட இந்த நிலத்தில் விளைந்த கடலை விற்பனை விலை வராது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வளவு இன்னல்களிலும் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறியல் போராட்டம்

    இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கூறுகையில், தமிழகத்தை போன்று இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இது போன்ற காட்டுப்பன்றிகள், மான்கள், யானைகள் தொல்லையால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் அவதி அடைந்து வந்தபோது, அந்த மாநில அரசுகள் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்று வதற்காக உடனடியாக விலங்குகளை பிடிக்க பெரும் முயற்சி எடுத்துள்ளது.

    காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விளாத்திகுளம் பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மறியல் போராட்டம் நடத்த உள் ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
    • கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளாத்திகுளம்:

    இலங்கையில் நடைபெற உள்ள இண்டோ ஸ்ரீலங்கா சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

    வருகிற 24, 25 -ந் தேதிகளில் இலங்கையில் நடைபெற உள்ள இந்த சர்வதேச கராத்தே போட்டிக்கு சோபுகாய் கோஜ்ரியோ கராத்தே- டூ இந்தியா சார்பில் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்சி சுரேஷ்குமார் தலைமையில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

    கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் பங்குபெறும் மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் மாயாதேவி, பள்ளி நிர்வாக அலுவலர் ராகவன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • காடல்குடி, சின்னூர் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை கனிமொழி எம்.பி. வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட காடல்குடி, சின்னூர், என்.ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம் மற்றும் மாதலாபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கி னார். அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்க ளை பெற்றார்.

    மேலும், 13 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் திட்டம் மூலம் 50 பயனாளி களுக்கு ரூ.9.30 லட்சம் குழு கடன், 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கி சிறப்புரை யாற்றினார்.

    அப்போது அவர் பேசுகை யில், விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை களை விரைவில் சரி செய்து தரப்படும். சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களது மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராம கிருஷ்ணன், புதூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னகண்ணு, புதூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வ ராஜ், மத்திய ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்தி குளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், புதூர் தி.மு.க. நகர செயலாளர் மருதுபாண்டி, முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், பொதுக்குழு உறுப்பி னர் ராஜாகண்ணு, வெற்றி வேலன், கந்தசாமி உரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி விஜய், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைத்தள அணி ஒருங்கி ணைப்பாளர் கரண் குமார், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சங்கரய்யா உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. நிர்வாகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    விளாத்திகுளம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைந்ததை தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அவரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் பாலமுருகன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேசவன், வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
    • தி.மு.க. பாக முகவர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலநது கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் தேர்தல் பார்வையாளர் மதுரை முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், எட்டையாபுரம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் சுந்தர் உட்பட தி.மு.க. பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • விவேகானந்தா வித்தியாலயா மழலையர் பள்ளியில் “விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றி அறிவுரை வழங்கப் பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உள்ள விவேகானந்தா வித்தியாலயா மழலையர் பள்ளியில் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், "விபத்தில்லா தீபாவளி" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி தினத்தன்று பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றியும், பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப் பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தெரிவிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் பங்களாதெரு, சத்யாநகர்,மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தினார். அப்போது விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ், வார்டு செயலாளர் சங்கரலிங்கம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குதிரைகுளம் ஊராட்சி, ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதேப்போல் சில்லாங்குளம் ஊராட்சி, பரமன் பச்சேரி கிராமத்தில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியையும், தெற்குகல்மேடு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணி, ஆகியவற்றுக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,

    குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் விநாயகம், முத்துமணி, எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, கல்மேடுராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன், தளவைராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், கிளைச் செயலாளர் சக்கையா, சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மண்டல அளவிலான யோகா, சிலம்பம் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து,வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மண்டல அளவிலான 16-பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட யோகா, சிலம்பம், பரதநாட்டிய போட்டிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் கேடயம், சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அதிகாரி ராகவன், பள்ளி முதல்வர் மாயாதேவி,யோகா, ஆசிரியர் கருப்பசாமி, சிலம்பம் ஆசிரியர் சிவலிங்கம், பரதநாட்டிய ஆசிரியை நாகேஸ்வரி உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
    • தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். வடக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விளாத்திகளும் பகுதி விவசாய பொதுமக்களுக்கு மழை நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.

    இதில் மாநிலத் துணைத் தலைவர் சாமி, மாநில சட்ட ஆலோசகர் பிரபுஜீவன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகப்பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×