search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    விளாத்திகுளத்தில் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல்கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சாலை வரி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    விளாத்திகுளம்:

    தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அப்துல் கலாம் சுற்றுலா கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் செல்வமுருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன், பொருளாளர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிகண்டன் வரவேற்று பேசினார். லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார். செய்யது யூசப் நன்றி கூறினார். இதில் முனியசாமி, ரஹ்மான், செல்வம், காளி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×