search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த 57 ஜோடி மாடுகள்
    X

    விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த 57 ஜோடி மாடுகள்

    • போட்டியில் விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
    • சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    பூஞ்சிட்டு, சின்னமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, ராமநா தபுரம், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 2-வது பூஞ்சிட்டு மாடு முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியை மூர்த்தி தொடங்கி வைத்தார். பூஞ்சிட்டு மாடு 2-வது சுற்றை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×