என் மலர்
நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி"
- அ.தி.மு.க.வைப்பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.
- தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம்.
* அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.
* தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.
* தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றார்.
இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.
- பல பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.
- அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழகத்தின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவரும், அனைவராலும் 'கானா' என்று பாசத்தோடு அழைப்பவருமான ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடன் மிகவும் நெருங்கிப் பழகியவரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா பேரன்பைப் பெற்றவருமான அன்பு அண்ணன் கருப்பசாமி பாண்டியன், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர், கழக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர்.
1998-ல் திருநெல்வேலியில் கழக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. அன்பு அண்ணன் கருப்பசாமி பாண்டியன் இழந்து வாடும். அவரது மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான வி.கே.பி. சங்கர், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான்.
- எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும்.
சென்னை:
டெல்லியில் அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக சட்டசபையில் பேசும்பொருளாக மாறி உள்ளது. சட்டசபையில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,
அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம் என்று பேசினார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போது நீங்கள் (அதிமுக) தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பதில் அளிக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும் என்று சினிமா படபாணியில் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
- தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தினேன்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப்போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து (மொழிக்கொள்கை) அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
* தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன்.
* பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்.
* தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
- கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
- மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.
சென்னை:
டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதாக அடிக்கடி செய்திகள் வெளியிடப்படுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மத்திய அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு துணை நிற்க கூடாது.
* உச்சநீதிமன்ற தீர்ப்புபடி, முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தி, நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* தமிழ்நாட்டில் நடந்த டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
* தமிழ்நாட்டில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
* அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.
* தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.
முன்னதாக, பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் எனக்கூறுவது, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருகின்றனர்.
- பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
- சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டசபைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "எல்லாம் நன்மைக்கே" என்று கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு.
- எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை அ.தி.மு.க. தொண்டர்கள் வழங்கினர்.
மதுரை:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து, மாநாடு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் மற்றும் தொண்டர்கள் வழங்கினர். அ.தி.மு.க. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாநாட்டு திடலுக்கு நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் புறப்பட்டார்.
திடலை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் முதல் நிகழ்வாக 51 அடி உயரம் கொண்ட கம்பத்தில், அ.தி.மு.க. கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து 10 நிமிடம் பூக்கள் தூவப்பட்டது.
- அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் கூடி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் கூடி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதற்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அனைத்து உலக எம்.ஜி.ஆர்.மன்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளருமான பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடருவோம்.
- எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது.
தஞ்சாவூர்:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென சந்தித்து பேசினார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும் வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை, அமைப்பார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்கும் பொறுப்பு எங்களிடம் வரும். தேசிய ஜனநாய கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதில் தான் தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வைத்திலிங்கம், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
- அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
- அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
வைத்திலிங்கத்தை நேற்று இரவு திடீரென, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒவ்வொருவரும் தலா அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சசிலாவுடன், அவருடைய சகோதரர் திவாகரன் உடன் வந்தார்.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என சசிகலா கூறி வந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இணைப்புக்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வைத்திலிங்கத்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-
வைத்திலிங்கத்துடனான இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. தி.மு.க. போல் இல்லை. நல்ல ஆட்சி 2026-ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். வெளியில் சில பேர் நினைக்கலாம், அ.தி.மு.க.வை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல தான்.
அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியா ஆட்சி அமைத்து, அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்து கேட்டதற்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகள் படி அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ? அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசிய கருத்து குறித்து கேட்டதற்கு, தி.மு.க. மத்திய அரசு என்று முதலில் பார்க்க வேண்டும். மத்திய அரசு என்று பார்த்தால் தான் இங்கு ஆட்சி சரிவர நடத்த முடியும். நீங்கள் சண்டை போடுவதற்காக மக்களின் வாக்குகளை வாங்கி போய் பாராளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால், வரும் 2026-ல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். இங்கு அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை மாற்று பாதையில் கொண்டு போகும் ஒரே எண்ணத்தில் அவர்கள் செய்யும் தவறை வெளியே போகாமல் மாற்றும் முயற்சியில் இந்த மாதிரி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் ஒரு சில விஷயம் தான் வெளியே வந்து உள்ளது. இன்னும் போகப்போக 2026-தேர்தலுக்கு முன் நிறைய விஷயங்கள் வெளியே வரும். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தை சீர்கெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாத்துக்கும் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.
- மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.
இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று (10.03.2025) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்றைக்கு தி.மு.க.வும், பன்னீர்செல்வம் உட்பட பலர் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதாக ஒரு தவறான பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள்.
- நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும்.
மதுரை:
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எந்தவித சாதி பாகுபாடும் கிடையாது. அனைவரும் சம தர்மமாக இயக்கத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். ஆனால் ஒட்டுமொத்த தொண்டர்களும், நிர்வாகிகளும் எடப்பாடியார் பின்னால் அணிவகுத்து நின்றார்கள்.
எடப்பாடியாரிடம் ஆளுமை திறன் உள்ளது. இதே பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்தார். ஆனால் எந்த ஒரு முடிவையும் உடனே எடுக்கமாட்டார். பன்னீர்செல்வத்தை இரண்டாம் இடத்திற்கு தகுதியானவராக இருந்தாரே தவிர, முதல் இடத்திற்கு தகுதி அவரிடம் இல்லை. அதே போன்று முடிவெடுப்பதில் ஆளுமை அவரிடம் எதுவும் இருக்காது.
பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்தபோது, அவரை பார்க்க சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள் என அனைவரும் காத்திருப்பார்கள். அவர்களிடம் 10 நிமிடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று போய்விடுவார். இதே எடப்பாடியார் அமைச்சராக இருந்த பொழுதும் சரி, முதலமைச்சர் இருந்த போதும் சரி உடனடியாக அதற்கு தீர்வு காண்பார்.
ஜெயலலிதா இருக்கும்போது ஒரு வேலையை மற்றவர்களை பார்க்க வைத்து அதை தான் செய்தது போல அம்மாவிடம் பேர் வாங்கிக் கொள்வார். அவர் இருக்கும்போதே பன்னீர்செல்வத்தின் மீது கட்சியினர் நம்பிக்கை இழந்தனர். அவரது மறைவுக்குப் பின்பு இந்த ஆட்சி ஒரு மாதம் கூட தாங்காது என்று கூறினார்கள். ஆனால் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை எடப்பாடியார் செய்தார்.
அதுமட்டுமல்ல 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கவர்னரை சந்தித்தார்கள். உடனடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்து இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார். தினகரனை நம்பி சென்ற அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் பாதி பேர் கடனாளியாக உள்ளனர், பாதி பேர் கட்சியில் இல்லை, மீதி பேர் தி.மு.க.வில் சேர்ந்து விட்டார்கள்.
இன்றைக்கு தி.மு.க.வும், பன்னீர்செல்வம் உட்பட பலர் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதாக ஒரு தவறான பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள். கட்சி பலவீனமாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோபி, சிவகாசியில் தான் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லி கருணாநிதி அப்போது மத்திய அரசிடம் கூறி ஆட்சியை கலைத்தார். பின்னர் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். மறையும் வரை முதலமைச்சராக இருந்தார்.
அதேபோன்று 1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்த பின்பு கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று கூறினார்கள். ஆனால் 2001, 2011, 2016 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அதேபோல் இன்றைக்கு பழைய பல்லவியைதான் பாடி வருகிறார்கள். நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.