என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • அ.தி.மு.க.வைப்பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.
    • தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம்.

    * அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.

    * தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    * தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றார்.

    இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார். 

    • வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இதையொட்டி அவரது அதிரடி அரசியல் திட்டங்கள் பரபரப்பாகி வருகிறது.

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சி முதல் மாநாட்டில் ஆட்சியில் பங்கு மற்றும் ஊழல் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மீதும் அவர் பேசிய அதிரடி கருத்துகள் அரசியல் அரங்கையே அதிர வைத்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன், பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. கூட்டணியும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனும், தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடனும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிட்டன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணி 39.72 சதவீதமும் பெற்ற நிலையில் 5.66 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிவு ஏற்பட்டது. அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உடனும், பா.ஜ.க., ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

    எனவே வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியின் அரசியல் பார்வை விஜய் கட்சியை உன்னிப்பாக உற்று நோக்கி வந்தது.

    வருகிற தேர்தலில் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் அரசியல் செயல்பாடு அமைந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் திடீர் திருப்புமுனையாக அமைந்ததுடன் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகி இருக்கிறது. எனவே தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    4 முனை போட்டி யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி கனியை பறிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் தனது கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
    • மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.

    சென்னை:

    டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    * காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதாக அடிக்கடி செய்திகள் வெளியிடப்படுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மத்திய அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு துணை நிற்க கூடாது.

    * உச்சநீதிமன்ற தீர்ப்புபடி, முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தி, நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    * தமிழ்நாட்டில் நடந்த டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

    * தமிழ்நாட்டில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    * அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.

    * தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.

    முன்னதாக, பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் எனக்கூறுவது, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருகின்றனர். 

    • பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
    • சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

    பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சட்டசபைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "எல்லாம் நன்மைக்கே" என்று கூறினார். 

    • ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
    • பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் விமர்சனம்

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதனை எதிர்த்து போலீசார் ஐதராபாத் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது.எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும்.

    இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன்.

    ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதலமைச்சர்களை மாற்ற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது.இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்து விட்டது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும்.

    குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    • துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
    • தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    சட்டசபையில் கவர்னர் குறித்து யாரும் பேசக்கூடாது என நீங்கள் ஆரம்பத்தில் கூறினீர்கள். ஆனால் இப்போது ஒவ்வொருவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதாக சபாநாயகரை பார்த்து குற்றம் சாட்டினார்.

    அப்போது சபாநாயகர் கூறும்போது, எம்.எல்.ஏ.க்கள் இங்கு கோப்புகள் பற்றி பேசினார்கள். கவர்னரை தனிப்பட்ட முறையில் இங்கு பேசவில்லை என்றார்.

    இதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் பேசும்போது, குழந்தை தனமாக, சிறுபிள்ளைத்தனமான என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் கொண்டது என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், குழந்தை தனம் என்பது கள்ளம் கபடம் இல்லாத மனசுக்கு சொந்தக்காரர் என்று கூட அர்த்தம் உண்டு. இந்த தீர்மானங்கள் மீது தான் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். நாளைக்கு நீங்களே கூட கவர்னர் ஆகலாம் என்றார். (அப்போது சபையில் பலத்த சிரிப்பொலி நிலவியது).

    நயினார் நாகேந்திரன், பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை கவர்னரே நியமிக்கலாம் என்ற தீர்மானத்தை இதே சபையில் 1998-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரே கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் இப்போது அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'அப்போதெல்லாம் துணை வேந்தரை நியமிக்கும் போது அரசின் பரிசீலனைக்கு கொண்டுவந்து கலந்து பேசி தான் நியமித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனால் இந்த நிலை என்றார்.

    நயினார் நாகேந்திரன்:- துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    இவ்வாறு பேசியதும், அதற்கு அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி ஆகியோர் விரிவான விளக்கம் அளித்தனர். கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி அரசியல் செய்கிறார். எங்களை பொறுத்தவரை துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வேண்டும் என்றனர்.

    இதை ஏற்காத நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார். அவருடன் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளியேறினார்கள்.

    பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, 'தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது. அந்த பிரச்சனைகளை மூடி மறைக்க கவர்னர் விஷயத்தை இந்த அரசு கையில் எடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் தி.மு.க. அரசுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கருதி கவர்னரை பற்றி கூறுகிறார்கள்.

    எனவே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானங்களை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

    • மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
    • தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.

    அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.

    இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார். 

    • தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.

    தருமபுரி:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரியில் என் மனம் என் மக்கள் நடைப்பயணத்தை நேற்று மதியம் பாலக்கோட்டில் இருந்து தொடங்கி தொடர்ந்து பாப்பாரப்பட்டி பாரதமாதா ஆலயம், பென்னாகரம் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தருமபுரியில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து 4 ரோடு வரை உள்ள ஒரு கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோது மாவட்ட பொருளாளரும், நிகழ்ச்சி பொறுப்பாளருமான ஐஸ்வரியம் முருகன் அண்ணாமலை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    பின்னர் நடைபயணத்தை முடித்துவிட்டு பொதுமக்களிடத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    தருமபுரி சாதாரண மண் அல்ல. அதியமான் மன்னர்கள், அவ்வையார் வாழ்ந்த பகுதி. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி குறைந்த மாவட்டம்.

    இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று கடுமையான வேலை செய்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாதியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்.

    தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உழைப்பு, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் இருந்தாலும் தருமபுரி மாவட்டம் சாதி அரசியலால் வளர்ச்சியில் பின்னோக்கியே சென்று கொண்டுள்ளது.


    பிரதமர் மோடி நம்புவது விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என்ற 4 சாதிகளை மட்டும் தான். இதில் ஏழை என்ற நிலை இனிமேல் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி பாடுபட்டு வருகிறார்.

    தருமபுரி மாவட்டத்தின் உற்பத்தி திறனை 1.7 சதவீத வளர்ச்சியில் இருந்து 5 சதவீதமாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும் போது 5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாரத மாதா அனைவருக்கும் பொதுவானவர்.

    2014-ம் ஆண்டு இந்தியா உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028-ல் உலகின் 3-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். அது தான் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமையும்.

    2014-ம் ஆண்டு ரூ.86 ஆயிரமாக இருந்த தனிநபர் வருமானம் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆக உயர்ந்ததுள்ளது. தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.

    இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லை என சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஒரு நபருக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய 40 லிட்டர் குடிநீரில் 26 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பென்னாகரத்தில் நடைபெற்ற நடை பயணத்தில் பங்கேற்று பொதுமக்களிடையே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணை தலைவர் கே.பி. ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஐஸ்வரியம் முருகன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    • 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.
    • தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வந்து விட்டது. தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது.

    வருகிற 22-ந்தேதி அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மே மாதம் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்ற நிலையில் சற்று முன் கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தடவை 400 முதல் 450 தொகுதிகளுக்கு குறி வைத்து இருக்கிறது. அதாவது மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    இதற்காக 543 தொகுதிகளிலும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாரதிய ஜனதா வேட்பாளர் தேர்வை நடத்தி வருகிறது. 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.

    பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக அதாவது பலவீனமாக கருதப்படும் தொகுதிகள் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர். தமிழகத்தில் 36, ஆந்திராவில் 25, மராட்டியத்தில் 24, மேற்குவங்காளத்தில் 23, கேரளாவில் 20, உத்தரபிரதேசத்தில் 12, பீகாரில் 12, ஒடிசாவில் 12, தெலுங்கானாவில் 12 என 140 தொகுதிகள் மிக மிக பலவீனமான தொகுதிகளாக கணக்கெடுத்துள்ளனர்.

    மேலும் 20 தொகுதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு 160 தொகுதிகளை அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    வடமாநிலங்களில் மகர சங்கராந்தி வரை நல்ல காரியங்கள் எதையும் தொடங்கமாட்டார்கள். 15-ந்தேதி தை மாதம் பிறந்த பிறகுதான் அவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட தொடங்குவார்கள். எனவே பாரதிய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    குறிப்பாக 15-ந்தேதி முதல் 22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அதிரடியாக அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி 14-ந் தேதிக்குள் 2-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அறிவிக்கும் என்று பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    முதல் மற்றும் 2-வது வேட்பாளர் பட்டியலில் 70 முதல் 75 சதவீதம் வரை புதுமுக வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்றும் பாரதிய ஜனதா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழகத்திலும் வேட்பாளர் தேர்வு ஓசையின்றி நடப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு தெரியாமல் சில பட்டியலை மேலிடம் தயாரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவின் 2024-ம் ஆண்டு தேர்தல் வியூகங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    • காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது.
    • 100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது.

    பல்லடம்:

    தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம்புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-

    அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என ஆண்கள் சிந்திக்கிறார்கள். சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள். எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம். கஞ்சா நம் வீட்டுக்கு வீதிக்கு வரக்கூடாது.

    காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது. அதன் பிறகு யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் தாக்கத்தை காண்கிறோம். அணைகள் கட்டுவதற்கு இங்குள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை நாங்கள் செய்து காட்டுவோம் .100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது. குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம்.

    பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொடுக்க உங்கள் வீட்டுப்பிள்ளையாகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும்.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில அரசால் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் ஊருக்குள் அப்பார்ட்மெண்ட் கட்டி கொடுக்கப்படும். நிலம் இல்லை என்றால் இதுதான் வழி. பிரச்சனைகளை முடித்து கொடுக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கிறார்கள். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • ஈஸ்வரப்பா தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார்.
    • ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா. பாராளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ.க. சீட் கொடுத்தது.

    இதனால் அதிருப்தி அடைந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் சுயேட்சையாக ஷிமோகா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான ராகவேந்திராவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து, வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பாவை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

    நேற்று வேட்புமனுக்கள் திரும்பப்பெற கடைசி நாளாகும். இதையடுத்து எப்படியாவது கே.எஸ்.ஈஸ்வரப்பாவை வாபஸ் பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரம் காட்டினர். ஆனால் கடைசி நிமிடம் வரை அவர் போட்டியில் இருந்து விலகவில்லை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கான நேரமும் முடிந்துவிட்டதால் ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.

    இதற்கிடையே, பா.ஜ.க. மாநில ஒழுங்குமுறை குழுத்தலைவர் லிங்கராஜ் பாட்டீல் கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஷிமோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஈஸ்வரப்பா ஏற்படுத்தி உள்ளார். இது கட்சி ஒழுக்கத்தை மீறும் செயலாகும். எனவே அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஷிமோகா தொகுதியில் கட்சி சாராத வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எந்த வெளியேற்றத்திற்கும் நான் அஞ்சவில்லை. மேலும் நான் 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன். நான் எப்படியும் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு கடுமையாக போராடியவர்களில் நானும் ஒருவர் என தெரிவித்தார்.

    • தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக்.
    • விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    சென்னை:

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மயிலாப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க்கில் யோகா பயிற்சியை இப்பகுதி மக்களுடன் சேர்ந்து செய்வதற்காக பாஜக சார்பில் ஏற்பாடு செய்து இருந்தோம்.

    கட்சி நிர்வாகி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு யோகா பயிற்சிக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டனர். இன்று காலை வழக்கமாக நாகேஸ்வரராவ் பார்க்கில் பயிற்சி செய்பவர்களையும் வர விடாமல் பார்க்கை மூடி விட்டனர். மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கையாக இதை பார்க்கிறோம்.

    சர்வதேச யோகா தினத்தில் மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் மக்களுடன் சேர்ந்து யோகா செய்வதில் என்னவாகி விடப்போகிறது.

    தமிழக அரசு எதற்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டுமோ அதற்கு எல்லாம் கவனம் கொடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை. கள்ளச்சாராயம் விற்கும் கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் யோகா செய்யும் கட்சி நிர்வாகிகளை, சாதாரணமாக வரும் பொதுமக்களையும் பார்க்கை பூட்டி வைத்து தடை செய்யக்கூடியதுதான் இந்த அரசாங்கம் நிலைமை.

    உங்கள் தவறுகளை பேசும் எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து பார்க்கில் செய்யும் யோகா நிகழ்ச்சிகளை தடை செய்கிறீர்கள்.

    பா.ஜக. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் யோகா பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச யோகா தினத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் எத்தனையோ முயற்சி எடுத்து யோகா செய்யும் தன்னார்வலர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். யோகா பயிற்சியை மேற்கொள்ளும் மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    தமிழகத்தில் பெண்களும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இது எங்கு நடக்கிறது என்று பார்த்தால் குறிப்பாக, உடல் உழைப்பை சார்ந்து உள்ள சமுதாயத்தில் உடல் வலியை மறக்க, மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டு இந்த மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

    இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக், வறுமை இருக்கக்கூடிய மக்கள் இருக்கும் பகுதிகளில் ஆளும்கட்சிக்காரர்களின் துணையுடன் விலை குறைவாக இருக்கும் கள்ளச்சாராயம் ஆறாக போய்க்கொண்டிருக்கிறது.

    இது முதல் தடவை இல்லை. ஒரு வருடத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் மாநிலத்தின் முதல்வருக்கு தம்முடைய துறையின் மீது கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.

    விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    ஒவ்வொரு தெருவுக்கும் மதுக்கடைகளை திறந்துவைத்தும் கூட இன்று கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

    ×