search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 3- வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும்- அண்ணாமலை
    X

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 3- வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும்- அண்ணாமலை

    • தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.

    தருமபுரி:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரியில் என் மனம் என் மக்கள் நடைப்பயணத்தை நேற்று மதியம் பாலக்கோட்டில் இருந்து தொடங்கி தொடர்ந்து பாப்பாரப்பட்டி பாரதமாதா ஆலயம், பென்னாகரம் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தருமபுரியில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து 4 ரோடு வரை உள்ள ஒரு கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோது மாவட்ட பொருளாளரும், நிகழ்ச்சி பொறுப்பாளருமான ஐஸ்வரியம் முருகன் அண்ணாமலை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    பின்னர் நடைபயணத்தை முடித்துவிட்டு பொதுமக்களிடத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    தருமபுரி சாதாரண மண் அல்ல. அதியமான் மன்னர்கள், அவ்வையார் வாழ்ந்த பகுதி. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி குறைந்த மாவட்டம்.

    இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று கடுமையான வேலை செய்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாதியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்.

    தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உழைப்பு, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் இருந்தாலும் தருமபுரி மாவட்டம் சாதி அரசியலால் வளர்ச்சியில் பின்னோக்கியே சென்று கொண்டுள்ளது.


    பிரதமர் மோடி நம்புவது விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என்ற 4 சாதிகளை மட்டும் தான். இதில் ஏழை என்ற நிலை இனிமேல் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி பாடுபட்டு வருகிறார்.

    தருமபுரி மாவட்டத்தின் உற்பத்தி திறனை 1.7 சதவீத வளர்ச்சியில் இருந்து 5 சதவீதமாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும் போது 5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாரத மாதா அனைவருக்கும் பொதுவானவர்.

    2014-ம் ஆண்டு இந்தியா உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028-ல் உலகின் 3-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். அது தான் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமையும்.

    2014-ம் ஆண்டு ரூ.86 ஆயிரமாக இருந்த தனிநபர் வருமானம் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆக உயர்ந்ததுள்ளது. தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.

    இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லை என சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஒரு நபருக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய 40 லிட்டர் குடிநீரில் 26 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பென்னாகரத்தில் நடைபெற்ற நடை பயணத்தில் பங்கேற்று பொதுமக்களிடையே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணை தலைவர் கே.பி. ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஐஸ்வரியம் முருகன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×