என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MaFoi Pandiarajan"

    • பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
    • நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.

    சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

    * கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன?

    * தடை இருந்தால வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்.

    * பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.

    * போகிற போக்கில் மிதித்து தள்ளி விடுவேன்.

    * எனக்குள் ஓடுவது அ.தி.மு.க. ரத்தம். உன் உடலில் ஓடுவது என்ன ரத்தம்?

    * வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன்.

    * நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.

    * நான் இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை போட்டால் நான் வேடிக்கை பார்ப்பதா?

    * தன்னை குறுநில மன்னன் என விருதுநகரில் வந்த கூற முடியுமா? என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
    • எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

    விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

    இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

    கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி,

    பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

    இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு சந்தித்தார்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

    மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.
    • மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

    இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

    கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

    இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று (10.03.2025) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

    மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.
    • விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து, நேருவால் பாராளுமன்றத்திலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.

    தி.மு.க.வை எதிர்க்கும் திறமையோ, வீழ்த்துகிற திறமையோ அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம். அதன் வரலாறு, அவர்கள் தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும். பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை கூடத்தான் வேண்டும். குறைந்து வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க. மீது இருக்கிற வெறுப்பால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றியோ, யாரோடு கூட்டணி என்பது பற்றி எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவார். மாஃபா பாண்டியராஜன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தன் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt
    சென்னை:

    கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜனும் திமுக சார்பில் நாசரும் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டனர்.

    அந்த தேர்தலில் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் வழக்கு தொடர்ந்திருந்தார்.



    இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்திற்கு பின்னர் மாஃபா பாண்டியராஜன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt
    ×