search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual harrasement"

    • பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த கணியூர்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 58). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் பனியன் தொழிலாளி மாறனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    • பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளன.
    • திருப்பூர் கல்வியாளர்கள், பெற்றோர் ,மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பூர்,

    தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக மாணவிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் பிரச்சினையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவிகள் சில நேரங்களில் தங்கள் உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.

    புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளன.

    அதில் கல்வித்தகவல் மையம் எண் - 14417 'சைல்ட் லைன்' எனப்படும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் எண் - 1098 மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பாடப்புத்தகங்களின் பின்புற அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. இது திருப்பூர் கல்வியாளர்கள், பெற்றோர் ,மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்தி படங்களில் என்னுடன் நடித்த கதாநாயகர்கள் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதுபோல், நிஜத்திலும் இருக்கலாமே என்று அழைத்தாகவும் மல்லிகா ஷெராவத் குற்றம் சாட்டியுள்ளார். #MallikaSherawat
    ஹாலிவுட் நடிகைகள் போல் இந்திய நடிகைகளும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக புகார் கூறி வருகிறார்கள். ஒவ்வொரு நடிகையும் தான் சந்தித்த அனுபவங்கள், தொல்லைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். 

    இந்த நிலையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றி கூறியிருக்கிறார். மல்லிகா ஷெராவத் கூறியதாவது,

    ‘‘இந்தியில் மர்டர் படம் மூலம் பிரபலமானேன். அப்போது ஒரு வயதானவர் பிடியில் சிக்கி கஷ்டப்பட்டேன். எனக்கு உதவ யாருமே இல்லை. தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தேன். இந்தி படங்களில் என்னுடன் நடித்த கதாநாயகர்கள் பாலியல் தொல்லைகள் கொடுத்தனர். காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதுபோல், நிஜத்திலும் என்னுடன் இருக்கலாமே என்று அழைத்தார்கள். 



    நான் படுக்கைக்கு செல்ல மறுத்துவிட்டேன். இதனால் அவர்களுடைய படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். இயக்குனர்கள் சிலர் நள்ளிரவில் எனக்கு போன் செய்த சம்பவங்களும் நடந்து இருக்கிறது. நான் அவர்களுக்கு உடன்பட்டு இருந்தால் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்திருக்கும். 

    என்னால் அவர்கள் விருப்பத்துக்கு இணங்கி செல்ல முடியாது. எனக்கு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இருக்கிறது. படவாய்ப்புக்காக படுக்கையை பகிரமாட்டேன். கதாநாயகர்களும், இயக்குனர்களும் எனக்கு தொல்லை கொடுத்ததை வெளியே சொன்னால் பழியை என்மீது திருப்பி விடுவார்கள் என்ற பயம் இருந்தது. அதனால்தான் இதை முன்பே சொல்லவில்லை.’’

    இவ்வாறு கூறினார்.

    முன்னதாக சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலியல் தொல்லைக்கு எதிராக கூண்டுக்குள் தன்னை அடைத்துக் கொண்டு மல்லிகா ஷெராவத் நூதன போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #MallikaSherawat

    ×