என் மலர்
நீங்கள் தேடியது "100 பெண்கள் கொலை"
- கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
- விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என்று தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக்கூடு மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார்.
"ஆறாவது இடத்தில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன், மற்றொரு புதிய இடத்திலும் சில எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எச்சங்களும் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார். 13வது இடத்தில் இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- 35-க்கும் மேற்பட்ட இடங்களை புகார்தாரர் அடையாளம் காட்டினார்.
- முன்னதாக ஆறாவது இடத்தல் இருந்து சுமார் 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. ர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர வனப்பகுதியில் உடல்கள் புதைக்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களை புகார்தாரர் அடையாளம் காட்டினார்.
அவர் குறிப்பிட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் புலனாய்வுக் குழு, தடயவியல் குழுவுடன் ஆய்வு நடத்தி வருகிரறது.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) தேடுதல் பணியில் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ள காட்டுப் பகுதியில் புகார்தாரர் குறிப்பிட்ட 11வது இடத்திற்கு அருகில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. மூன்று அடி தூரம் தோண்டிய பிறகு, சேலையின் ஒரு பகுதி மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முன்னதாக கடந்த வாரம் தேடுதலின் மூன்றாவது நாளில், புகார்தாரர் குறிப்பிட்ட ஆறாவது இடத்தல் இருந்து சுமார் 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.
- 2 மண்டை ஓடுகள் கிடைத்தது. இதில் ஒரு மண்டை ஓடு ஆண் என்பது தெரியவந்தது.
- சிர்சி நிலைய ஆய்வாளரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினருமான மஞ்சுநாத கவுடா மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இது பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. கடந்த 26-ந் தேதி கர்நாடகா பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரணவ் மொகந்தி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
புகார்தாரரை தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக 35-க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். கடந்த 29-ந்தேதி குழி தோண்டி தேடுதல் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
5 இடங்களில் தோண்டியதில் பான் கார்டு, டெபிட் கார்டு மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 6-வது இடம் தோண்டும் பணி நடைபெற்றது. இதில் 2 மண்டை ஓடுகள் கிடைத்தது. இதில் ஒரு மண்டை ஓடு ஆண் என்பது தெரியவந்தது. இந்த எலும்புகள் மரபணு பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தர்மஸ்தலா வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஒருவர் மீது புகார்தாரரின் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
சிர்சி நிலைய ஆய்வாளரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினருமான மஞ்சுநாத கவுடா மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார்தாரரின் வழக்கறிஞர், இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத கவுடா சாட்சியான தனது கட்சிக்காரரை மிரட்டி புகாரை வாபஸ் பெற வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார்.
சாட்சியை மிரட்டிய மஞ்சுநாத கவுடா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே சிறப்பு விசாரணை குழு தலைவர் பிரணவ் மொகந்தியின் பெயர் மத்திய அரசு பணிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவரை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 5 இடங்களில் தோண்டியதில் பான் கார்டு, டெபிட் கார்டு மட்டுமே கிடைத்தது.
- இன்று காலை முதல் 7-வது இடம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இது பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. கடந்த 26-ந் தேதி கர்நாடகா பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரணவ் மொகந்தி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
புகார்தாரரை தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக 35-க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். கடந்த 29-ந்தேதி குழி தோண்டி தேடுதல் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
5 இடங்களில் தோண்டியதில் பான் கார்டு, டெபிட் கார்டு மட்டுமே கிடைத்தது. இவைகள் யாருடையது என விசாரித்ததில் பான் கார்டு கடந்த மார்ச் மாதம் இறந்த ஒருவருடையது. அந்த நபர் மஞ்சள் காமாலை காரணமாக அவரது கிராமத்தில் இறந்துவிட்டதாகவும், ரூபே டெபிட் கார்டு ஒரு பெண்ணுக்கு சொந்தமானது. அந்த பெண் நலமாக உள்ளார் என சிறப்பு விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நேற்று 6-வது இடம் தோண்டும் பணி நடைபெற்றது. இதில் 2 மண்டை ஓடுகள் கிடைத்தது. இதில் ஒரு மண்டை ஓடு ஆண் என்பது தெரியவந்தது. இந்த எலும்புகள் மரபணு பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று காலை முதல் 7-வது இடம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே சிறப்பு விசாரணை குழு தலைவர் பிரணவ் மொகந்தியின் பெயர் மத்திய அரசு பணிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவரை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மாநில அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
- சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டிஜிபி பிரணாப் குமார் மொஹந்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அண்மையில் பகீர் தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார்.
அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.சிறப்பு புலனாய்வு குழு
இந்த விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் ஊழியர் நேத்ராவதி நதி படித்துறைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சுட்டிக்காட்டிய இடங்களில் அவர் முன்னிலையில் அகழாய்வு பணிகளை புலனாய்வு குழு மேற்கொண்டது.
அவர் குறிப்பிட்ட முதல் 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் 6 வதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையில் இது முதல் தடயமாக மாறியுள்ளது.
அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் ஆதாரங்களை சிதைக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், தர்மஸ்தலாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டிஜிபி பிரணாப் குமார் மொஹந்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
- தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
- மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது உண்டு.
இந்தநிலையில் அந்த கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார்.
இதன் பேரில் கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 13-ந்தேதியன்று புகார்தாரர், பெல்தங்கடியில் உள்ள முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14-ந்தேதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.
புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீசார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கோவில் பகுதியில் மர்மமான முறைகளில் நடைபெற்ற மரணங்கள் குறித்த விசாரணை எஸ்ஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார்.
- கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது உண்டு.
இந்தநிலையில் அந்த கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார்.
இதன் பேரில் கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 13-ந்தேதியன்று புகார்தாரர், பெல்தங்கடியில் உள்ள முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14-ந்தேதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீசார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.






