என் மலர்tooltip icon

    இந்தியா

    தர்மஸ்தலா கொலைகள்: ஆணின் எலும்புக்கூடு, எலும்புகள் கண்டுபிடிப்பு - கர்நாடக உள்துறை அமைச்சர் அறிவிப்பு
    X

    தர்மஸ்தலா கொலைகள்: ஆணின் எலும்புக்கூடு, எலும்புகள் கண்டுபிடிப்பு - கர்நாடக உள்துறை அமைச்சர் அறிவிப்பு

    • கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
    • விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என்று தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

    இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக்கூடு மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார்.

    "ஆறாவது இடத்தில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன், மற்றொரு புதிய இடத்திலும் சில எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எச்சங்களும் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார். 13வது இடத்தில் இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

    விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×