என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன ஆர்பாட்டம்"

    • அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
    • அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    4.11.2025- செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சாக்கடை நீர் சாலைகளில் ஒடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது.
    • கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

    4.7.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி. இடம் : காந்தி பார்க் அருகில், கும்பகோணம்

    ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்குத் தேவைப்படும் எந்தவிதமான அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தாமல், அவசர அவசரமாக 2021-ஆம் ஆண்டு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

    ஏற்கெனவே, அதிக அளவு சொத்து வரியை செலுத்தி வந்த மக்களுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என்று அனைத்து வரிகளையும் உயர்த்திய இந்த விடியா திமுக மாடல் அரசு, பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை நிறைவேற்றி உள்ளனவா என்று கும்பகோணம் மக்கள் ஏமாற்று மாடல் ஸ்டாலின் அரசை கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

    பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. மாநகரம் முழுவதும் குப்பை கூளங்கள் அகற்றப்படுவதில்லை.

    வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறைந்த அளவே செயல்படும் அம்மா உணவகங்களை பராமரிப்பதற்கு போதிய நிதியை ஒதுக்காததால், அம்மா உணவகங்களை நம்பியுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல், பம்பிங்க் செக்ஷன் சரியாக செயல்படாமல், 80 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், வெறும் 30 நபர்கள் மட்டுமே பணிபுரிவதால், பராமரிப்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாக்கடை நீர் சாலைகளில் ஒடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது. கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    தாராசுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.

    கும்பகோணம் மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில், எந்தவிதமான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல், அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் கல்வி நிதி எங்கே செல்கிறது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்நிலையில், மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், கும்பகோணம் மாநகராட்சியில் வசித்து வரும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும், சாலைகளை புதுப்பிக்காமலும், பாதாள சாக்கடைகளை பராமரிக்காமலும் பொதுமக்களை மிகுந்த சிரமப்படுத்தும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 4.7.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான சு. மனோகரன் அவர்கள் தலைமையிலும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சு.மு. பாரதிமோகன், கும்பகோணம்

    மாநகரக் கழகச் செயலாளர் திரு. ராம. ராமநாதன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. ரதிமீனா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட 'மா' பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளின் துயரத்தை துச்சமென நினைக்கும் விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ஜூன் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 'மா' விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 வாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.

    இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    'மா' உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சார், செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி), கான, மங்கனப்பள்ளி, கிரேப் மல்கோவா, இமாம்சந்த் காணாப்பாடி குமேனியா, சேலம் குண்டு, நாட்டுக்காய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகால நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் அரசால், தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதும், நெல்லானாலும், கரும்பானாலும், பயிர் வகைகளானாலும், மஞ்சள் ஆனாலும் உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தையே அடைந்து வருகின்றனர்.

    பயிர்க் காப்பீடு முதல் வறட்சி மற்றும் வெள்ள காலங்களில் உரிய நிவாரணம் அளிப்பது வரை, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இந்த அரசு விவசாயிகளை வாட்டி வதைத்து வருகின்றது.

    உழவன் கணக்குப் பார்த்தால். உழக்குக்கூட மிஞ்சாது என்பதையும், 'விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது' என்பதையும் மறந்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட "மா" விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 15-ஐ நிர்ணயித்து, விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; தனியார் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-க்கு மேல் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 1 கிலோ மாம்பழத்திற்கு ரூ. 5 மட்டுமே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள் என்றும், எனவே, 'மா' விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தும், இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    எனவே, தென் மாவட்ட 'மா' விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில், 20.6.2025 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், நத்தம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளகும். திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னான் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A. அவர்கள் தலைமையிலும்; கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கள் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.LA.அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு. V. மருதராஜ், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திருமதி S. தேன்மொழி, MLA., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. R.V.N. கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'மா விவசாயிகள்', வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம்.
    • அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன போராட்டம்.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது, அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன கோஷமிட்டனர்.

    • தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மொட்டை.
    • தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    5 மீனவர்கள் மொட்டை அடித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

    • தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.

    எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜகவின் தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்த சந்திப்பு குறித்து பேசும்போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுகாலம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பற்றி இழிப்பு பேசுவதற்கு எச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல் பிரிட்டிஷ்ல் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரன் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பாஜகவினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.

    இந்திய ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த இந்தியா காந்தி, பார ரத்னா ராஜீவ் காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச்.ராஜா கொச்சைப்படுத்தி பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமந்தனான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழினத் துரோகி எச்.ராஜாவின் பேச்சை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக்கெள்கிறேன்.

    இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல்காந்தி அவர்களை எவரும் இழித்து பேசுவதை அனுமதிக்க முடியாது.

    இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியுள்ள எச்.ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில், தமிழகம் முழுவதும் நாளை (17.092024) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள முக்கிய நகரங்களில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து வரும் பிப்ரவரி 25ம் தேதி அன்று மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, கடந்த 21.02.2025 அன்று நடைபெற்ற மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் முதற்கட்ட போராட்டமாக, மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, வரும் 25.02.2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் "பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.

    தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்கின்ற வகையில், நமது கண்டனத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு உணர்த்தும் வகையிலும், ஒன்றிய அரசை கண்டித்தும், ஒன்றிய அரசின் அலுவலகங்களின் முன்பு பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தை, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு- தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி ஒருங்கிணைந்து, மாணவர் அணியின் நிர்வாகிகள், தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பெருந்திரளாக பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    கழக மாவட்டத்தில் உள்ள கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகளோ, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் உள்ள மாணவர் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளையோ சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுகிற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, சர்வாதிகார போக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிற்கு நிதி தராமல் கல்வியை சிதைக்கின்ற படுபாதக செயலில் ஈடுபட்டு வருவதையும், தொன்மை வாய்ந்த நம் தமிழ்மொழியை அழிக்க வேண்டுமென்ற பா.ஜ.க.வின் தீய நோக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×