என் மலர்
நீங்கள் தேடியது "மாம்பழ விவகாரம்"
- தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?
- போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.
விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் திமுக அரசு, விளைவித்த பழங்களுக்கு விலையின்றி தவிக்கும் "மா" விவசாயிகளின் நலனை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தித்திக்கும் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் கிடைக்கும் என மகிழ்ந்திருந்த விவசாயிகளை உரிய விலையின்றி ஏமாற்றத்தை அளித்து வதைத்து வருகிறது திமுக அரசு.
தெருவில் இறங்கி விவசாயிகள் போராடி வரும் வேளையில், மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொள்முதல் செய்ய ஆணையிட்டு பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட்டதாய் முழங்கி வருகிறது திமுக அரசு.
ஆனால், மொந்த வணிகர்கள் இரகசிய கூட்டணி அமைத்து கொள்முதல் விலையைக் குறைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கும் அடிப்படை புகாரைக் கூட திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு புளகாங்கிதம் அடையும் திமுக அரசு, ஆந்திராவில் வழங்குவது போல தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?
காய், கனி சார்ந்த தோட்டக்கலை விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க முயற்சி எடுக்கப்படும் எனும் 2021 நேர்தல் வாக்குறுதி எண் 35-ஐ நான்காண்டுகளாகியும் நிறைவேற்றாது கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் சாதனையா?
தமிழகத்தில் ஒவ்வொரு போகத்தின் போதும், போதிய விலை இல்லாததால் தக்காளியில் துவங்கி மாம்பழம் வரை சிரமப்பட்டு கண்ணுங்கருத்துமாக விளைவித்த பழங்களைத் தெருவில் கொட்டி போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை தேவையான குளிர்பதனக் கிடங்குகளையோ, போதிய உணவுத் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளையோ நிறுவாமல் விவசாயிகளை வதைப்பது தான் உழவர் நலனா?
"தோளில் பச்சைத் துண்டு அணியும் போலி விவசாயி நான் அல்ல" என்று கூறும் மாண்புமிகு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், மானியத்துடன் கூடிய மாம்பழம் கொள்முதல் விலையை ரூ. 20/கி ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
- முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.
தென் மாவட்ட 'மா' பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளின் துயரத்தை துச்சமென நினைக்கும் விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ஜூன் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 'மா' விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 வாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.
இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
'மா' உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சார், செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி), கான, மங்கனப்பள்ளி, கிரேப் மல்கோவா, இமாம்சந்த் காணாப்பாடி குமேனியா, சேலம் குண்டு, நாட்டுக்காய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகால நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் அரசால், தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதும், நெல்லானாலும், கரும்பானாலும், பயிர் வகைகளானாலும், மஞ்சள் ஆனாலும் உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தையே அடைந்து வருகின்றனர்.
பயிர்க் காப்பீடு முதல் வறட்சி மற்றும் வெள்ள காலங்களில் உரிய நிவாரணம் அளிப்பது வரை, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இந்த அரசு விவசாயிகளை வாட்டி வதைத்து வருகின்றது.
உழவன் கணக்குப் பார்த்தால். உழக்குக்கூட மிஞ்சாது என்பதையும், 'விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது' என்பதையும் மறந்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.
தென் மாவட்ட "மா" விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 15-ஐ நிர்ணயித்து, விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; தனியார் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-க்கு மேல் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 1 கிலோ மாம்பழத்திற்கு ரூ. 5 மட்டுமே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள் என்றும், எனவே, 'மா' விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தும், இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தென் மாவட்ட 'மா' விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில், 20.6.2025 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், நத்தம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளகும். திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னான் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A. அவர்கள் தலைமையிலும்; கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கள் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.LA.அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு. V. மருதராஜ், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திருமதி S. தேன்மொழி, MLA., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. R.V.N. கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'மா விவசாயிகள்', வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.
- மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட 7 எம்.பி.க்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் மாம்பழம் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் நட்புறவை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

சமீபத்தில் பதவி விலகிய வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனா தான் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தவறாமல் மாம்பழம் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் எம்.பி.க்கள் கபில் சிபல், சசிதரூர், சமாஜ்வாடியை சேர்ந்த மொஹிப்புல்லா நத்வி, ஜியா உர் ரஹ்மான் பார்க், ராம்பூர் இக்ரா ஹசன், காஜிபூர் அப்சல் அன்சாரி ஆகிய 7 பேருக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.

இதுகுறித்து மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ரேபரேலியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாகிஸ்தானுடன் 'நபக்' (தூய்மையற்ற) தொடர்பு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து வரும் மாம்பழங்கள் தனக்கு பிடிக்காது என்று சில காலத்திற்கு முன்பு ராகுல் காந்தி கூறினார்.
பாகிஸ்தான் தூதரகம் தற்போது ராகுல்காந்திக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளது. அவர் விரும்பும் மற்ற விஷயங்களை அவர் சொல்ல வேண்டும் என்றார்.

இதேபோல் பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் கூறியுள்ள குற்றச்சாட்டில், இதயம் இருக்கும் இடத்தில் இருந்து மாம்பழங்களை பெறுகிறார்கள். அவருக்கு (ராகுல்காந்தி) உத்தர பிரதேசத்தின் மாம்பழங்கள் பிடிக்காது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் மாம்பழங்களால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது என்றார்.
7 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் தூதரகம் ஏன் மாம்பழம் அனுப்புகிறது என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அமித்மால்வியா கேள்வி கேட்டுள்ளார்.
பா.ஜ.க. மந்திரி, எம்.பி.க்கள் குற்றச்சாட்டால் மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.






