search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP govt"

    மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். #Budget2019 #ThambiDurai
    புதுடெல்லி:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

    அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

    அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 6000 ரூபாய் உதவித்தொகை போதாது. குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை?



    மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய  நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

    புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.

    பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். #Budget2019 #ThambiDurai
    ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி அழித்து விட்டதாக சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். #institutionsdestroyed #BJPgovt #ChandrababuNaidu
    சென்னை:

    சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு,  இங்குள்ள தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இயக்கி வருகிறது. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. அமலாக்கத்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளை எல்லாம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அழித்துவிட்டது. நாட்டின் கூட்டாட்சி தத்துவமும் அழிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    ஊழலை ஒழிக்க வேண்டிய சி.பி.ஐ. அமைப்பு தற்போது ஊழலில் சிக்கியுள்ளது. அந்த அமைப்பின் இயக்குநர் ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    இங்கு இருக்கும் தமிழக மக்களை பார்த்து நான் கேட்கிறேன். மத்தியில் தற்போதுள்ள அரசு தொடர வேண்டும் என நினைக்கிறீர்களா? இந்த ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

    நாகலாந்து, தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை.  ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டு கொண்டார். அப்போதுதான் கலைஞரின் ஆன்மா நிம்மதியாக சாந்தியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். #institutionsdestroyed #BJPgovt #ChandrababuNaidu
    மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீமானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #NoConfidenceMotion #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக அறிவித்த சபாநாயகர், இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை (நாளை) விவாதம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.



    இந்நிலையில், பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவை அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க.வும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நாளை முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும். எனவே, நாளை சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளன. இதற்காக பிற கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகின்றன. #NoConfidenceMotion #MKStalin
    ×