என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp govt"

    • ஆதார் கார்டு திட்டத்தை பாஜக முதலில் எதிர்த்தது. பின்னர் ஏற்றுக்கொண்டது.
    • ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தோல்வியின் சின்னம் என்றது. அது கொரோனா காலத்தில் முதுகெலும்பாக விளங்கியது.

    நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை.

    பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்த்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ளன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் "நல்ல திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முதலில் எதிர்க்க வேண்டும். அதை அவமதிக்க வேண்டும். பின்னர் மக்களிடம் இருந்து வரும் அழுத்தம் காரணமாகவும், உண்மை நிலவரத்தை அறிந்த பின்னரும் அதை ஏற்றுக்குளொள்வது பாஜக அரசின் வழக்கம்.

    ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முதலில் பிரதமர் மோடி தோல்வியின் சின்னம் என்றார். கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு முதுகெலும்பாக விளங்கியது. பட்ஜெட்டில் அதற்கான தொகையை உயர்த்தியது. மேலும், நற்பெயரை எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

    அதேபோல்தான் ஆதார் கார்டு திட்டத்தையும் முதலில் எதிர்த்தது. தனிநபர் ரகசியத்திற்கு மிரட்டல் எனத் தெரிவித்தது. பின்னர் ஆட்சிக்கு வந்தபோது அதே ஆதார் கார்டு அனைத்து திட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்தது" என்றார்.

    • 2000 ருபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வருடம் அறிவித்தது.
    • மே 19, 2023 நிலவரப்படி 97.82 சதவீத 2000 ருபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது

    இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2018-19 காலகட்டத்தில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திக்கொண்டது.

     

    இதனைத்தொடர்ந்து புழக்கத்தில் இருந்த 2000 ருபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வருடம் அறிவித்தது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. முழுதாக திரும்பபெறப்படும் வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

    இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று (ஜூன் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில்,மே 19, 2023 நிலவரப்படி 97.82 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுஎன்றும் மே 31, 2024 நிலவரப்படி ரூ. 3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.7,755 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வாங்கியின் 19 கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம். 

    • அரியானா மாநிலத்தில் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
    • தற்போதைய முதல்வராக இருக்கும் நயாப் சிங் சயானியே மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. முதலில் காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரம் கழித்து பா.ஜ.க முன்னிலை விகித்து இறுதியாக 90 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

    பெரும்பாலான தொகுதியில் இழுபறி நிலவியது. முன்னணி வகித்தவர்கள் பின்தங்குவதும், பின் தங்கியவர்கள் முன்னணி வகிப்பதுமாக இருந்தது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாக்குகள் வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது.

    இறுதியாக, அரியானா மாநிலத்தில் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தில் பாஜக அரசின் பதவி ஏற்பு விழா அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய முதல்வராக இருக்கும் நயாப் சிங் சயானியே மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள முக்கிய நகரங்களில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து வரும் பிப்ரவரி 25ம் தேதி அன்று மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, கடந்த 21.02.2025 அன்று நடைபெற்ற மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் முதற்கட்ட போராட்டமாக, மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, வரும் 25.02.2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் "பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.

    தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்கின்ற வகையில், நமது கண்டனத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு உணர்த்தும் வகையிலும், ஒன்றிய அரசை கண்டித்தும், ஒன்றிய அரசின் அலுவலகங்களின் முன்பு பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தை, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு- தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி ஒருங்கிணைந்து, மாணவர் அணியின் நிர்வாகிகள், தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பெருந்திரளாக பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    கழக மாவட்டத்தில் உள்ள கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகளோ, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் உள்ள மாணவர் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளையோ சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுகிற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, சர்வாதிகார போக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிற்கு நிதி தராமல் கல்வியை சிதைக்கின்ற படுபாதக செயலில் ஈடுபட்டு வருவதையும், தொன்மை வாய்ந்த நம் தமிழ்மொழியை அழிக்க வேண்டுமென்ற பா.ஜ.க.வின் தீய நோக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். #Budget2019 #ThambiDurai
    புதுடெல்லி:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

    அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

    அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 6000 ரூபாய் உதவித்தொகை போதாது. குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை?



    மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய  நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

    புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.

    பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். #Budget2019 #ThambiDurai
    ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி அழித்து விட்டதாக சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். #institutionsdestroyed #BJPgovt #ChandrababuNaidu
    சென்னை:

    சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு,  இங்குள்ள தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இயக்கி வருகிறது. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. அமலாக்கத்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளை எல்லாம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அழித்துவிட்டது. நாட்டின் கூட்டாட்சி தத்துவமும் அழிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    ஊழலை ஒழிக்க வேண்டிய சி.பி.ஐ. அமைப்பு தற்போது ஊழலில் சிக்கியுள்ளது. அந்த அமைப்பின் இயக்குநர் ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    இங்கு இருக்கும் தமிழக மக்களை பார்த்து நான் கேட்கிறேன். மத்தியில் தற்போதுள்ள அரசு தொடர வேண்டும் என நினைக்கிறீர்களா? இந்த ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

    நாகலாந்து, தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை.  ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டு கொண்டார். அப்போதுதான் கலைஞரின் ஆன்மா நிம்மதியாக சாந்தியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். #institutionsdestroyed #BJPgovt #ChandrababuNaidu
    மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீமானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #NoConfidenceMotion #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக அறிவித்த சபாநாயகர், இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை (நாளை) விவாதம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.



    இந்நிலையில், பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவை அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க.வும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நாளை முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும். எனவே, நாளை சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளன. இதற்காக பிற கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகின்றன. #NoConfidenceMotion #MKStalin
    ×