என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்"

    மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீமானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #NoConfidenceMotion #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக அறிவித்த சபாநாயகர், இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை (நாளை) விவாதம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.



    இந்நிலையில், பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவை அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க.வும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நாளை முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும். எனவே, நாளை சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளன. இதற்காக பிற கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகின்றன. #NoConfidenceMotion #MKStalin
    மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்படி தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    புதுடெல்லி :

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதம் வரும் 20-ம் தேதி  காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா கே.நாராயன ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் இன்று மற்றும் நாளை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அப்போது, மத்திய அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    ×