என் மலர்
நீங்கள் தேடியது "Hindi imposition"
- பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
- மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின்கீழ் , மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை 3-வது கட்டாய மொழியாக மாற்ற அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.
இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இணைந்து மும்பையில் நேற்று வெற்றி பேரணி நடத்தினர்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே மராத்தி மொழியை திணிக்க மராட்டியர் யாராவது முயற்சி செய்துள்ளார்களா?
தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் இந்தியை திணிக்க முயற்சி செய்து பாருங்கள்!. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்தினால், எங்கள் சக்தியைக் நாங்கள் காட்டுவோம்" என்று தெரிவித்தார்.
- இந்தி பேசுபவர்களை நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர்.
- நான் மராத்தி கற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இதனிடையே மகாராஷ்டிராவில் மராத்தி பேசாமல் இந்தி பேசுபவர்களை நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் சுஷில் கெடியா என்பவர் தனது எக்ஸ் பதிவில், "நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறேன். எனக்கு மராத்தி தெரியாது. நான் மராத்தி கற்றுக்கொள்ளவும் மாட்டேன்" என்று ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
மராத்தி கற்க மாட்டேன் என்று கூறிய தொழிலதிபர் சுஷில் கெடியாவின் கெடியோனோமிக்ஸ் அலுவலகத்தை மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தொண்டர்கள் சூறையாடினர்.
அலுவலகத்தின் மீது கற்களை வீசி நவநிர்மான் சேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஜெய் மகாராஷ்டிரா என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனையடுத்து, மராத்தி கற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்கு தொழிலதிபர் சுஷில் கெடியா தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
- நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள்.
- குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று தெரிவித்தார்.
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
- இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது. இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது?
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தானுக்கு மூன்றாவது மொழி என்ன? இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். இந்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஏன் உதவவில்லை.
இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது. இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது? 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ஆனாலும், நாம் இந்தி கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஏன்?.
மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
- மகாராஷ்டிராவில் பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பாஜக அரசு பணிந்தது.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.
இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய அரசு அறிவித்திருந்தது.
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் மராட்டிய அரசு பணிந்துள்ளது..
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், "மூன்றாம் மொழியாக இந்தியை திணிக்கும் முடிவு ரத்து. மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு. இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெறாது" என்று தெரிவித்துள்ளார்
- தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
- இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 5 ஆம் தேதி, கிர்கான் சௌபட்டியில் இருந்து ஆசாத் மைதானம் வரை நடைபெறும் பேரணியில் இருவரும் பங்கேற்பார்கள்.
இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜும் உத்தவும் இணைகிறார்கள். சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மாநிலத்திற்காக கைகோர்ப்பதாக அண்மையில் சூசகமாக தெரிவித்தனர்.
இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- இந்திய ரெயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது.
ஒன்றிய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு திமுக எம்.பி. ஆ.ராசா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரெயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை கொண்ட #உதகமண்டலம் ரெயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன. உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது.
உதகை ரயில் நிலையத்தில் இந்தி மொழியை விளம்பரப்படுத்தும் வகையில் மற்றும் பாரதியாரின் வாசகத்தை இந்து மகாசபை நிறுவனர் மதன் மோகன் மாளவியா எழுதியதாக வைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்றுங்கள் என கூறினார்..
- மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள மாநில அரசு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தி கட்டாயமாக இருக்காது என்றும் பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், "ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் குறைந்தது 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் கற்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட மொழிக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார் அல்லது அந்த மொழி ஆன்லைனில் கற்பிக்கப்படும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் மராத்தி மொழி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிரா அரசு ஒன்றாம் வகுப்பிலிருந்து இந்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த முயன்றபோது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22 அன்று, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதா பூசே, இந்தி கட்டாயமாக்கப்படாது என்று கூறியிருந்த நிலையில் தற்போதைய உத்தரவு வந்துள்ளது.
- மராத்தி, ஆங்கில மீடியம் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயம்.
- இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
மும்பை:
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3-வதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்தது.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3-வது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1-ம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2, 3, 4 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா?
- பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் முடிவை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முதலமைசசர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியை 3வது மொழியாக திணிக்க முயன்ற மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸூக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கட்டாயம் என பட்னாவிஸ் கூறுகிறார்.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக எழுந்த கண்டனத்தின் வெளிபாடு தான் இது.
மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா? பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழியை கற்பது கட்டாயமல்ல என மத்திய அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்குமா ?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அநீதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது.
- தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தோம் என்று முதல்வர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதாக பாஜக கூட்டணி அரசு அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஏற்கனவே உள்ள மராத்தி, ஆங்கிலத்துடன், இந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை இந்தி திணிப்பு என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தப்படுவதை மகாராஷ்டிரா அரசின் மொழி ஆலோசனைக் குழு வெளிப்படையாக எதிர்த்துள்ளது.
மேலும் தனது கடிதத்தில், இந்த நடவடிக்கை கல்வி ரீதியாக நியாயமானது அல்ல. மாணவர்களின் உளவியலுக்கு ஏற்றது அல்ல என்று தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது. அதற்குப் பதிலாக, மராத்தி உட்பட இரண்டு மொழிகள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
SCERT (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு குழுவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களில் பேராசிரியர்கள் மற்றும் மொழியியல் மற்றும் மொழி அறிவியலில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள் இருவரும் உள்ளனர்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குழுவின் கடிதத்தைப் படிக்கவில்லை என்றும் இந்தி, மராத்திக்கு மாற்று அல்ல என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மராத்தி கட்டாயம். ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வது கட்டாயமாகும், அவற்றில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
எனவே அமைச்சர் தலைமையிலான மொழிக் குழு தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, இந்தி கற்பிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை எங்களிடம் இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தனர்" என்று தெரிவித்தார்.