என் மலர்
இந்தியா

அறிவியல், நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித் ஷா
- மற்ற மொழியும் இந்தியும் இணைந்து செழிப்படையும் என்பதற்கு குஜராத்தி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது
- தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை உயர்த்தினர்.
இந்தி மற்ற இந்திய மொழிகளின் எதிரி அல்ல நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இந்தி திவாஸ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, இந்தி மற்ற இந்திய மொழிகளில் எதிரி கிடையாது என்று நான் எப்போதும் கூறுவேன்.
இந்தி மற்ற மொழிகளில் உற்ற நண்பன், அவற்றுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இருக்க இல்லை. இந்தி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.
குஜராத்தை எடுத்துக்கொண்டால் இங்கு மாநில மொழி குஜராத்தி. ஆனால் தொடக்கம் முதல் தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், கேஎம் முன்ஷி ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை ஊக்குவித்தனர். இந்தி மற்றும் குஜராத்தி இணைந்திருக்கும் குஜராத், இரு மொழிகளின் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இந்தி வெறும் பேச்சு மொழி அல்ல. அது அறிவியல், தொழில்நுட்பம், நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய மொழிகளில் செய்யப்படும்போது, பொதுமக்களுடனான தொடர்பு தானாகவே வளரும்" என்றார்." என்று தெரிவித்தார்.






