என் மலர்
நீங்கள் தேடியது "மும்பை"
- மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
- தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் என்று அண்ணாமலையை ராஜ் தாக்கரே விமர்சித்தார்.
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிலையில், ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே Ink அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். Ink அடித்துப் பாருங்கள். மிரட்டல், உகுட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். மும்பை உலகத்தின் தலைநகர் என்று சொல்லும் போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று தெரிவித்தார்.
- மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு?
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழரை பால்தாக்கரே விரட்டி அடித்தார் என்று ராஜ் தாக்கரே பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழர்களை இழிவாக பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
- மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது
- மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியை யாரேனும் திணிக்க முயன்றால், அவர்களுக்கு உதை விழும். மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது. மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது மராத்தியர்களுக்கான கடைசி தேர்தல். இன்று இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் முடித்துவிடுவீர்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிராவுக்காக ஒன்றுபடுங்கள் இந்தி உங்களின் சொந்த மொழி அல்ல என்பதை, உ.பி, பீகார் மாநில மக்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.
- சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
- கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 7 பள்ளி சிறுமிகளுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையின் தகிசர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையாட வரும் சிறுமிகளை இலக்கு வைத்து இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 7 சிறுமிகளும் 6 முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள். இந்த நபர் சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் அந்த நபர் மேலும் 6 சிறுமிகளுக்கு இதேபோன்று தொல்லை கொடுத்தது அம்பலமானது.
போலீசார் அந்த நபரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.
அங்கு, 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அங்குஷ் பரத்வாஜ் என்ற யூடியூபர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே தங்கியிருந்த பிரமோத் குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர், யூடியூபர் இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தச் செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான சப் இன்ஸ்பெக்டர் பிரமோத் குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
- சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது.
மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 இடங்களை கோரிய ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 90 இடங்களை ஒதுக்கியுள்ளது பாஜக.
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்கீழ் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், பாஜக தலைவர் அமித் சதம் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது. இதற்கு சிவசேனா உடன்படாத நிலையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தற்போது எண்ணிக்கை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜ.க தற்போது 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பாதசாரிகள், பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.
மும்பையில் நேற்று இரவு 10 மணியளவில் மாநகராட்சிப் பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையின் பாண்டூப் (Bhandup) ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஸ்டேஷன் சாலையில், ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மாநகர் அரசுப்பேருந்து (BEST bus) அங்கு நின்றிருந்த பாதசாரிகள் மற்றும் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.
இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். காயமடைந்த 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்
- டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த அரியானா 20 ஓவரில் 234 ரன்கள் குவித்தது.
புனே:
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று புனேயில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, அரியானாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த அரியானா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித்குமார் 89 ரன்னும், நிஷாந்த் சிந்து 63 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 235 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 17.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் 50 பந்தில் ஒரு சிக்சர், 16 பவுண்டரி உள்பட 101 ரன்னும், சர்ப்ராஸ் கான் 64 ரன்னும் குவித்தனர்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு அணி விரட்டிப் பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மும்பை அணி தான் ஆடிய இரு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது.
- தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார்.
- கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் கொல்கத்தா சென்ற மெஸ்ஸி, அங்கு தன்னுடைய 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ரசிகர்களை சால்ட் லேக் மைதானத்தில் சந்தித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறினார். இதன்பின் ஹைதராபாத் வந்த மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி ஆடினார். அதேபோல் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு கைகளை காட்டினார். இந்த நிலையில் இன்று மும்பையில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். வான்கடே மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது மெஸ்ஸியும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துக் கொண்டனர். மெஸ்ஸியுடன் சில நிமிடங்கள் உரையாடிய சச்சின் தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். அதனை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட மெஸ்ஸி, சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி கூறினார். இதன்பின் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 10 ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடினார். அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்.
இதனால் ஜெர்சி 10ஐ சச்சின் பரிசாக அளித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






