மும்பையில் வெளிநாட்டு பெண்ணிடம் 400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 வசூலித்த டாக்சி ஓட்டுநர் கைது

விமான நிலையத்தில் இருந்து அருகிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்ல டாக்சியில் ஏறியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் தனது கசப்பான அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வீடியோவாகப் பதிவிட்டார்.
மும்பையில் வெளிநாட்டு பெண்ணிடம் 400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 வசூலித்த டாக்சி ஓட்டுநர் கைது
Published on

மும்பையில் அமெரிக்க பெண்ணிடம் 400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 வசூல் செய்த டாக்சி டிரைவர் கைது செய்யப்ட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா அரியானோ என்ற அமெரிக்கப் பெண், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வேலை விஷயமாக மும்பை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து அருகிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்ல டாக்சியில் ஏறியுள்ளார்.

ஹோட்டல் மிக அருகிலேயே 400 மீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், டிரைவர் அந்தப் பெண்ணை அந்தேரி பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் சுற்றிக் காட்டி, நீண்ட தூரம் அழைத்துச் செல்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இறுதியில் ஹோட்டலில் இறக்கிவிட்ட போது, கட்டணமாக ரூ.18,000 (200 டாலர்) கேட்டு மிரட்டிப் பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் தனது கசப்பான அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வீடியோவாகப் பதிவிட்டார்.

அதில் அந்த டாக்ஸியின் பதிவு எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

எனவே இந்த பதிவை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். டாக்ஸி எண்ணை வைத்துத் தேடியதில், சஹார் கிராமத்தைச் சேர்ந்த தேஷ்ராஜ் யாதவ் (50) என்ற டிரைவர் பிடிபட்டார்.

அவர் பயன்படுத்திய டாக்சி பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com