என் மலர்
நீங்கள் தேடியது "Aaditya Thackeray"
- அண்ணாமலை டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர்.
- மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா?
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இதனையடுத்து அண்ணாமலைக்கு எதிராக பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்... மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர், இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
அண்ணாமலையின் கருத்து மகாராஷ்டிராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "அண்ணாமலைக்கு சரியாக இந்தி பேச வராது. அவரின் கருத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம். அதேபோல அண்ணாமலை மகாராஷ்டிராவை சேர்ந்தவரும் அல்ல. அவர் பாஜகவின் தேசிய தலைவரும் அல்ல. ஆகவே அவருடைய கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதம் செய்யாதீர்கள்" என்று தெரிவித்தார்.
- மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
- தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் என்று அண்ணாமலையை ராஜ் தாக்கரே விமர்சித்தார்
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிலையில், ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே Ink அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். Ink அடித்துப் பாருங்கள். மிரட்டல், உகுட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். மும்பை உலகத்தின் தலைநகர் என்று சொல்லும் போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு எதிராக ராஜ் தாக்கரே தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்... மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர், இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
- மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்தவர்களில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
- ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்தபோது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.
படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விபத்துக்கு மத்திய ரெயில் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா (UBT) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
ரெயில் மந்திரி (அஷ்வினி வைஷ்ணவ்) ரீல் மந்திரியாகியுள்ளார். கடந்த 2 முதல் 3 வருடங்களாக பயங்கரமான பல ரெயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்தவொரு பொறுப்பையும் ஏற்ப ஒருவர் கூட முன்வரவில்லை. ரெயில்வே துறை மற்றும் ரெயில்வே அமைச்சர் மட்டுமு இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு. இந்திய மக்கள் ரெயில் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் பல முறை வற்புறத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை கடந்து செல்கிறார்.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் என கடிதம்.
- பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது.
ஜூன் 7ஆம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விளைபொருள் சந்தை குழுக்களிடம், கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது. கொலை செய்தல், அவற்றை கொண்டு செல்லுதல், விற்பனை மற்றும் கொள்முதல் செய்தல், சேமித்து வைப்பது சட்ட விரோதமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் ஆதித்யா தாக்கரே, அரசின் வேலை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பது. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இதை சேமிக்க அல்லது அதை சேமிக்க ஏன் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் பண்டிகையை கொண்டாடுறீங்க. நான் ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர். தண்ணீர் அல்லது பசுமையை சேமிக்க எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். இது அரசு வேலையை கிடையாது. தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்றுவதுதான் அரசுடைய வேலை.
தண்ணீர் வீட்டிற்குள் புகுந்தால், அதன்பின் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என விசாரிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதுதான் அரசாங்கத்தின் வேலை. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது அல்ல.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- மும்பையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அணை கட்ட பரிந்துரை.
- அணை கட்டுவதற்காக 4 லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பைக்கு குடிநீர் வழங்கும் வகையில் கார்காய் அணை கடட பரிந்துரை வழங்கப்பட்டு்ளது. இதற்கான லட்சணக்கான மரங்கள் வெட்ட பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக பாலைவனமாக்க விரும்புகிறது என அதித்யா தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
இந்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை இதற்கு முன்பாக ஒருபோதும் பார்த்ததில்லை. மாநிலம் முழுவரும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துகிறது.
மாமநில வனவிலங்கு வாரியம் லட்சகணக்கான மரங்களை வெட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. தானே மற்றும ்பல்கார் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டள்ளது. மும்பைக்கு குடிநீ்ர் வழங்க கார்காய் அணை கட்டுவதற்கான இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மகாராஷ்டிராவை பாலைவனமாக்க விரும்புகிறது.
தேவைப்பட்டால் சிவசேனா (UBT) மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர், ஜனாதிபதியை இந்த திட்டத்திற்கு எதிராக அணுகும்.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் (2019 முதல் 2022 வரை) இருக்கும்போது கர்காய் அணை திட்டத்தை கைவிட்டது.
- மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் அமைக்கப்பட்டது.
- பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் மொழி மற்றும் மதம் குறித்த அரசியல் ஏன் நடக்கிறது என்றார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரான ஆதித்ய தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் பல விஷயங்களில் நம்மை தவறாக வழிநடத்தவும், முட்டாளாக்கவும் முயன்றதால் 'முட்டாள்' அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது, முதல் மந்திரி விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். ஆனால் இப்போது துணை முதல் மந்திரி அஜித் பவார் இதுபோன்ற எதுவும் செய்யப்படாது என்று கூறுகிறார்.
பெண்கள் பயனாளிகளுக்கு வழங்க அரசாங்கத்திடம் நிதி இல்லாததால் அந்தத் திட்டமும் மூடப்பட உள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் மொழி மற்றும் மதம் குறித்த அரசியல் ஏன் நடக்கிறது?
ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உள்ளது, அது மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
மும்பை :
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை வலுப்படுத்தும் நோக்கில் அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
நேற்று அவர் அகோலாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
துரோகிகளை கொண்ட மராட்டிய அரசு வரும் மாதங்களில் கவிழும். இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஷிண்டே தலைமையிலான அரசு 4 மிகப்பெரிய தொழில் திட்டங்களை இழந்து உள்ளது. அந்த திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதன் மூலம் மராட்டியம் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்து உள்ளது.
ஷிண்டேக்கு நெருக்கமாக இருக்கும் தொழில் துறை மந்திரி உதய் சாமந்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. அவரால் மராட்டியம் தொழில் முதலீடு வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருகிறது.
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேயா அல்லது தேவேந்திர பட்னாவிசா என்ற குழப்பம் அனைவரிடமும் உள்ளது. சட்டவிரோதமாக அமைந்த இந்த அரசு விவசாயிகளின் நலனை காக்க தவறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகாராஷ்டிராவின் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார்.
- ராகுல் காந்தி வரும் 20-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் மகாராஷ்டிரா சென்றார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அவர் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சிவசேனா தொண்டர்கள் கோஷமெழுப்பினர்.
- சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
தானே :
தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்தி வந்த சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மண்ணின் மைந்தர்களின் குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறோம். இளைஞர்கள் இதன் ஒரு பகுதியாக மாறி உள்ளனர். இதனால் புதிய மற்றும் வலுவான சிவசேனா தற்போது உருவாகி வருகிறது.
பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப் பஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு மக்களை பிளவுபடுத்துவதை தவிர மராட்டியத்திற்கு வேறு எதுவும் செய்யவில்லை.
இந்த துரோகிகளின் அரசாங்கம் அடுத்த 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும். நம்மை விட்டு பிரிந்தவர்கள் துரோகிகள், எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள்.
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டங்களை பற்றி சிந்திக்காமல், எப்படி அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே ஆளும்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இதுவரை ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- ஏக்நாத் ஷிண்டேவால் கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருடமுடியும்
- அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த வாரம் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேவின் ஒர்லி தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். பொதுக்கூட்டத்தில் குறைந்த அளவில் மட்டுமே தொண்டர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒர்லியில் ஆதித்ய தாக்கரேவின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொண்டாகள் திரளாக கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே அணியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் சாவந்த் எம்.பி., பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ., சுஷ்மா அந்தாரே, சச்சின் ஆஹிர் எம்.எல்.சி., சுனில் ஷிண்டே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே பேசியதாவது:-
ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனாவின் பெயர், சின்னத்தை மட்டுமே திருட முடியும். ஆனால் மராட்டிய மற்றும் மும்பை மக்கள் எங்கள் (தாக்கரே) மீதும், சிவசேனாவின் மீதும் வைத்து உள்ள அன்பை திருடமுடியாது. இது சிவசேனாவுக்கான போராட்டம் அல்ல. ஜனநாயகம், அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம். ஒற்றுமையுடன் இருந்து அவர்களுக்கு எதிராக போராடுவோம். நமக்கு வெற்றி கிடைக்கும்.
ஷிண்டே-பா.ஜனதா அரசு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் முன்பே கவிழும். இதுபற்றி தொழில் அதிபர்களுக்கு கூட தெரிந்து இருக்கிறது. அதனால் தான் மராட்டியத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை.
அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது. ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் செய்யும் முறைகேடுகள் பற்றி அவர்களின் புதிய நண்பர்கள் (பா.ஜனதா) தான் எங்களுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இந்த அரசு கவிழ்ந்த பிறகு துரோகிகள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வார்கள். அரசு கவிழ்ந்த பிறகு அவர்களின் தேவை பா.ஜனதாவுக்கு முடிந்துவிடும்.
சிவசேனாவின் சின்னம், பெயரை பறிக்க தான் துரோக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தேவைப்பட்டனர். தற்போது ஆட்டம் முடிந்துவிட்டது. கட்சி பெயர், சின்னம் கிடைத்த பிறகு ஏக்நாத் ஷிண்டே, "தாக்கரே" பெயரும் வேண்டும் என டெல்லியிடம் கேட்டாலும் கேட்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக தாக்கி பேசினார்.
- ஆதித்ய தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது.
தானே :
உத்தவ்தாக்கரே கட்சியின் மகளிரணியை சேர்ந்த ரோஷிணி ஷிண்டே, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அவரை பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரோஷிணி ஷிண்டே தானேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று முன்தினம் உத்தவ்தாக்கரே நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தகுதியற்ற உள்துறை மந்திரி என்று கடுமையாக விமர்சித்தார். தானே போலீஸ் கமிஷனரையும் விமர்சித்தார்.
இந்தநிலையில் தானேயில் நேற்று முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் மந்திரிகள் ஜிதேந்திரா அவாத், அனில் பரப் பங்கேற்றனர்.
தானேயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி சென்றது. பேரணி நிறைவில் தொண்டர்கள் மத்தியில் ஆதித்ய தாக்கரே பேசினார். அப்போது முதல்-மந்திரி ஷிண்டேக்கு செல்வாக்கு உள்ள தானேயில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்றும், அந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக தாக்கி பேசினார்.
இதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் தானே போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்கள் சென்றனர். அங்கு போலீஸ் கமிஷனர் ஜெய்தீப் சிங்கை நேரில் சந்தித்தனர்.
அப்போது, ரோஷிணி ஷிண்டேயை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரிடம் மனு அளித்தனர்.
- மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
- மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஆகியவை தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், உத்தவ் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 66 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே போட்டியிடும் கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் உத்தவ் கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே களமிறக்கப்படுகிறார்.
முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் குரு ஆனந்த் திகே என்பது குறிப்பிடத்தக்கது.






