ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று மோதி விபத்து - மும்பையில் பரபரப்பு

மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது.
ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று மோதி விபத்து - மும்பையில் பரபரப்பு
Published on

மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று, மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.

அப்போது  ஐதராபத்தில் இருந்து இண்டிகோ விமானம் பயணிகளுடன் ஓடுபாதையில் வந்திறங்கியது. இதன் போது இரு விமானிகளும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.

இதில் இரண்டு விமானங்களின் இறக்கை முனைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

விபத்தைத் தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டு, விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

விமானங்கள் ஓடுபாதையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com