என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Air-India"
- 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
- வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
உள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் வைஃபை இணைப்பை வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்படி உள்நாட்டு விமானத்தில் இன்பிளைட் இன்டர்நெட் வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.
இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/04/7817702-airindiawifi2.webp)
ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, பயணிகள் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானங்களில் உள்நாட்டு வழித்தடங்களில் இந்த இலவச வைஃபை இணைய சேவையைப் பெறலாம்.
பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/04/7817752-airindiawifi3.webp)
இந்த சாதனங்களை 'ஏர் இந்தியா வைஃபை' நெட்வொர்க்குடன் இணைத்து தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளிட்டு பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
முன்னதாக நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச தடங்களில் பயணிகளுக்கு ஏர் இந்தியா இந்த புதிய வைஃபை வசதி சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை விரிவாக்கப்பட்டுள்ளது.
- முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது.
- 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து தாலாய்ந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புதிதாகவிமான சேவையை தொடங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானமானது சூரத்தில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்து பாங்காக் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அனைத்தையும் பயணிகக்ள் 4 மணி நேரத்தில் குடித்துத் தீர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது. அதாவது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது. விமானத்தில் மதுபானம் தீர்ந்துவிட்டது என்று பயணிகள் கூறும் வீடியோக்கள் வெளிவந்தன.
Air India's first flight from #Surat to #Bangkok received 98% passengers on the first day itself, passengers finished their stock of whiskey and beer, 300 passengers drank 15 liters of alcohol worth more than 1.80 lakh in a 4-hour journey. pic.twitter.com/eG5LDq53Zt
— Smriti Sharma (@SmritiSharma_) December 22, 2024
1.8 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 15 லிட்டர் பிரீமியம் மதுபான வகைகள் அந்த விமானத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
விமானத்தில் ஒரு பயணிக்கு 100 மில்லிக்கு மேல் மதுபானம் வழங்கப்படுவதில்லை என்ற விமான ஊழியர்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
- இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக தகவல்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து.
டெல்லி வரவேண்டிய 100-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தாய்லாந்தின் பூகெட்டில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான புறப்பாடு தாமதமாகி இருக்கிறது. பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதன்பிறகு தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மேலும், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நவம்பர் 16 ஆம் தேதி அறிவித்து இருக்கிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் இதர உதவிகளுக்கு ஏர் இந்தியா வழிவகை செய்வதாக அறிவித்து இருக்கிறது.
சில பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்குவது மற்றும் வேறு தேதியில் பயணம் மேற்கொள்வது பற்றி பயணிகளுக்கு ஏர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. பயணிகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் பயணத்திற்குத் தயார்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் ஃபூகெட்டில் தரையிறங்கியது, அதன்பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. எனினும் பயணிகள் ஃபூகெட்டில் சிக்கிக்கொண்டனர்.
முன்னதாக, விமான நிறுவன வட்டாரம், "பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுமார் 40 பேர் இன்னும் ஃபூகெட்டில் உள்ளனர், அவர்கள் இன்று மாலை திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்று கூறினார்.
- ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
- ஏர் இந்தியா விமானங்களாக வானில் பறக்கத் தொடங்கின.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. அதன்பின்னர் டாடா குழுமத்தின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் பறக்கத் தொடங்கி உள்ளன.
விஸ்தாரா பெயரிலான கடைசி விமானம் ஒடிசா மாநிலம் மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்று இரவு டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. அப்போது விமான நிலைய ஊழியர்கள் விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
அதேபோல் ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா விமான நிறுவனம் இணைந்த பின் முதல் விமானம் (AI2286) தோஹாவில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலையில் மும்பை வந்து சேர்ந்தது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.
புதிதாக இணைக்கப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனம் 5 ஆயிரத்து 600-க்கும் அதிக வாராந்திர விமானங்களை இயக்கும். இதோடு, 90 உள்நாட்டு விமான நிலையங்கள், சர்வதேச அளவில் 208 இடங்களை இணைக்கும் சேவையை வழங்கும். முன்னதாக விஸ்தாரா லாயல்டி திட்டமான 'கிளப் விஸ்தாரா' சந்தா வைத்திருப்போர் ஏர் இந்தியாவின் 'மகாராஜா கிளப்'-க்கு மாற்றப்பட்டனர்.
முன்னதாக சிவிஸ்தாராவிஇல் 49 சதவீத பங்குகளை வைத்திருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது புதிய ஏர் இந்தியா குழுமத்தில் 25.1 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. முன்னதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா இணைந்ததை அடுத்து, தற்போது ஏர் இந்தியா - விஸ்தாரா இணைந்துள்ளன. இந்த இணைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தான் நிறைவுபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- விஸ்தாராவை ஏர்இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு இதில் 25.1 சதவீதம் பங்கு உள்ளது.
- நேற்றுடன் விஸ்தாரா விமான சேவைகள், ஏர்இந்தியா விமான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
விஸ்தாரா விமான நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைவதற்கான வேலைகளை நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக சென்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஸ்டாஃப்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
ஏர்இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.
#WATCH | Ahmedabad Gujarat Airport staff bid farewell to Vistara's flight that departed to Delhi. (11.11) Vistara merged with Air India on Monday. (Source: Ahmedabad Airport PRO) pic.twitter.com/nES6d7kXQP
— ANI (@ANI) November 11, 2024
நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டது. இது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.
விஸ்தாரா ஏர்இந்தியாவுடன் இணைந்த நிலையில், சிங்கப்பூர ஏர்லைன்ஸ் இதில் 25.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தை மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
- பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 172 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானத்தை உடனடியாக விமானி நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்லும்போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார்.
விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை விமானி உணர்ந்ததை தொடர்ந்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து அவசரமாக நிறுத்தினார்.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
மேலும், விமானத்தில் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 5 மணிக்கு புறப்புடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
- புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்கள் , 6 ஏர் இந்தியா விமானங்கள் உட்பட இன்றைய தினமும் 25 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன. பறந்து செல்லும் விமானங்கள் திட்டமிடப்படாத விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.
விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்ட பின்னர் விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்றன. கடந்த 12 நாட்களில் இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுள்ளது.
- அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
- சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த 1 வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவை போலியானது என்றாலும் விமான சேவைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பன்னுன் மீதான கொலை முயற்சி வழக்கில் தற்போது அமெரிக்காவில் தேடப்பட்ட இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து டெல்லியில் நேற்றைய தினம் சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இந்த அனைத்து சம்பவங்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாக இருக்கும் சூழலில் இந்த எச்சரிக்கையை பன்முன் விடுத்துள்ளார்.
சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு விழா விரைவில் வர உள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை பன்னுன் விடுத்துள்ளதாக யூகிக்க முடிகிறது. கடந்த வருடமும் பன்னுன் இதுபோன்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பன்னுன் பயங்கரவாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.
- ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏ உள்ளிட்ட விமானங்களுக்கு மிரட்டல்
- நேற்று ஒரே நாளில் 30-க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கடந்த ஓரே வாரத்தில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (BCAS) டெல்லியில் வைத்து விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த வாரம் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏ உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. ஆனால் இதில் பெரும்பாலானவை வதந்தி ஆகும்.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் 30-க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மிரட்டல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இயக்குநர் ஜூலிப்கர் ஹாசன், இந்திய வான்பரப்பு பாதுகாப்பனவை, பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. பயணிகள் எந்த பயமும் இன்றி விமான பயணங்களை மேற்கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார்.
- டெல்லி- சிகாகோ விமானம் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டு சோதனை.
- ஜெய்ப்பூர்- பெங்களூரு விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டது.
இன்று பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஐந்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. சோதனைக்குப்பின் அவை அனைத்தும் போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரத்திற்கு சென்று ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த விமானம் கனடாவில் தரையிறக்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தமாம் (சவுதி அரேபியா)- லக்னோ இண்டிகோ விமானம், தர்பங்கா- மும்பை ஸ்பைஸ்ஜெட், சிலிகுரி- பெங்களூரு ஆகாசா ஏர் ஆகிய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பல்வேறு விமான நிலையங்களில் பாதுகாப்பு அமைப்புகளால் பயங்கரவாத தடுப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
ஜெய்ப்பூர்- பெங்களூரு விமானம் அயோத்தி வழியாக செல்லும் விமானம் ஆகும். இந்த விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
விமானங்கள் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டு அங்கு பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன.
இதேபோன்று நேற்று மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்று சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவைகளும் புரளி எனத் தெரியவந்தது.
- ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டார்.
- திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்தது.
சென்னை:
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் கோளாறுக்கு பிறகு அதை பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக அதன் விமானி மற்றும் துணை விமானிக்கு நன்றி. இந்த முயற்சி மற்றும் பதற்றமான தருணத்தில் காக்பிட் மற்றும் கேபின் குழுவினரின் துணிச்சல் மற்றும் அமைதியான தொழில்முறை செயல்பாடு உண்மையிலேயே சிறப்புமிக்கது. விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய அவசர சேவைகளில் ஈடுபட்டோர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது இதயபூர்வ பாராட்டுக்கள். பயணிகள் அனைவரும் இனிதான பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
"Many thanks to the Captain and the Co-Pilot for the safe landing of flight IX613 from Tiruchirappalli to Sharjah after the landing gear glitch. The courage and calm professionalism of the cockpit and cabin crew truly shone during this trying and tense moment. Heartfelt…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 11, 2024