என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airlines"

    • 2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
    • இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க தொடங்கியது.

    6 வருட இடைவெளிக்குப் பிறகு சீனாவிற்கு தனது சேவைகளை மீண்டும் தொடங்குவதாக டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 1 முதல் டெல்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் இடையே நேரடி விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    அதன் அறிவிப்பில், இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு முறை போயிங் 787-8 விமானங்கள் இயக்கப்படும்.

    2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க  தொடங்கியது.

    முன்னதாக கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.   

    • சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

    இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது

    இந்தியா வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக BRICS மாநாட்டின் தலைமைக்கு ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் உள்ளிட்ட 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

    மேலும், உத்தரகாண்ட், ஹிமாச்சல், சிக்கிம் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறக்க இந்தியாவும் சீனாவும் உடன்படிக்கை செய்துள்ளன. 

    • லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
    • 2019 க்குப் பிறகு சீனாவிற்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

    அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் குறுகிய காலத்தில் சீனாவிற்கு விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

    முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஜூன் 2020 இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய  ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகள் விரிசல் அடைந்தன.

    இந்நிலையில் இந்தியா மீதான டிரம்ப் உடைய 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவையும் சீனாவையும் ஒரே கோட்டில் நிறுத்தியுள்ளன.

    இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது 2019 க்குப் பிறகு சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

    • விமானம் 90 வினாடிகளில் 38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.
    • சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் இருந்த ஆம்ஸ்டர்டாமிற்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டர்புலன்ஸ் (turbulence) காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை, 275 பயணிகள் மற்றும் 13 விமானக் குழுவினருடன் சென்ற இந்த விமானம், நடுவானில் காற்று அலைகளால் தடுமாற தொடங்கிய நிலையில் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    Flightradar24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளத்தின் தரவுகளின்படி, விமானம் 90 வினாடிகளில்38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.

    சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் மினியாபோலிஸில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    அங்கு மருத்துவக் குழுவினர் பயணிகளுக்கும் விமானக் குழுவினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்களில் 25 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

    • நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
    • ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.

    இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.

    இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.

    அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • விமானத்தில் 176 பயணிகள் பயணம் செய்தனர்.
    • ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை முதல் துவங்கியது.

    இந்த விமானம் ஆனது நேரடியாக திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு இயக்கப்படும். இதன் முதல் சேவை துவக்கமானது நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த சேவையானது வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பேங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது.


    இந்த விமான சேவை துவக்க நாளான நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த விமானமானது மேற்கண்ட மூன்று நாட்களில் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பேங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு பேங்காக்கில் இருந்து திருச்சி வந்து விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பேங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்தனர்.

    • நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க முடிவு.
    • தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் அக். 1-ம் தேதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவன ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும், "பாகிஸ்தான் சர்வதேச விமான நிவறுனம் ஏலம் அடுத்த மாதம் முதல் தேதி இறுதி செய்யப்படும்" என்று தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஃபரூக் சத்தார் குழுவின் அமர்வில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தில் 51% முதல் 100% வரை விற்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
    • ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

    2010 ஆம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரத்தன் டாடா, "அமைச்சர் ஒருவருக்கு 15 கோடி கொடுத்தால் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஒரு தொழிலதிபர் எனக்கு ஆலோசனை கூறினார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.

    அப்போது அந்த தொழிலதிபர், "நீங்கள் ஏன் அமைச்சருக்கு பணம் கொடுக்கக்கூடாது. அமைச்சருக்கு 15 கோடி தேவைப்படுகிறது. உங்களுக்கு விமான ஒப்பந்தம் தேவையில்லையா? நீங்கள் ஒரு முட்டாள்" என்று அவர் கூறினார்.

    "உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை. நான் பணம் கொடுத்து விமான ஒப்பந்தம் பெறவில்லை என்று தெரிந்த பின்பு இரவு வீட்டிற்கு சென்று தூங்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்திற்காக நான் அவருக்கு பணம் கொடுத்திருந்தால் நான் மிகவும் அவமானமாக உணர்ந்திருப்பேன்" என்று அவரிடம் தெரிவித்ததாக ரத்தன் டாடா கூறினார்.

    ஆனால் அந்த அமைச்சர், தொழிலதிபரின் விவரங்களை ரத்தன் டாடா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமான சேவையில் மாற்றல் இருப்பின், உடனடியாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • சமுக வலைத்தளம் வழியாக தகவல்கள் வழங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மிக அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு, விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அதன்படி, ஓடுபாதை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் தேங்காதபடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.

    விமான சேவையில் மாற்றல் இருப்பின், உடனடியாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விமான சேவை குறித்த தகவல்களை, அந்தந்த நிறுவன இணையதளத்தில் உறுதி செய்துகொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விமான சேவைகளில் பெரிய மாற்றம் இருப்பின் சமுக வலைத்தளம் வழியாக தகவல்கள் வழங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டெல்லி- பிராங்பேர்ட், சிங்கப்பூர்- மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், இண்டிகோ நிறுவனத்தின் புனே- ஜோத்பூர், கோவா- அகமதாபாத், கோழிக்கோடு- சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

    நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • இதுவரை 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
    • வெடிகுண்டு புரளி அச்சுறுத்தல்களால் விமான அட்டவணைகள் சீர்குலைகிறது.

    நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் வெடிகுண்டு மிரட்டல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

    இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல்களால் விமானம் திசைதிருப்பப்படும் சந்தர்ப்பங்களில் எரிபொருள் பயன்படு அதிகரிக்கிறது. பின்னர் விமானத்தை மீண்டும் பரிசோதிக்கவும், பயணிகளை ஓட்டல்களில் தங்கவைக்கவும், பயணிகளை அவர்கள் பயணம் செய்யவுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதால், செலவும் அதிகரிக்கிறது.

    விமான நிறுவனங்கள் அவசரமாக தரையிறங்கும் போது, சம்பந்தப்பட்ட விமான நிலையத்திற்கு பார்க்கிங் கட்டணத்தையும் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    இந்தியாவில் தொடர் கதையாகி வரும் வெடிகுண்டு மிரட்டலால் விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால், விமானத்தில் பயணிக்க அச்சம் ஏற்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    ×