search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthdays"

    • நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
    • ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.

    இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.

    இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.

    அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • அண்ணா, பெரியார் பிறந்தநநாளையொட்டி அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தன்மானமுள்ள தமிழர்களுக்கு திருவிழாவாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதா வது-

    பகுத்தறிவு என்கின்ற சுயமரியாதை விதையை நமக்கு ஊட்டி தட்டி எழுப்பிய அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி, அதைப் போன்று ஐயா பெரியாரின் தலைமைச் சீடர் காஞ்சி தந்த கருவூலம், தென்நாட்டு பெர்னாட்சா, தமிழ்நாட்டு இங்கர்சால், மறுமலர்ச்சி தமிழினத்தின் தூதுவன், காஞ்சித் தலை வன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நாளை (15-ந் தேதி) இரண்டும் உண்மை யான திராவிட இயக்க தொண்டர்களுக்கு, தன்மானமுள்ள தமிழர்க ளுக்கு திருவிழாவாகும்.

    அந்த அடிப்படையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஐயா அவர்க ளின் பிறந்தநாளையும், அண்ணா அவர்களின் பிறந்த நாளையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள், அனைத்து அணி களின் நிர்வாகிகள், கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை உள்ள பொறுப் பாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி யும், அதைப்போன்று பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித் தும் இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாட வேண்டுகி றேன்.

    சிலைகள் இல்லாத்த இடத்தில் ஐயா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டா டிட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் தலைமைக் கழகத் தின் சார்பில் கேட்டுக்கொள் கின்றேன்.

    தலைமைக் கழகம் சார்பில் மதுரையில் அன்னை இல்லம் பல்லவன் நகர் 3-வது தெருவில் எனது தலைமையில் காலை 9 மணிக்கு நாளை (15-ந் தேதி) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளும், வருகிற 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும் கொண்டா டப்படும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு சேர்மன் குருசாமி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தன.

    திருமங்கலம்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரும், விருது நகர் பாராளுமன்ற உறுப்பி னருமான மாணிக்கம் தாகூர் பிறந்தநாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரில் பேரூராட்சி மன்ற தலைவர் கே.கே.குருசாமி தலைமை யில் பேரையூர் பட்டயத்து முக்கு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதன்பின்னர் வி.அம்மா பட்டி அமலா மனநல காப்ப கத்தில் உள்ள அனை வருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பி னரும், பேரையூர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கே.கே.ஜி.காமாட்சி, வட்டார தலைவர் கணேசன், நகர் தலைவர் சற்குணன், நிர்வாகிகள் மகாலிங்கம், சுப்பையா, காளிஸ்வரன், சங்கரபாண்டியன், மணிகண்டன், முத்துகிருஷ்ணன், டில்லி ராஜன், முத்து விஜயன், மாசாணம், மலைராஜன், கருத்தப்பாண்டி, ராஜா, முத்தையா, முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வருகிற 11ந்தேதி மாலை சிவகங்கை அம்மா உணவகம் அருகே ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்.

    இதையொட்டி சிவகங்கை யில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகர் செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச்செய லாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சிவாஜி, சிவசிவஸ்ரீதர், சேவியர்தாஸ், பழனிச்சாமி, கோபி, ஜெகதீஸ்வரன், செல்வமணி, பாரதிராஜன், அருள் ஸ்டீபன், வாசு, சோனைரவி, செந்தில் குமார், மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்கத்தலைவர் சகாய செல்வராஜ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் மற்றும் நகர செயலாளர்கள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலி தாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூவந்தியில் இருந்து பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு கழக பொதுச்செயலாளரை வரவேற்க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    • இல்லம் தேடி சென்று இளைஞர் அணிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மாவட்ட ஒன்றிய, நகர ,பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்று பேசினார்.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ராஜேஷ் கண்ணா , கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    தி.மு.க. தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளான வருகிற 27-ந் தேதி ஆதரவற்ற , முதியோர் இல்லங்களில் உணவு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    அன்றைய தினம் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    • காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • சிலம்பம் மற்றும் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில். நடைபெற்ற காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    தலைவர் அய்யாசாமி தலைமைதாங்கினார். நிர்வாக குழு உறுப்பி னர் நாகராஜன் முன்னிலைவகித்தார். பள்ளியின் மேலாளர் ரவீந்திரன் ஹவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்துறை பாண்டியன் கலந்துகொண்டு கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய தொண்டினை விளக்கினார்.

    சிலம்பம் மற்றும் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதுகுளத்தூர் பேரூராட்சி உதவி சேர்மன் வயணப்பெருமாள் பரிசுகளை வழங்கினார்.

    முடிவில் தலைமை ஆசிரியை அன்பு கனிமோஸஸ் நன்றி கூறினர்.

    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.
    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    கிழமைகளும் பலன்களும் :

    ஞாயிற்றுக்கிழமை :


    ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

    திங்கட்கிழமை :

    திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் அனைவரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.

    செவ்வாய்கிழமை :

    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.

    புதன்கிழமை :

    புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர். நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.

    வியாழக்கிழமை :

    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.

    வெள்ளிக்கிழமை :

    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

    சனிக்கிழமை :

    சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள். பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்.
    ×