search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "favors"

    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு சேர்மன் குருசாமி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தன.

    திருமங்கலம்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரும், விருது நகர் பாராளுமன்ற உறுப்பி னருமான மாணிக்கம் தாகூர் பிறந்தநாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரில் பேரூராட்சி மன்ற தலைவர் கே.கே.குருசாமி தலைமை யில் பேரையூர் பட்டயத்து முக்கு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதன்பின்னர் வி.அம்மா பட்டி அமலா மனநல காப்ப கத்தில் உள்ள அனை வருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பி னரும், பேரையூர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கே.கே.ஜி.காமாட்சி, வட்டார தலைவர் கணேசன், நகர் தலைவர் சற்குணன், நிர்வாகிகள் மகாலிங்கம், சுப்பையா, காளிஸ்வரன், சங்கரபாண்டியன், மணிகண்டன், முத்துகிருஷ்ணன், டில்லி ராஜன், முத்து விஜயன், மாசாணம், மலைராஜன், கருத்தப்பாண்டி, ராஜா, முத்தையா, முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் மக்களிடமிருந்து 321 மனுக்கள் பெறப்பட்டது.
    • 96 பயனாளிகளுக்கு ரூ. 28 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே விடையல் கருப்பூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தங்கள் துறை சார்ந்த கண்காட்சி குடிலை பொது மக்களின் பார்வைக்காக அமைத்திருந்தனர். பின்னர், துறை ரீதியாக அரசால் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.

    முகாமில் மக்களிடமிருந்து 321 மனுக்கள் பெறப்பட்டது. 96 பயனாளிகளுக்கு ரூ. 28 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 83 பயனாளிகளுக்கு ரூ.83 ஆயிரத்துக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம், வேளாண்துறையில்
    8 பயனாளிகளுக்கு ரூ. 6,906-க்கு என 187 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர்.

    ×