என் மலர்
நீங்கள் தேடியது "சோனுசூட்"
- சாந்தனு தேஷ்முக் என்ற வாலிபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
- தனித்துவமான வகையில் காட்சிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான செய்களையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சாந்தனு தேஷ்முக் என்ற வாலிபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கண்ணாடி துண்டுகளில் சோனுசூட்டின் உருவத்தை வரைந்துள்ளார். அவற்றை சீராக அடுக்கி தனித்துவமான வகையில் காட்சிப்படுத்திய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த சமூக வலைதள பயனர்கள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- ஒரு ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார்.
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடினர்.
இன்று நடிகர் சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சோனுசூட்டின் ரசிகர்களில் ஒருவரான புருஷோத்தம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ஹாக்கிங்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார். அதன்படி அவரது பள்ளியில் படிக்கும் 1200 மாணவர்களை சோனுசூட் உருவத்தில் அமரவைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில் HBD REAL HERO என்று மாணவர்கள் அமர்ந்து சோனு சூட்டிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
- அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்
- சிறப்பாக வேலை செய்யும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் "தனக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை தருவதாக சொன்னார்கள், ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்" என்று நடிகர் சோனுசூட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சோனுசூட், "எனக்கு முதலில் முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது எனக்கு துணை முதல்வர், மாநிலங்களவை எம்.பி பதவியை தருவதாக கூறினார்கள். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.
அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். மக்கள் இரண்டு காரணங்களுக்காக அரசியலில் சேருகிறார்கள். ஒன்று பணம் சம்பாதிப்பதற்காக அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்காக... எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை.
அரசியலுக்கு வந்தால் எனக்கு டெல்லியில் வீடு, பதவி, உயர் பாதுகாப்பு உள்ளிட்ட ஆடம்பரங்கள் கிடைக்கும் என பலரும் தன்னிடம் கூறியுள்ளனர். அதை கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால் நான் இப்போது அதற்கு தயாராக இல்லை.
இப்போது எனக்குள் இன்னும் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கிறார். நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. சிறப்பாக வேலை செய்யும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






