என் மலர்
நீங்கள் தேடியது "Chief Minister"
- அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
- நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டிஜிபி நியமனம்
டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்து முடிவு செய்யாதது ஏன்?
நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாமல் திமுக அரசு தடுமாறுவது ஏன்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே டிஜிபி தேர்வு பட்டியலை தமிழக அரசு தயாரித்தது.
பட்டியலில் உள்ள 3 பேரும் கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால்தான் திமுக அரசு தடுமாறுகிறது.
இன்னும் டிஜிபி நியமனம் செய்யப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஜிபி நியமனம் முறையாக நடைபெற்றது.
விவசாயிகள் பாதிப்பு
திமுக அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகளுக்கு துயரம் ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
கொள்முதல் செய்வதிலும் தாமதம் கொள்முதல் செய்த நெல்லை அனுப்புவதிலும் தாமதம். நெல்லை கொள்முதல் செய்யாததால்தான் மழையில் நனைந்து முளைத்து விட்டன.
நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் இல்லை. மதுரை சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.
நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார். இப்போதும் நான் விவசாயிதான். முக ஸ்டாலின் விவசாயிகளுக்கு விரோதி.
முதலமைச்சர் விவசாயிகளை பார்க்க செல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டார்.
நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசு என்ன கூறியது என்பதை தெரிவிக்க வேண்டும்.
மத்திய வேளாண் சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வருக்கு தெரியுமா?.
3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதால்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.
ஆளுங்கட்சி செய்வதை நாங்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
விவசாயிகள் பாதிக்கப்படும் போது திமுக எம்பிக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
காவிரி நதிநீர் பிரச்சனையில் 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி 9வது இடத்தில் உள்ளார்.
- பீகார் முதல்வராக கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றுள்ளார்.
இந்தியாவில் அவரை போல அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்தவர்களின் பட்டியல் கவனம் பெற்று வருகிறது.
அதனபடி, சிக்கிம் மாநிலத்தை 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பவன் குமார் சாம்லிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஒடிசாவை 24 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக 23 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் ஜோதி பாசு 3வது இடத்திலும், அருணாசல பிரதேச முதல்வராக 22 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த கோகாங் அபாங் 4வது இடத்திலும் உள்ளனர்.
5வது இடத்தில மிசோராமை 22 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட லால் தன்ஹாவ்லாவும், 6வது இடத்தில் ஹிமாச்சல பிரதேசத்தை 21 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட வீரபத்ர சிங் -உம் உள்ளனர்.
திரிபுரா முதல்வராக 19 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த மாணிக் சர்க்கார் 7வது இடத்தில் உள்ளார். பீகார் முதல்வராக கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார்.
தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி 9வது இடத்திலும் பஞ்சாபை 18 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரகாஷ் சிங் பாதல் 10வது இடத்திலும் உள்ளனர்.
- சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
- முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் மூட நம்பிக்கைகளை நம்புவது இல்லை.
சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
அந்த மூட நம்பிக்கையை போக்க நான் இங்கு வருகிறேன்.
எனது அதிகாரம் (பதவி) இப்போதும் சரி, வரும் காலத்திலும் சரி பாதுகாப்பாக உள்ளது.
முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.
எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆசைப்படி நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அதன் பிறகும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வரும்.
மக்கள் எதுவரை விரும்புகிறார்களோ அதுவரை நானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.
- உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார்.
சென்னை:
'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 2-ந் தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
'சட்ட மேதை' அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். 'தத்துவ ஞானி' என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
துபாய் வழியாக அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து, 'ஜெர்மனி, லண்டனில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை பட்டியலிடுவார் என்று தெரிகிறது.
- 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
- இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.
குறிப்பாக கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அடுத்த மாதம் 16-ந்தேதி முன்பதிவு செய்திட கடைசி நாளாகும்.
- மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை:
2025-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதி முதல் செப்டம்பர் 12-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுகளும் என மொத்தம் ரூ.83.37 கோடி செலவில் நடத்தப்பட உள்ளது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். அடுத்த மாதம் 16-ந்தேதி முன்பதிவு செய்திட கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இணையதளம் வாயிலான வீரர், வீராங்கனைகளின் இந்த முன்பதிவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த திரு.செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த திருமதி.லட்சுமி க/பெ.கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.ராமமூர்த்தி (வயது 38) த/பெ.ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த திரு.ராமஜெயம் (வயது 27) த/பெ.கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த திரு. வைரமணி (வயது 32) த/பெ. காந்தி ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் திரு.லிங்குசாமி (வயது 45), திரு.மணிகண்டன் (வயது 40), திரு.கருப்பசாமி (வயது 27), திருமதி.முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.அழகுராஜா (வயது 28) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
- ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.
- தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியுள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த பகுதிகளில் தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஜம்மு நகரம் முழுவதும் இப்போது இருளில் மூழ்கியுள்ளது. நகரம் முழுவதும் சைரன்கள் சத்தம் கேட்கின்றன. நான் இருக்கும் இடத்திலிருந்து அவ்வப்போது குண்டுவெடிப்பு சத்தங்கள், கனரக பீரங்கி சத்தங்கள் கேட்கின்றன.
ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள மக்களும் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். அடுத்த சில மணிநேரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள் அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்ப வேண்டாம். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.
- அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்
அரியலூர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 5-ந் தேதி அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்.
பின்னர் மதியம் அவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் பெரம்பலூருக்கு மாலையில் வருகை தந்து, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திறந்தவெளியில் தி.மு.க. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இரவில் கூட்டம் முடிந்த பின்னர் அவர் பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பெரம்பலூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அங்கு சென்றடைகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் வருகையை முன்னிட்டு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
- அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அளிக்க தீர்மானம்
கரூர்:
கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம் (குளித்தலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது:-
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று 2-வது முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இன்று மாலை நொய்யல் குறுக்கு சாலை மற்றும் கரூர் பஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும்.
அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு கரூர் அரசு விருந்தினர் மாளிகை 9 மணிக்கு தடாகோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் நீண்ட காலம் பதிவு செய்து மின் இணைப்பு கிடைக்காதவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து முதற்கட்டமாக ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கி சாதனை படைத்ததற்கும், தொடர்ந்து 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அரவக்குறிச்சியில் தொடங்கி வைக்கும் தமிழக முதல்-அஅமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது,
இந்தி திணிப்புக்கு எதிராக வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநில நிர்வாகிகள் நன்னியூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் மணிராஜ், பரணி கே.மணி, முனவர் ஜான், மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செயலாளர் கணேசன், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், புகளூர் நகர செயலாளர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குடியரசு உட்பட பலர் கலந்து கொ
- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது.
- திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும்.
தாராபுரம் :
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் ஏழை எளிய-மக்களுக்காகவும், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும் தி.மு.க.வில் அடிமட்டதொண்டனையும் நினைவு கூர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று தனது அறிவுரையால் தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு செயல்பட்டு வரும் தி.மு.க.தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்துவது.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை கவர்ந்துவெல்லக்கூடிய ஆற்றல் மிக்கவராக வெற்றி நடைபோட்டு வரும் அவருக்கு வருகிற 27-ந் தேதி பிறந்த நாள் விழாவை சீரும் சிறப்போடும் ஏழை எளிய-மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.
கருணையுள்ளதோடு இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்த்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.
தேர்தல் ஆணையத்தால் ஆண்டு தோறும் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம், இடமாற்றம் ஆகியவற்றை செய்ய சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திருப்பூர் மாவட்டம், ஒன்றிய நகர பேரூர், வார்டு கிளை நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சரியான நபர்களை இடம் பெற செய்ய வேண்டும்.திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை தி.மு.க.விற்கு சேர்ப்பதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
- வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.
மதுரை
மதுரை ஆனையூர் பகுதிக்கான குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு திட்டம் முடிவடைந்த நிலையில் சிறு, சிறு தவறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.
முழுமையாக இப்பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், தி.மு.க. நிர்வாகிகள் மருது பாண்டி, சசிகுமார், செல்வகணபதி கணேஷ், ரோகிணி பொம்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






