என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒமர் அப்துல்லா"

    • ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.
    • தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியுள்ளது.

    அதன்படி, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த பகுதிகளில் தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு நகரம் முழுவதும் இப்போது இருளில் மூழ்கியுள்ளது. நகரம் முழுவதும் சைரன்கள் சத்தம் கேட்கின்றன. நான் இருக்கும் இடத்திலிருந்து அவ்வப்போது குண்டுவெடிப்பு சத்தங்கள், கனரக பீரங்கி சத்தங்கள் கேட்கின்றன.

    ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள மக்களும் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். அடுத்த சில மணிநேரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள் அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்ப வேண்டாம். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா,தேர்தலுக்கான அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறாக இருப்பதில்லை என கூறியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இதில் பாஜக அதிக இடங்கள் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கணிப்புகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில்,  'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.


    மக்களின் விருப்பம் என்ன என்பது 23ம் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்' என கூறினார்.

    இதையடுத்து காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கருத்துக்கணிப்புகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின்னர் வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாக இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் இருந்தும், தொலைக்காட்சிகளில் இருந்தும் நாம் வெளிவர வேண்டும். தேர்தல் முடிவுகளுக்காக 23ம் தேதி வரை அனைவரும் காத்திருக்க தான் வேண்டும்.

    ஒரு அரசியல் கட்சி கருத்துக்கணிப்புகளில் வெற்றி பெறும் சூழலை உருவாக்கவில்லை என்றால், அக்கட்சி ஏற்கனவே தேர்தல் ஆட்டத்தில் தோற்றுவிட்டது என்று தான் அர்த்தமாகும்.     

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.



     
    ×