என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Omar Abdullah"
- புட்காம், கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- புட்காம் தொகுதியில் சுமார 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பி.டி.பி. வேட்பாளரை தோற்கடித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவர் புட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன்படி உமர் அப்துல்லா புட்காம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதியில் மக்கள் ஜனநயாக கட்சியின் அகா சையத் முந்தாஜிர் மெஹ்தியை 18 ஆயிரத்திற்கு 485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கந்தர்பால் தொகுதியில் பிடிபி வேட்பாளர் பஷிர் அகமது மிர்-ஐ 10 ஆயிரத்து 574 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
புட்காம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை தற்காலிய சபாநாயகர் முபாரக் குல் உறுதிப்படுத்தியுள்ளார்.
உமர் அப்துல்லா ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தவர். அப்போதைய 2009 முதல் 2014 வரையிலான காலக்கட்ட்தில் கந்தர்பால் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார்.
கந்தர்பால் தொகுதியில் அவரது தந்தை பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா தாத்தா ஷேக் அப்துல்லா ஆகியோரும் போட்டியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்றுக் கொண்டார். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் ஜம்மு- காஷ்மீரின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்றுள்ளார்.
- உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் கலந்துகொண்டனர்
- பயிற்சி எதுவும் இன்றி அப்துல்லா ஓடத் தொடங்கினார்
ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்றுள்ளார். பயிற்சி எதுவும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி சாதனை படைத்தார்.
It was such fun running with others. Lots of selfies & videos along the way. I even had a few requests for appointments and one or two job related problems highlighted along the way. Let's not forget the enterprising journalists who tried to run along side in the hope of grabbing… pic.twitter.com/BfFijIOem9
— Omar Abdullah (@OmarAbdullah) October 20, 2024
அப்துல்லா ஓடும்போது அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர். இதற்கு முன்பு 13 கி.மீ.க்கு மேல் ஓடியதில்லை என்று தெரிவித்த அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
I'm so damn pleased with myself today. I completed the Kashmir Half Marathon - 21 KM at an average pace of 5 min 54 sec per KM. I've never run more than 13 KM in my life & that too only ever once. Today I just kept going, propelled by the enthusiasm of other amateur runners like… pic.twitter.com/yZVjFz5oJ4
— Omar Abdullah (@OmarAbdullah) October 20, 2024
- காஷ்மீர் சட்டசபையில் முதல் கூட்டம் நவம்பர் 4-ந் தேதி தொடங்கும்.
- லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்ட சபை தொகுதிகள் உள்ளன. லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவி ஏற்றார்.
அவரது தலைமையில் நடந்த முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதையடுத்து இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக மாற்றப்படலாம்.
இதற்கிடையே உமர் அப்துல்லா விரைவில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை வைக்கிறார். தற்போதைய சூழலில் மத்திய அரசு மீண்டும் ஜம்மு காஷ்மீரை மாநிலமாக்க ஒப்புதல் அளிக்காது என்றே கூறப்படுகிறது.
காஷ்மீர் சட்டசபையில் முதல் கூட்டம் நவம்பர் 4-ந் தேதி தொடங்கும்.
- இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தோ்தல் இதுவாகும்.
- முதலமைச்சர் வாகனம் செல்லும்போது மற்ற வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற விதியை உமர் அப்துல்லா நீக்கினார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி [என்சிபி] - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து [சட்டப்பிரிவு 370] ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தோ்தல் இதுவாகும்.
10 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அங்கு அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வராக நேற்று முன்தினம் [புதன்கிழமை] உமர் அப்துல்லா பதவி ஏற்றார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தற்போதைக்கு அமைச்சரவையில் பங்கு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உமர் அப்துல்லா முதலமைச்சரான பிறகு நேற்று கூட்டப்பட்ட முதல் அமைத்தவரைக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மாநில அந்தஸ்து பறிக்கப்படத்திலிருந்து அதை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வந்த என்.சி.பி. காங்கிரஸ், மெககபூபா முப்தியின் பி.டி.பி, இந்த தேர்தலில் மாநில அந்தஸ்து திரும்புவதைப் பிரதான வாக்குறுதியாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதலமைச்சர் வாகனம் சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற கிரீன் காரிடார் விதியை உமர் அப்துல்லா ரத்து செய்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
- ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவி ஏற்றார்.
- அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், முதல் மந்திரியாக பொறுப்பேற்ற உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம், வெற்றி காண்போம் என தெரிவித்துள்ளார்.
- துணை முதல்வராக சுரேந்தர் குமார் பதவி ஏற்றார்.
- தமிழகத்திலிருந்து திமுக சார்பில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீநகரில் வைத்து நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.
மேலும் துணை முதல்வராக சுரேந்தர் குமார் பதவி ஏற்றார். என்சிபி அமைச்சரவையில் இப்போதைக்குப் பங்குகொள்ளப்போவதில்லை என்றும் வெளியில் இருந்து ஆதரிப்பதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் உமர் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சரத் பவார் தேசியவாத கட்சி எம்.பி. சுப்ரியா சூலே, திமுக சார்பில் எம்.பி.கனிமொழி என பிற மாநில கூட்டணி கட்சயினரும் கலந்துகொண்டனர். அமைத்துள்ள என்சிபி ஆட்சிக்கு உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து இவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Met with Dr. Farooq Abdullah, the president of the JKNC party, and conveyed my best wishes to the newly forming government and the chief minister designate, @OmarAbdullah, at Srinagar along with INDIA bloc leaders @yadavakhilesh, @supriya_sule, Prakash Karat, @ComradeDRaja. pic.twitter.com/h1ZFX5VUU6
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 16, 2024
- ஸ்ரீநகரில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
- பிரதமரும் பொதுக் கூட்டங்கள்தோறும் அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு இன்றைய தினம் ஆட்சியமைத்துள்ளது.
National Conference leader #OmarAbdullah takes oath as Chief Minister of #JammuAndKashmir. pic.twitter.com/lAdQ7zuRXj
— All India Radio News (@airnewsalerts) October 16, 2024
ஸ்ரீநகரில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் என்சிபியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் தற்போதைக்கு பங்கேற்கப்போவதில்லை என்றும் வெளியிலிருந்தே ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹமீத், இப்போதைக்கு ஜம்மு காஷ்மீர் அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ் பங்குகொள்ளப்போவதில்லை. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திரும்ப அளிக்கவேண்டும் என்று நாங்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பிரதமரும் பொதுக் கூட்டங்கள்தோறும் அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. அதனால் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். எனவே இப்போதைக்கு அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. மாநில அந்தஸ்தை மீட்பதற்கான காங்கிரசின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு அமைந்துள்ளது
- தமிழகத்திலிருந்து திமுக சார்பில் கனிமொழி எம்.பி. கலந்துகொள்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு இன்றைய தினம் ஆட்சியமைத்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல் கான்வென்டின் சென்டர் (SKICC) இல் வைத்து காலை 11.30 மணியளவில் பதவியேற்பு விழா தொங்கியது. நிலையில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் முதல்வராக துணை நிலை ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வராக என்.சி.பி. கட்சியின் முக்கிய தலைவர் சுரேந்தர் குமார் பதவியேற்றார். ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு அமைத்துள்ளது. உமர் அப்துல்லாவை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
National Conference leader #OmarAbdullah takes oath as Chief Minister of #JammuAndKashmir. pic.twitter.com/lAdQ7zuRXj
— All India Radio News (@airnewsalerts) October 16, 2024
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா கூட்டணி கட்டியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டுள்ளார். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டுள்ளார்.
- காங்கிரஸ், தேசிய மாநாட்டு கூட்டணிக்கு வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி
- மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கள் அரசு பணியாற்றும்
ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் 56 இடங்களில் போட்டியிட்டு 42 இடங்களில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெட்டி பெற்றுள்ளதால் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார். அவர் 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதலமைச்சராக பதவி வகித்து இருந்தார்.
இந்நிலையில் ஆட்சியை கைப்பற்றியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் கூட்டணி அரசின் தலைவரான உமர் அப்துல்லாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர். மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கள் அரசு பணியாற்றும்" என்று பதிவிட்டுள்ளார்.
- தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா கந்தர்பால் மற்றும் புட்காம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
புட்காம் தொகுதியில் 7 சுற்றுகள் முடிவில் உமர் அப்துல்லா 8612 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தார். சுந்தர்பால் தொகுதியில் 7 சுற்றுகளில் 5958 ஓட்டுகள் கூடுதல் பெற்றுள்ளார்.
இதற்கிடையே உமர் அப்துல்லா கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்கள் என்ன முடிவு எடுத்தாலும் பிற்பகலில் தெளிவாகிவிடும். தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எதிராக இருந்தால் அக்கட்சி குறுக்குவழியில் ஈடுபடக் கூடாது.
5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த இடங்களை நிரப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை என எங்கள் வக்கீல் ஒருவர் கூறியுள்ளார் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜனதா 26, மெகபூபாவின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி-3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு-2, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு-1 இடத்தில் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார். அவர் 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவி வகித்து இருந்தார்.
- நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது.
- ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் பாஜக அரசால் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதற்கு பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்குக் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பயங்கரவாதம் - அரசியல்
இந்த தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் [என்சிபி] காங்கிரஸ் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது, மாநில அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளுடம் களமிறங்கியுள்ள என்சிபி - காங்கிரஸ் கூட்டணியை தனியாக களம் காணும் பாஜக, பயங்கரவாதம், பாகிஸ்தான் தொடர்பு உள்ளிட்ட விமரிசனங்களால் தாக்கி வருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு என்சிபி தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு முடிவுக்கு வாங்க
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு யார் மீது குற்றம் சுமத்துவது என்பது குறித்து அமித்ஷா முதலில் தெளிவான முடிவுக்கு வர வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பேசும்போது காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் தான் காரணம் என்று பாஜக பேசி வருகிறது. அதுவே ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.
பயங்கரவாதத்துக்கு நாங்கள் தான் காரணம் என்று பாஜக உண்மையிலேயே நம்பினால் ஏன் பாகிஸ்தானுடன் பேச கூடாது. நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்குக் காரணம் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா..
பாஜகவால் காஷ்மீர் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இளைஞர்களை காரணமின்றி கைதி செய்து காஷ்மீருக்கு வெளியில் உள்ள சிறைகளில் பாஜக அடைத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக [ராகுல்] காந்தி குடும்பம், [மெகபூபா] முப்தி குடும்பம், [உமர்] அப்துல்லா குடும்பம் ஆகிய மூவரின் கையில் காஷ்மீர் சிக்கியுள்ளது என்று அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை.
- அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கு அம்மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி கடுமையாக எதிர்த்தது. தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சியும் சொல்லி வருகிறது. தேசிய மாநாடு கட்சியும் கூறி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிஃப் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
எங்களோடு பாகிஸ்தானுக்கு என்ன தொடர்பு? நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை. அவர்களுடைய நாடு குறித்து அவர்கள் அக்கறை கொள்ளட்டும். நம்முடைய தேர்தல் அல்லது நம்முடைய தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் தலையிட வேண்டும் என நான் நினைக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும். நாம் நம்முடைய ஜனநாயகத்தில் பங்கேற்று வருகிறோம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "பாகிஸ்தான் என்ன சொன்னது? என்பது குறித்து எனக்குத் தெரியாது. நான் இந்திய குடிமகன்" என்றார்.
பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாகிஸ்தான் ஆகியவரை சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவதில் ஒரே பக்கமாக இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கவாஜா ஆசிஃப் "உண்மையிலேயே, எங்களுடைய கோரிக்கை கூட அதுதான்... தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 370-ஐ சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது சாத்தியம். தற்போது தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் மிக முக்கியத்துவம் உள்ளது. இந்த விசயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் உத்வேகம் அடைந்துள்ளனர். தேசிய மாநாடு கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை தேர்தல் பிரச்சனையாக ஆக்கிவிட்டார்கள்" எனக் கூறியிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்