என் மலர்

    நீங்கள் தேடியது "Omar Abdullah"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
    • ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது.

    மீனம்பாக்கம் :

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது என கூறும் பிரதமர் மோடி, அப்போது ஏன் இங்கு இதுவரை தேர்தல் நடத்தவில்லை. ஜனநாயக திருவிழா கொண்டாட வேண்டும் என்றால் எங்களுக்கு ஜனநாயகத்தை தர வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்பவங்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஜம்மு நகரில் குண்டு வெடிப்பு நடந்தது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டி இல்லை என்று உமர் அப்துல்லா அறிவிப்பு.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேசிய மாநாட்டுக்கட்சி நியமித்து வருகிறது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, பொறுப்பாளர் நியமனம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன் என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார்' என்று தெரிவித்தார்.

    முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இந்த முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவரது தந்தையும், கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லாவும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டசபை தேர்தலுக்காக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

    அதற்கு, 'தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்று பதிலளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார்.
    • காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " பழமையான கட்சி நிலைகுலைவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. பயமாகவும் உள்ளது. நீண்டகாலமாக வதந்திகள் உலா வந்தன. ஆனால் காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    சமீப காலத்தில் கட்சியில் இருந்து விலகிய மிக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அவரது விலகல் கடிதத்தை வாசிப்பது வேதனை தருகிறது" என கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உமர் அப்துல்லா வலியுறுத்தினார்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களை உள்ளடக்கிய செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 8 நாள் கொண்ட இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, ராம்பன் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் கூல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, ‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக எனது கடைசி மூச்சு வரை போராடுவேன்’ என்று சூளுரைத்தார்.

    ‘நாங்கள் எங்களுக்காகவும் எங்கள் வீடுகளுக்காகவும் போராடவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களாகிய உங்களுக்காகவும், உங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காகம் போராடுகிறோம்.  2019, ஆகஸ்ட் 5 அன்று நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே நாம் போராகிறோம். இறுதி மூச்சு வரை போராடுவோம்’ என்றார் உமர் அப்துல்லா.

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திய உமர் அப்துல்லா, இப்பகுதியில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக போராடி பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு இது மிகப்பெரிய அநீதி என்று கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா,தேர்தலுக்கான அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறாக இருப்பதில்லை என கூறியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இதில் பாஜக அதிக இடங்கள் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கணிப்புகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில்,  'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.


    மக்களின் விருப்பம் என்ன என்பது 23ம் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்' என கூறினார்.

    இதையடுத்து காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கருத்துக்கணிப்புகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின்னர் வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாக இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் இருந்தும், தொலைக்காட்சிகளில் இருந்தும் நாம் வெளிவர வேண்டும். தேர்தல் முடிவுகளுக்காக 23ம் தேதி வரை அனைவரும் காத்திருக்க தான் வேண்டும்.

    ஒரு அரசியல் கட்சி கருத்துக்கணிப்புகளில் வெற்றி பெறும் சூழலை உருவாக்கவில்லை என்றால், அக்கட்சி ஏற்கனவே தேர்தல் ஆட்டத்தில் தோற்றுவிட்டது என்று தான் அர்த்தமாகும்.     

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.



     
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தாததால் பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #OmarAbdullah #Modi
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

    இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி பாகிஸ்தானிடம், பயங்கரவாதிகளிடம், ஹூரியத் அமைப்பிடம் (பிரிவினைவாத அமைப்பு) சரண் அடைந்துவிட்டார். நன்றாக செய்து விட்டீர்கள் மோடி. 56 அங்குல மார்பு தோற்றுப்போய் விட்டது” என கூறி உள்ளார்.

    மேலும், “காஷ்மீர் தேர்தல் மீது சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், உலக அரங்கில் பிரதமர் மோடி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புவார் என நான் ஒருபோதும் கருதவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா ஆலோசித்தார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாவது சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.

    குறிப்பாக, உத்தரகாண்ட மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.

    இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று மாலை டெல்லி வந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். பிற மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா சுமார் 30 நிமிடங்கள் ஆலோசித்தார்.



    தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்த ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கவனமாக கேட்டறிந்த ராஜ்நாத் சிங், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #OmarmeetsRajnath #safetyofKashmiristudents #Kashmiristudents #PulwamaAttack
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதித்தது பா.ஜ.க.தான் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். #Omar #JKMilitancy
    ஸ்ரீநகர்:

    மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றிருப்பதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டு ஒப்பீடு செய்தார். இதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் கதை என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    “ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொல்ல வேண்டிய அளவிற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறையை மீண்டும் தலைதூக்க அவர்கள் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? என்கிற கதையைத்தான் உண்மையில் மந்திரி சொல்லியிருக்கிறார். நீங்கள் தெரிவித்த புள்ளி விவரங்களால் நீங்கள் வருத்தப்பட வேண்டுமே தவிர, சாதனையாக கருதக்கூடாது” என உமர் கூறியுள்ளார். #Omar #JKMilitancy
    ×