என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றுமை சிலை"

    • அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்.

    ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை பார்வையிட்டார்.

    இந்நிலையில் அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    சபர்மதி ஆற்றங்கரையில் காலை ஓட்டப் பயிற்சி செய்து ஒற்றுமை சிலையை பார்வியிட்ட படங்களை முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தலத்தில் பகிர்ந்தார்.

    இதை பிரதமர் மோடி மறுபதிவு செய்து, 'காஷ்மீரிலிருந்து கெவாடியா வரை. சபர்மதி ஆற்றங்கரையில் ஒற்றுமை சிலையைப் பார்வையிட்ட உமர் அப்துல்லாவைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    அவரது வருகை ஒற்றுமையின் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. மேலும் நமது சக இந்தியர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    குஜராத் பாஜக அரசால் ரூ. 2,989 கோடி செலவில் கட்டப்பட்ட ஒற்றுமை சிலை கடந்த 2018 இல் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

    • மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

    அகமதாபாத்:

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் நேற்று பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தினார்.

    இதுதொடர்பாக பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம் மற்றும் சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஒற்றுமை சிலையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×