search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SCULPTURE"

    • மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
    • சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் புதிய "ஏசி வால்வோ" பஸ் சுற்றுலாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் முதல் பயணமாக சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளி, தாம்பரம் காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 80 பேரை, கல்வி சுற்றுலாவாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலாத்துறை அழைத்து வந்தது.

    அவர்களுக்கு மாற்றுத்திறனாளி கல்வி ஆசிரியர்கள் அவர்களது பாடமொழியில் சிற்பங்களை காண்பித்து அதன் சிறப்பு மற்றும் வரலாற்று விபரங்களை எடுத்து கூறினார்கள். மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் புராதன சின்னம் சிற்பங்கள் இருக்கும் பகுதிக்கு பாறைமேல் நடந்து சென்று அதை உணர்ந்து, சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர். இதனை பார்த்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கூடக்கோவில் கண்மாய் கரையில் அமைந்துள்ள கருப்பணசாமி கோவிலில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாண வர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அந்த கல்லூரியின் வர லாற்றுத்துறை பேராசிரிய ரும் பாண்டியநாடு பண் பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் கூடக் கோவில் சென்று கள ஆய்வு மேற் கொண்டனர். அப்போது 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர் மற்றும் அய்யனார் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறுகை யில், இந்த சிற்பங்கள் பாண்டியர்கள் காலத்து கலைநயத்துடன் வடிவமைக் கப்பட்ட சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பம் ஆகும்.

    இந்த 2 சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சிவன்கோவில் இருந்திருக்க வேண்டும் என தெரியவருகிறது. சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவில் கட்டு வதற்காக மண் எடுத்த போது மண்ணுக்கடியில் 3 கற்சிற்பங்கள் கிடைத்தது.
    • 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த பைத்தாம்பாடி சத்திரம் ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மொச காத்தம்மன் கோவில் கட்டு வதற்காக மண் எடுத்த போது மண்ணுக்கடியில் 3 கற்சிற்பங்கள் கிடைத்தது. இது குறித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதுகலை வரலாறு படிக்கின்ற மாண வர்கள் குமரகுரு மற்றும் சூர்யா ஆகியோர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசி ரியர் ரமேஷ் மற்றும் தொல்லியல் மற்றும் முனை வர் பட்டம் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோ ருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து வந்த ஆய்வார்கள் இம்மானுவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் அங்கே இருந்த கற்சிற்பத்தை ஆய்வு செய்து அவை 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :-

    சப்தமாதர்கள் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்தி ராணி, சாமுண்டி, போன்ற வராவார், சப்தமாதர்க ளுக்கு தொடக்க காலத் தில் படிமங்கள் ஏதும் உரு வாக்கப்படாமல் 7 கற்களை பிரதிஷ்டை செய்து கடவுளாக எண்ணி வணங்கி னார். முற்கால சோழர்கள் தாங்கள் எடுத்த சிவாலயங்களில் அஷ்ட பரிவார தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவருக்கும் திரு உருவம் செய்து தேவ கோட்டத்தில் (கருவரை சுவற்றில்) அமைத்தனர், சோழர்கள் தாங்கள் எடுத்த கோவில்களில் அனைத்தி லும் சப்தமாதர்களுக்கு திரு மேனி எடுத்து சிறப்பித்தனர்.

    பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் கண்டெடுத்த சப்தமாதர்கள் மகேஷ்வரி, பிராமி, மற்றொரு சிற்பம் முகம் முற்றுபெறாத நிலை யில் அடையாளம் காண முடியாமல் உள்ளது. மகேஷ்வரி, பிராமி சிற்பங்கள் அவரவர்களுக்கு ரிய ஆயுதங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சி யளிக்கிறார்கள்.கண்டெ டுத்த சிற்பங்கள் கை, முகம் போன்றவை சிறிது சிதைந்த நிலையில் உள்ளது. இங்கே இருக்கின்ற சிற்பங்களை பார்க்கும் போது இப்பகுதி யில் சப்தமாதர்கள் கோயில் இருந்திருக்கலாம் என அறியமுடிகிறது. கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கிக் கொண்டி ருக்கும் இந்த வரலாற்று கலைச்செல்வங் களை பாதுகாப்பது நம் கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
    • ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சென்னை தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள மாவட்ட மர சிற்பக் கலைஞர்கள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு விருக்ஷா - மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கி பயிற்சி முகாமில் தொடக்கி வைத்தார்.

    தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் வரவேற்றார். இதில் ஓவியர்கள் அய்யப்பா, ராஜப்பா, தமிழ்நாடு தொழில், புத்தக நிறுவன திட்ட முன்னோடி செந்தமிழ் அரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மர சிற்பக் கலைஞர் சக்திவேல் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    • அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
    • வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களும், கலை பொருட்களும் பாதுகாப்பின்றி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகத்தை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். போதிய இட வசதி மற்றும் கட்டமைப்பு இல்லாததால், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களும், கலைப் பொருட்களும், முக்கிய ஆவணங்களும் பாதுகாப்பின்றி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கெனவே, இது தொடர்பாக சட்டப்பே ரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதாகவும், அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழைய பாரம்பரிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த பாரம்பரிய கட்டிடம் ரூ.1.4 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு புதிய காட்சிக் கூடங்களுடன் மேம்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதை எம்.எல்.ஏ சுட்டிக்காட்டினார்.

    அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டு மென்றும், நாகையின் வரலாற்றுச் சிறப்புக்கு ஏற்ப அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    • புதுக்கோட்டையிலிருந்து லண்டனுக்கு கல் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுகிறது
    • சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் கிடைக்கும் பாறைகள் கற்சிலைகள் செய்ய ஏதுவாக இருப்பதால், இங்கு அதிகமான இடங்களில் சுவாமி, அம்மன் சிலைகள், கல் சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாட்டங்கள், மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுவதால், இம்மாவட்டம் சிலை வடிப்பில் முன்னோடியாக விளங்குகிறது.

    இந்நிலையில் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இக்கோவிலில் அம்மனுக்கு ெசலுத்தப்பட்ட காணிக்கை, பக்தர்களின் நன்கொடை மூலம் கோவிலின் அனைத்து பகுதிகளையும் 7 அடி உயரத்துக்கு கல்லால் அமைக்க திட்டமிட்ட அந்த கோவிலின் நிர்வாகிகள், இக்கோவிலுக்கான கல் சிற்பங்கள் செய்யும் பணியை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்த சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரம் பகுதியில் லண்டன் பத்ரகாளி அம்மன் கோவில் கட்டுமானத்து தேவையான சிற்பங்கள் செய்ய கற்கள் கொண்டுவரப்பட்டு, கல்சிற்பங்கள் செதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    தற்போது ஆழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிற்பங்கள் செதுக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து சிற்பங்களும் தனித்தனியாக 51 மரப்பெட்டிகளுக்குள் வைத்து அடைக்கப்பட்டன. அந்த பெட்டிகள் கிரேன் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அங்கிருந்து கப்பல் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படடவுடன், கோவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    ×