என் மலர்tooltip icon

    உலகம்

    எகிப்துக்கு சொந்தமான 3,500 ஆண்டு பழமையான சிற்பத்தை திருப்பி அனுப்பும் நெதர்லாந்து
    X

    எகிப்துக்கு சொந்தமான 3,500 ஆண்டு பழமையான சிற்பத்தை திருப்பி அனுப்பும் நெதர்லாந்து

    • கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
    • மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.

    நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் நகரில் கலை மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது எகிப்துக்கு சொந்தமான ஒரு கல்சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த சிற்பம் எகிப்து மன்னர் மூன்றாம் துட்மோஸ் வம்சத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனவும், சட்ட விரோதமாக இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.

    இந்தநிலையில் எகிப்துக்கு சொந்தமான கல்சிற்பத்தை நெதர்லாந்திடம் திருப்பி ஒப்படைப்பதாக பிரதமர் டிக் ஸ்கூப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×