search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "netherland"

    • கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
    • தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ச் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்துள்ளது.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் நான்கு விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்யன் டட் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
    • தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை மட்டுமே வீழ்த்தி இருக்கும் நெதர்லாந்து அணி, தொடர் தோல்விகளுக்கு இன்றைய போட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.

    நெதர்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் 3000 கார்களை ஏற்றி சென்ற ஒரு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

    இச்சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார்.

    199 மீட்டர் நீளமுள்ள பனாமாவில் பதிவு செய்யப்பட்ட "ஃப்ரெமாண்டில் ஹைவே" எனும் கப்பல் ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அக்கப்பலில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் கடலில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:

    இறந்த இந்திய மாலுமியின் குடும்பத்தோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் செய்கிறோம். காயமடைந்த 20 பேருடனும் தொடர்பில் உள்ளோம். அந்த கப்பல் நிறுவனத்திடமிருந்தும், நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்தும் தேவைப்படும் தகவல்களை பெற்று வருகிறோம்.

    இவ்வாறு தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    23 மாலுமிகளை மீட்க மீட்பு படகுகளும், ஹெலிகாப்டர்களும் உபயோகப்படுத்தப்பட்டதாக டச்சு கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

    தீ விபத்து குறித்து வெளியாகும் படங்களில் அக்கப்பலிலிருந்து புகை வருவது தெரிகிறது. கப்பலில் இருந்த 25 எலக்ட்ரிக் கார்களில் ஒன்றிலிருந்து இந்த தீ உருவாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ உருவாகி 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.

    தீயை முழுவதும் அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தீயை அணைக்க நீரை கப்பலில் கொண்டு தேக்கி வைத்து பயன்படுத்தும் போது நீரின் பாரத்தினால் கப்பல் கவிழ்ந்து விடும் ஆபத்து இருப்பதால், தீயை அணைக்க சரியான வழிமுறையை திட்டமிட வேண்டும் எனவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    வாடன் கடலில் உள்ள அமலேண்ட் தீவின் கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் அருகே இக்கப்பலிலிருந்து உதவி கோரும் அழைப்பு முதலில் வந்ததாக கடலோர காவற்படை தெரிவித்தது.

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் பலியாகினர். #NetherlandShooting
    ஹாக்:

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வாகனத்தில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.  #NetherlandShooting
    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



    இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    ஒடிசாவில் நடந்துவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று அரையிறுதியில் மோதும் அணிகள் வெற்றி பெற சுதர்சன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்தியுள்ளார். #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

    அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.  #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018
    புவனேஸ்வரம்:

    14-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது சுற்றில் அந்த அணி கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்குள் கால் பதித்தது. தற்போதைய உலக தரவரிசையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இந்திய அணியை (5-வது இடம்) விட நெதர்லாந்து அணி (4-வது இடம்) ஒரு இடம் தான் முன்னணியில் உள்ளது.

    ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் 105 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 48 முறையும், இந்திய அணி 33 தடவையும் வென்று இருக்கின்றன. 24 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் இரு அணிகளும் 6 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

    நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய மோசமான நிலையை மாற்றி உள்ளூரில் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைப்பிடிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த காலங்களில் எங்களுக்கு எதிராக நெதர்லாந்து அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் சமீப காலங்களில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் அவர்களை வீழ்த்தி இருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தோம். இந்திய  ஹாக்கி அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும்.’ என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘130 கோடி இந்திய மக்களின் விருப்பம் என்னவோ? அது தான் எங்களுடைய விருப்பமாகும். இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்கிறார்கள். நெதர்லாந்து அணியின் எத்தகைய சவாலையும் சமாளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    நெதர்லாந்து அணியின் கேப்டன் பில்லி பாக்கெர் கூறுகையில், ‘ஆட்டம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தாலும் எப்பொழுதும் நாங்கள் எங்களுக்குரிய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு நிறைய நெருக்கடி இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. எங்களை விட இந்திய அணிக்கு அதிக நெருக்கடி இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

    முன்னதாக மாலை 4.45 மணிக்கு அரங்கேறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018
    உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது. #HockeyWorldCup2018
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தைப்பிடிக்கும் அணிகள் ‘கிராஸ் ஓவர்’ என அழைக்கப்படும் 2-வது சுற்றுக்கு நுழையும். கடைசி இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும்.

    9-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிந்தது. அதன்படி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, ஆகிய 4 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    கிராஸ் ஓவர் ஆட்டம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடந்தது. இதன் முடிவில் நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதியில் நுழைந்தன. 4 முறை சாம்பியனான பாகிஸ்தான், கனடா, சீனா, நியூசிலாந்து அணிகள் வெறியேற்றப்பட்டன.

    கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் மோது கின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை (13-ந்தேதி) எதிர்கொள்கிறது.

    1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும், 5-1 என்ற கணக்கில் கனடாவையும் வீழ்த்தியது. 2-2 என்ற கணக்கில் பெல்ஜியத்துடன் ‘டிரா’ செய்தது.

    3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தது. 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும், 7-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது. கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    இந்திய அணிக்கு நெதர்லாந்தை வீழ்த்துவது கடும் சவாலாகவே இருக்கும். #HockeyWorldCup2018
    நெதர்லாந்தில் முகம்மது நபி குறித்து எம்.பி ஒருவர் நடத்தும் கார்டூன் போட்டிக்கு பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    நெதர்லாந்தில் வலதுசாரி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கீர்ட் வில்டெர்ஸ் முகம்மது நபி குறித்து கார்டூன் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார். போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், கார்டூன்களை பாராளுமன்றத்தில் உள்ள தனது அறையில் வைக்க இருப்பதாகவும் வில்டெர்ஸ் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த கார்டூன் போட்டிக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று கூடிய அந்நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இது தொடர்பாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

    இதனை அடுத்து பேசிய பிரதமர் இம்ரான் கான், இது போன்ற செயல்களால் முஸ்லிம்கள் எவ்வளவு மனவேதனை அடைவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என கூறினார். மேலும், ஆளும் பிடிஐ கட்சி நெதர்லாந்து எம்.பி.ஐ கண்டித்து லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை கண்டன பேரணி நடத்த உள்ளனர். 


    கீர்ட் வில்டெர்ஸ்

    இதற்கிடையே, வில்டெர்ஸின் கார்டூன் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து வெளியுறவு மந்திரியிடம் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி பேசியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    மேலும், ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் இது தொடர்பாக முறையிடப்படும் எனவும் குரேஷி தெரிவித்துள்ளார்.
    ×