என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padma Shri"

    • மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
    • கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.

    இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அவரது மனைவி சுசீலா மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்கு பிறகு கல்வி கட்டணம் செலுத்த வழியின்றி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி பத்திரிகையில் வெளியானது.

    இதுகுறித்து தகவலறிந்த மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் வாசுகி மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளும்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கலெக்டர் அறிவுரையின்பேரில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து வாசுகி ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அவர் நேற்று கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.

    இதுகுறித்து வாசுகியின் தாயார் சுசீலா கூறியதாவது:-

    "எனது மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய பத்திரிகைகள், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. எனது மகள் முழுமையாக படிக்க அனைத்து உதவிகளையும் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்களின் கல்விக்கான உதவி மற்றும் நாங்கள் குடியிருக்க அரசு சார்பில் கோத்தகிரியில் ஒரு வீடும் கட்டி கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    • உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
    • ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர்

    இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 131 பேருக்கு, ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துளது.

    இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்ட காங்கிரஸ், "பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடிக்கு வாழ்த்துகள். ஐஐடி மெட்ராஸில் கோமியம் குறித்த உங்கள் அதிநவீன ஆராய்ச்சியை அங்கீகரித்து, கோமியத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக நாடு உங்களுக்கு இந்த கௌரவத்தை அளித்துள்ளது" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    கேரள காங்கிரஸின் இந்த விமர்சனத்திற்கு சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி கொடுத்துள்ளார். காமகோடி மைக்ரோ-புராசஸர் வடிவமைப்பில் நிபுணர் என்றும், ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர் என்றும் கூறி காங்கிரஸின் கருத்தை "காலனித்துவ மனநிலை" என்று விமர்சித்துள்ளார்.

    கோமியம் குறித்து காமகோடி கூறியது என்ன?

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என கடந்தாண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் காமகோடி பேசியிருந்தார்.

    ஒரு முதன்மையான தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைப்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்ற விமர்சனங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது. இந்நிலையில் இதனை காங்கிரஸ் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.  

    • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.
    • பெரியார் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர்

    பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளுக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

    சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டதற்கு ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

    பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்" என்று உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    பெரியார் குறித்த ரஞ்சனி, காயத்ரியின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர்.இது தொடர்பாக எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி, காயத்திரிக்கு எத்தனை ஆணவம். இது பெரியார் மண்" என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
    • 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுருக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    விளையாட்டுத் துறையில் தங்கள் சாதனைகளுக்காக பல்தேவ் சிங், பகவான் தாஸ் ரைக்வார் மற்றும் கே. பஜனிவேல் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை'யை வடிவமைத்தார்.
    • சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.

    புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் சுதர் காலமானார். அவருக்கு வயது 100.

    வயது முதிர்வு காரணமாக உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    பிப்ரவரி 19, 1925 அன்று மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதர் தனது திறமையால் சிற்பக் கலைஞராக உருவெடுத்தார்.


    குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' உள்ளிட்ட பிரமாண்ட சிலைகளை ராம் சுதர் வடிவமைத்திருந்தார்.

    சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர்.

    இந்த வருடம், நாட்டின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஸ்வாமி பிரதிபாந்தா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

    பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் பிரதிபாந்தா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆசிரமத்தின் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியும் பின்னர் மிரட்டியும் கடந்த 2013 முதல் தன்னை பலமுறை பிரதிபாந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

    புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2012 டிசம்பரில் பிரதிபாந்தாவை சந்தித்தார். பள்ளியில் வேலை தருவதாக உறுதியளித்து அவரை ஆசிரம விடுதியில் தங்க வைத்துள்ளார். பின்னர் தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பின்னர் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி விடுதியிலிருந்து அனுப்பி வைத்தார். இடையில் 2013 இல் அப்பெண்ணை ஆசிரம பள்ளி ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

    அதை அப்பெண் எதிர்த்தபோதும் மருத்துவர் மற்றும் ஆசிரம ஊழியரகள் முன்னிலையில் அவரை மிரட்டடி அதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதுபோல முர்ஷிதாபாத்தில் உள்ள ஆசிரமத்தின் வெவ்வேறு கிளைகளுக்கும் அவரை அழைத்துச்சென்று வன்கொடுமைக்கு செய்து வந்துள்ளார். தான் மனரீதியாக உடைந்த நிலையில் இருந்து வந்தேன் என்று அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    கடைசியாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி அப்பெண் சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரை ஜூன் 13 இரவு பெராபூர் என்ற இடத்துக்கு வரச்சொல்லியுள்ளார்.

    அங்கு சென்ற தன்னை 2 நபர்கள் அணுகி, மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர் என்று அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இது எல்லாம் தன்மீதான அவதூறு என பிரதிபானந்தா மறுத்துள்ளார். 

    • சாத்வி ரிதம்பரா, ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித் ஆகியோர் பத்ம பூஷன் பெற்றனர்.
    • தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, மத்திய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் அறிவித்தது.

    முதல் கட்டத்தில், நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் என மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்து எஞ்சியுள்ள  68 விருத்தாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளைச் செய்த புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    அந்த வகையில் இந்த நிகழ்வில் பிரபல நடிகை ஷோபனா பத்ம பூஷன் விருதைப் பெற்றார். தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் பத்ம பூஷன் வழங்கப்பட்டது.

    முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், குமுத்னி ரஜினிகாந்த் லக்கியா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

    மேலும், சாத்வி ரிதம்பரா, ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித் ஆகியோர் பத்ம பூஷன் பெற்றனர்.

    பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் மறைவுக்குப் பிறகு கவுரவிக்கப்பட்டனர்.

    கண்ணப்பா சம்பந்தன், டாக்டர் நீர்ஜா பட்லா, மந்த கிருஷ்ண மடிகா, சையத் ஐனுல் ஹசன், சாந்த் ராம் தேஸ்வால் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.

    • "சேட்டு (மரம்) ராமையா" , "வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
    • ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

    தெலுங்கானாவை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 'வனஜீவி' ராமையா இன்று (சனிக்கிழமை) மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 87.

    தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" ,"வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்படும் தாரிபள்ளி ராமையா கடந்த பல தசாப்தங்களாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

    இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    அவரின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவு சுற்றுசூழல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது . இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

    • பத்ம விருது பெற தேர்வாகியுள்ளவர்களுக்கு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.

    பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த் ஆகியோருக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்திய நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ம விபூஷன் விருது பெற்ற கலைஞர்கள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமிய கலையான கும்மி ஆட்ட பயிற்சியாளர் பத்தரப்பன், சின்னப்பா, இயற்கை விவசாயி செல்லம்மாள் உள்ளிட்ட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

    சுதந்திரம் குறித்து அவதூறாகப் பேசிய கங்கனா ரணாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    புதுடெல்லி:

    பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரணாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார்.

    கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், எனது சில கேள்விகளுக்கு பதிலளித்தால் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கத் தயார் என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு தெரிந்தவரை 1947-ம் ஆண்டில் எந்த போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அது பற்றி யாராவது எனக்கு சொல்லட்டும். வெள்ளையர்கள் நாட்டை ஏன் பிரித்தனர்?. 1947ல் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு பதில், மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டது ஏன்? 

    எனது கேள்விக்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின், 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் திருப்பிக் கொடுத்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். #PadmaShri #AribamSyamSharma
    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் அரிபம் ஷியாம் சர்மா (83). இவர் பிரபல மணிப்பூர் சினிமா டைரக்டராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.



    இவர் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்தது. அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அண்டை நாடுகளான வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதிவரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு அதிவிரைவாக குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.

    இதற்கு மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த விருதை திரும்ப அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    டைரக்டர் சர்மா பல தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #PadmaShri #AribamSyamSharma

    ×