என் மலர்
நீங்கள் தேடியது "AmarnathYatra"
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
- யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும்.
இந்த உத்தரவை தொடர்ந்து ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே ஜம்மு காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
யாத்திரை வருபவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்யும். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் படிப்படியாக குறைந்து எல்லைப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.
கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே வரும் 28-ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் நோக்கத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மிகுந்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காஷ்மீர் சென்றுள்ள மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்மாநில கவர்னர் என்.என்.வோஹ்ராவுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமர்நாத் யாத்திரைக்காக, பல்தால் ராணுவ தளத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர். #AmarnathYatra






