என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமர் அப்துல்லா"

    • அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    யாத்திரை வருபவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்யும். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் படிப்படியாக குறைந்து எல்லைப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக ஒப்புதல் அளித்து அறிவித்தன.

    இந்நிலையில், தாக்குதல் நிறுத்த அறிவுப்புக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்த முடிவை வரவேற்கிறேன். இந்த முடிவு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், உயிரிழப்புகள், பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்காது.

    மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவது ஜம்மு காஷ்மீர் அரசின் கடமை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தை கையில் எடுத்துள்ளது
    • நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    சிறப்பு அந்தஸ்து ரத்து 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

    இது காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையைத் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததையும் பார்க்க வேண்டி உள்ளது.

     

    சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு 

    இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீருக்கு முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    அரசியல் களம்

    இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

     

    தீர்மானம் 

    தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா பேசுகையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  

    ×