என் மலர்
இந்தியா

இந்தியா- பாக்., சண்டை நிறுத்தத்திற்கு காஷ்மீர் முதல்வர் வரவேற்பு
- இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக ஒப்புதல் அளித்து அறிவித்தன.
இந்நிலையில், தாக்குதல் நிறுத்த அறிவுப்புக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்த முடிவை வரவேற்கிறேன். இந்த முடிவு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், உயிரிழப்புகள், பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்காது.
மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவது ஜம்மு காஷ்மீர் அரசின் கடமை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






