என் மலர்
நீங்கள் தேடியது "சட்டப்பிரிவு 370"
- தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
- நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.
இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
- அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்த பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்த சூழலில், ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஊகங்கள் எழுந்தன.

இந்த சூழலில், இன்று (ஆகஸ்ட் 5) ஆம் தேதி மத்திய அரசு மாநில அந்தஸ்து குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இருப்பினும், இந்த செய்திகளை முதல்வர் அப்துல்லா மறுத்தார். அவரது எக்ஸ் பதவில், 'ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற செய்திகளை நான் கேள்விப்பட்டேன். இருப்பினும், அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை. நாளை எதுவும் நடக்காது.
சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தில் தெளிவு வரும் என்று நான் நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.
- பிரிவு 370 இருந்தபோது, காஷ்மீர் ஒரு சிறப்புப் பகுதி என்ற உணர்வு இருந்தது.
- 65 சதவீத வாக்குப்பதிவே இதற்கு சான்று
2019 இல், சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு விளக்கம் கொடுக்கும் எம்.பி.க்கள் குழு ஒன்று இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவுடன் சல்மான் குர்ஷித் சென்றார்.
அங்கு வைத்து பேசிய அவர், "பிரிவு 370 இருந்தபோது, காஷ்மீர் ஒரு சிறப்புப் பகுதி என்ற உணர்வு இருந்தது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உணரப்படவில்லை. அங்குள்ள பலர் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர்.
மத்திய அரசு 2019 இல் பிரிவு 370 ஐ ரத்து செய்த பிறகு இந்த கருத்து மறைந்துவிட்டது. இந்த முடிவு ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு நடைபெற்ற சமீபத்திய தேர்தல்களில் 65 சதவீத வாக்குப்பதிவே இதற்கு சான்று," என்று குர்ஷித் கூறினார்.
முந்தைய காலங்களில் சல்மான் குர்ஷித் பிரிவு 370 குறித்து வேறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தும் பாஜகவை மறைமுகமாகப் பாராட்டியுள்ளது காங்கிரசுக்கு கூடுதல் சங்கடமாக மாறியுள்ளது.
- ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.
- இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பாராளுமன்றம் எடுத்த முடிவை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.
இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Today's Supreme Court verdict on the abrogation of Article 370 is historic and constitutionally upholds the decision taken by the Parliament of India on 5th August 2019; it is a resounding declaration of hope, progress and unity for our sisters and brothers in Jammu, Kashmir and…
— Narendra Modi (@narendramodi) December 11, 2023
- பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
- அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.
பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.
காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.
ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.
மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.
அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள்.
பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் சோனிபட் கோஹனாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
2024 மக்களவை தேர்தல் ஒரு போர் போன்றது. ஒரு மக்கள் வளர்ச்சி, மறுபக்கம் வாக்கு ஜிஹாத். யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை அரியானா மக்களிடம் கேட்க விரும்புகிறேன். (சிறிது நேரம் காத்திருந்த மோடி, மோடி ஆட்சி என்று மக்கள் முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி) உங்கள் பதில் முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும் என தைரியத்திற்கு பெயர்போன அரியானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சொல்ல விரும்புகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தடையாக விளங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் மயானத்தில் புதைத்துவிட்டோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.
- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி 5 வருடங்கள் முடிவடைந்த நிலையில், 6-வது வருடம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உழைத்து அவர்களின் அபிலாஷைகளை வரும் காலங்களில் நிறைவேற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
ரத்து செய்யப்பட்டதன் மூலம் வளர்ச்சியின் பலன்களை இழந்த பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பு கிடைத்ததுள்ளன.
அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக ஆட்கொள்ளப்பட்ட ஊழலைத் தடுத்து நிறுத்துவதை உறுதி செய்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
- சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மோசமடைந்தது.
- இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ம் ஆண்டு அகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கியது.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு 4 வருடங்கள் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் முக்கியமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது நாட்டிற்கு வரலாறு கிடையாது. அது அவர்களுடைய கட்சியின் வரலாறு. நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் இந்து இந்தியாவை விரும்பினார்கள். ஆனால் நேரு, பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அந்த நேரத்தில் அதற்கு முடியாது எனத் தெரிவித்தார்கள்.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை நம்பும் மதசார்பற்ற நாடு. காஷ்மீர்- தமிழ்நாடு அல்லது அசாம் அல்லது மகாராஷ்டிரா இடையிலான பொதுவானது என்ன? நாம் மற்றவர்கள் மொழியை கூட பேசவில்லை. ஒரே மாதிரியான கலாசார விசங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. நம்முடைய உணவு பழக்க வழக்கம் மாறுபட்டவை. மதம், ஜாதி, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பிரகாசமான, வலிமையான இந்தியாவைக் கொண்டுவருவதற்கு ஒன்றிணைக்கிறது.
பாகிஸ்தான் முஸ்லிம் நாடானது. நாம் அவ்வாறு இல்லை. நாம் பல மதங்கள் கொண்ட நாடு. பன்மொழி நாடு, அப்படியே இருப்போம்.
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தை கையில் எடுத்துள்ளது
- நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
சிறப்பு அந்தஸ்து ரத்து
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
இது காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையைத் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததையும் பார்க்க வேண்டி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீருக்கு முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அரசியல் களம்
இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

தீர்மானம்
தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா பேசுகையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
- பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுவார்கள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இது காஷ்மீர் மக்களின் நலனை பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறன. இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது கட்டத் தேர்தல் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் - என்சிபி கூட்டணி ஆகியவை பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் காஷ்மீரிலும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காகவும் பிரச்சார சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அரியவாவில் பரிதாபாத் நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2 நாட்களாக நான் ஜம்மு காஷ்மீரில் இருந்தேன். அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. எனவே நான் விமான நிலயத்தினுள் சென்றேன். அப்போது ஒரு மனிதர், 'யோகி சாஹேப் ராம் ராம்' என்று கூறி என்னை வரவேற்றார். அந்த மனிதர் ஒரு மௌலவி [இஸ்லாமிய மத போதகர்] என்று பின்னரே உணர்ந்தேன். ஒரு இஸ்லாமிய மத போதகரிடம் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது குறித்து ஆச்சர்யம் அடைந்தேன். சிறப்பு அந்தஸ்தை [சட்டப்பிரிவு 370 ஐ] நீக்கியதன் தாக்கமே இது. இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] தெருக்கள் தோறும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கூட கோஷமிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். யோகிஆதித்யநாத்தின் பேச்சைக் கேட்டு பிரச்சார கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பினர். மேலும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த 7 வருடங்களாக எந்த போராட்டங்களும் கலவரங்களும் நடக்கவில்லை என்றும் யோகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை காண்பித்த எம்.எல்.ஏ.
- எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. சட்டமன்றம் கூடியதும் மக்களவை எம்.பி.யான இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை காண்பித்தார்.
இதற்கு ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமர வற்புறுத்தினார். இருந்தாலும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்களை வெளியேற்ற பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.எ.-க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
- சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர தீர்மானம்.
- பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்து முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மக்களவை எம்.பி.யான இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்து காண்பித்தார்.
இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளில் ஈடுபட எம்.எல்.ஏ.-வுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியது. இன்றும் 370 சட்டப்பிரிவு தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளில் ஈடுபட்டனர். அப்போது அவாமி கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை உருவானது.
இதனால் சபாநாயகர் அப்துல் ரஹிம் ராதர், பாதுகாவலர்களை அழைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.-க்கள் வெளியே மறுப்பு தெரிவித்ததால் குண்டுகட்டாக தூக்கி அவையில் இருந்து அப்புறப்படுத்தினர்.






