என் மலர்
நீங்கள் தேடியது "Special Status"
- தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
- நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.
இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
- அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்த பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்த சூழலில், ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஊகங்கள் எழுந்தன.

இந்த சூழலில், இன்று (ஆகஸ்ட் 5) ஆம் தேதி மத்திய அரசு மாநில அந்தஸ்து குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இருப்பினும், இந்த செய்திகளை முதல்வர் அப்துல்லா மறுத்தார். அவரது எக்ஸ் பதவில், 'ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற செய்திகளை நான் கேள்விப்பட்டேன். இருப்பினும், அவை உண்மை என்று என்னால் நம்ப முடியவில்லை. நாளை எதுவும் நடக்காது.
சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தில் தெளிவு வரும் என்று நான் நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.
- பிரிவு 370 இருந்தபோது, காஷ்மீர் ஒரு சிறப்புப் பகுதி என்ற உணர்வு இருந்தது.
- 65 சதவீத வாக்குப்பதிவே இதற்கு சான்று
2019 இல், சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு விளக்கம் கொடுக்கும் எம்.பி.க்கள் குழு ஒன்று இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவுடன் சல்மான் குர்ஷித் சென்றார்.
அங்கு வைத்து பேசிய அவர், "பிரிவு 370 இருந்தபோது, காஷ்மீர் ஒரு சிறப்புப் பகுதி என்ற உணர்வு இருந்தது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உணரப்படவில்லை. அங்குள்ள பலர் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர்.
மத்திய அரசு 2019 இல் பிரிவு 370 ஐ ரத்து செய்த பிறகு இந்த கருத்து மறைந்துவிட்டது. இந்த முடிவு ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு நடைபெற்ற சமீபத்திய தேர்தல்களில் 65 சதவீத வாக்குப்பதிவே இதற்கு சான்று," என்று குர்ஷித் கூறினார்.
முந்தைய காலங்களில் சல்மான் குர்ஷித் பிரிவு 370 குறித்து வேறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தும் பாஜகவை மறைமுகமாகப் பாராட்டியுள்ளது காங்கிரசுக்கு கூடுதல் சங்கடமாக மாறியுள்ளது.
- பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
- எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.
- பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தினார்.
- சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கினால், பீகாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற சிறிது காலம் போதும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, லாலு பிரசாத் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என ஆவேசமாக குறிப்பிட்டார்.
- பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
சமீபத்தில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அரசு கூறியது. எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பீகார் அமைச்சரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதை முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் மாநிலத்தில் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், மத்திய அரசு உதவினால் இந்தப் பணிகளை செய்துமுடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாகப் பிரித்தது.
- காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.
16 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளிக்கவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும்.
- அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும்.
பிரிவினை மறு சீரமைப்பு சட்டம் 2014-ன் படி அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.
- தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களது அடிப்படை கோரிக்கை என்று மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும். மாநிலக் கட்சிகள் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் கவலையில்லை. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல" என்று அவர் தெரிவித்தார்.
- பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்து மோடி மூன்றாவது முறையாக பிரதமரானார். இந்த கூட்டணியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராளுமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவை பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், நிதிஷ்குமார் மற்றும் அவரது கட்சியின் தலைவர்கள் மத்திய அரசின் அதிகாரத்தை அனுபவித்து கொண்டு, சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தொடர்பான பாசாங்குத்தனமான அரசியலை தொடரலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 11 மாநிலங்களுக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.
இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அப்போது, மத்திய பட்ஜெட்டில் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று நேற்று தெரிவித்த மத்திய அரசு தற்போது பீகார் மாநிலதிக்ரு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நான் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தேன். எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரினேன்.
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் முன்னரே அது கிடைக்காது என்று பலரும் பேசினார்கள். இப்போது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசியுள்ளார்.
- இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
- பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுவார்கள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இது காஷ்மீர் மக்களின் நலனை பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறன. இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது கட்டத் தேர்தல் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் - என்சிபி கூட்டணி ஆகியவை பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் காஷ்மீரிலும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காகவும் பிரச்சார சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அரியவாவில் பரிதாபாத் நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2 நாட்களாக நான் ஜம்மு காஷ்மீரில் இருந்தேன். அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. எனவே நான் விமான நிலயத்தினுள் சென்றேன். அப்போது ஒரு மனிதர், 'யோகி சாஹேப் ராம் ராம்' என்று கூறி என்னை வரவேற்றார். அந்த மனிதர் ஒரு மௌலவி [இஸ்லாமிய மத போதகர்] என்று பின்னரே உணர்ந்தேன். ஒரு இஸ்லாமிய மத போதகரிடம் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது குறித்து ஆச்சர்யம் அடைந்தேன். சிறப்பு அந்தஸ்தை [சட்டப்பிரிவு 370 ஐ] நீக்கியதன் தாக்கமே இது. இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] தெருக்கள் தோறும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கூட கோஷமிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். யோகிஆதித்யநாத்தின் பேச்சைக் கேட்டு பிரச்சார கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பினர். மேலும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த 7 வருடங்களாக எந்த போராட்டங்களும் கலவரங்களும் நடக்கவில்லை என்றும் யோகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






