என் மலர்
நீங்கள் தேடியது "special status"
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #RamnathKovind
புதுடெல்லி:
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தவாறு இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #President #RamnathKovind
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தவாறு இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #President #RamnathKovind
காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் தனிமாநில அந்தஸ்தை விரும்பவில்லை என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryGovernor #KiranBedi
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி காவல்துறை தொடர்பான விழாவில் பங்கேற்க இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை நீண்ட காலமாக யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது. தற்போது மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கும்.
காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் தனிமாநில அந்தஸ்தை விரும்பவில்லை. இது தொடர்பாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வலியுறுத்துவார்கள். மாநில அந்தஸ்து தொடர்பாக நான் டெல்லி செல்லவில்லை.
நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவும், அதில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதனை அரசு ஏற்று நடக்கும்.
இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryGovernor #KiranBedi #GovernorKiranBedi #SpecialStatus
புதுவை கவர்னர் கிரண்பேடி காவல்துறை தொடர்பான விழாவில் பங்கேற்க இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை நீண்ட காலமாக யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது. தற்போது மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கும்.
காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் தனிமாநில அந்தஸ்தை விரும்பவில்லை. இது தொடர்பாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வலியுறுத்துவார்கள். மாநில அந்தஸ்து தொடர்பாக நான் டெல்லி செல்லவில்லை.
நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவும், அதில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதனை அரசு ஏற்று நடக்கும்.
இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryGovernor #KiranBedi #GovernorKiranBedi #SpecialStatus
ஆந்திராவுக்கு நிதி அளிக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.#ChandrababuNaidu
விஜயவாடா:
தெலுங்கானா மாநிலம் தனிமாநிலம் ஆனதால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் அதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
இதற்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சபை நடைபெற முடியாதபடி தினமும் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. பா.ஜானதாவை கடுமையாக எதிர்த்து வரும் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மாநாடு விஜயவாடாவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு தேசம் தலைவரும், முதல்- மந்திரியுமான சந்திரபாபு நாயுடு மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

ஆனால் மத்திய அரசு புதிய தலைநகரை உருவாக்க போதுமான நிதி வழங்க மறுத்து வருகிறது. ஆந்திராவுக்கு உலக தரத்திலான புதிய தலைநகர் தேவைப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத்தில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
கர்நாடகத்துக்கு பெங்களூரில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஏன் ஆந்திரா மட்டும் தலைநகரை உருவாக்ககூடாது.
குஜராத்தில் ‘தேலேரா’ என்ற நகரை ஸ்மார்ட் சிட்டியாக ரூ.95,000 கோடி செலவில் மாற்றி வருகிறது. அதற்கு நிதி தேவைப்படுகிறது. அதனால் அமராவதிக்கு நிதி மறுக்கப்படுகிறது. அவர்கள் மட்டும் தேலேராவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றலாம். நாம் அமராவதியை உருவாக்க கூடாதா?
ஆந்திராவை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும். ஆந்திர அரசு தனது நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் ஒட்டு மொத்தமாக அமராவதி கட்டுமான பணிக்கு ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுவது தவறு. அமராவதியின் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கும்.
அமராவதியில் உள்கட்டமைப்புகள் செய்து வருகிறோம். சாலைகள், கழிவு நீர் கால்வாய், மின்சாரம், குடிநீர், குடியிருப்புகள் கட்டப்படுகின்றனர். அமராவதி நகரம் வளர்ச்சி அடைந்தது வருமானம் பெருமளவில் கிடைக்கும். இது மாநிலத்தின் மற்ற வளர்ச்சி பணிகளுக்கு பயன் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.#ChandrababuNaidu
தெலுங்கானா மாநிலம் தனிமாநிலம் ஆனதால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் அதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
இதற்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சபை நடைபெற முடியாதபடி தினமும் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. பா.ஜானதாவை கடுமையாக எதிர்த்து வரும் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மாநாடு விஜயவாடாவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு தேசம் தலைவரும், முதல்- மந்திரியுமான சந்திரபாபு நாயுடு மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
ஆந்திராவின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது. தலைநகர் அமராவதியில் இருந்து வருமானவரி, சொத்து வரி, ஜி.எஸ்.டி வரி என மிகப்பெரிய அளவில் வரி வசூலாகி மத்திய அரசுக்கு செல்கிறது.

ஆனால் மத்திய அரசு புதிய தலைநகரை உருவாக்க போதுமான நிதி வழங்க மறுத்து வருகிறது. ஆந்திராவுக்கு உலக தரத்திலான புதிய தலைநகர் தேவைப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத்தில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
கர்நாடகத்துக்கு பெங்களூரில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஏன் ஆந்திரா மட்டும் தலைநகரை உருவாக்ககூடாது.
குஜராத்தில் ‘தேலேரா’ என்ற நகரை ஸ்மார்ட் சிட்டியாக ரூ.95,000 கோடி செலவில் மாற்றி வருகிறது. அதற்கு நிதி தேவைப்படுகிறது. அதனால் அமராவதிக்கு நிதி மறுக்கப்படுகிறது. அவர்கள் மட்டும் தேலேராவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றலாம். நாம் அமராவதியை உருவாக்க கூடாதா?
ஆந்திராவை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும். ஆந்திர அரசு தனது நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் ஒட்டு மொத்தமாக அமராவதி கட்டுமான பணிக்கு ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுவது தவறு. அமராவதியின் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கும்.
அமராவதியில் உள்கட்டமைப்புகள் செய்து வருகிறோம். சாலைகள், கழிவு நீர் கால்வாய், மின்சாரம், குடிநீர், குடியிருப்புகள் கட்டப்படுகின்றனர். அமராவதி நகரம் வளர்ச்சி அடைந்தது வருமானம் பெருமளவில் கிடைக்கும். இது மாநிலத்தின் மற்ற வளர்ச்சி பணிகளுக்கு பயன் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.#ChandrababuNaidu
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என கூறி ராஜினாமா செய்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகரை வலியுறுத்த உள்ளனர். #AndhraPradesh #specialstatus
ஐதராபாத்:
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்களை பதவி விலக வைத்தார். அதன்பின் பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.
இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடித்தத்தை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மக்களவை சபாநாயகரிடம் அளித்தனர்.
ஆனால் இதுவரை சபாநாயகர் அவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை என்றும், அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த வாரத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் நாளை (மே.29) சபாநாயகரை நேரில் சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரான மேகபதி ராஜமோகன் ரெட்டி கூறுகையில், ‘நாளை குறித்த நேரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து எங்களது விளக்கத்தை அளித்து ராஜினாமாவை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இதுவரை ராஜினாமாவை ஏற்காததற்கான காரணம் தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் மக்களவை சபாநாயகர், எம்.பி.க்களின் ராஜினாமாவை ஏற்று, 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. #AndhraPradesh #specialstatus
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்களை பதவி விலக வைத்தார். அதன்பின் பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.
இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடித்தத்தை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மக்களவை சபாநாயகரிடம் அளித்தனர்.
ஆனால் இதுவரை சபாநாயகர் அவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை என்றும், அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த வாரத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் நாளை (மே.29) சபாநாயகரை நேரில் சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரான மேகபதி ராஜமோகன் ரெட்டி கூறுகையில், ‘நாளை குறித்த நேரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து எங்களது விளக்கத்தை அளித்து ராஜினாமாவை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இதுவரை ராஜினாமாவை ஏற்காததற்கான காரணம் தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் மக்களவை சபாநாயகர், எம்.பி.க்களின் ராஜினாமாவை ஏற்று, 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. #AndhraPradesh #specialstatus