search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Representatives"

    • பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727 உள்ளனர்.
    • இந்த வாக்காளர் பட்டியல் அங்கிகரிக்கப்பட்ட அனைத்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    சீர்காழி சட்டமன்ற தொகுதியில் (தனி) ஆண் வாக்காளர்கள் 120559, பெண் வாக்காளர்கள் 122424, திருநங்கைகள் 8 என மொத்தம் 242991, பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727, திருநங்கை 3 என மொத்தம் 264409 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனை த்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,ம ண்டல துணை வட்டாட்சியர் பாபு, அ.தி.மு.க சார்பில் சுரேஷ்குமார், வக்கீல் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், நெடுஞ்செ ழியன், சரவணன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயரெங்கன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • சார்பதிவாளர்களாக திருப்பூரில் பணியாற்றி வந்த பெருமாள்ராஜா, பூபதி ராஜா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பல்லடம் பத்திர எழுத்தர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்திர பதிவுக்கு வந்தவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர்களாக பணியாற்றிய பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகிய 2பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பல்லடம் சார்பதிவாளர்களாக திருப்பூரில் பணியாற்றி வந்த பெருமாள்ராஜா, பூபதி ராஜா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டனர். பல்லடம் சார்பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து பல்லடம் பத்திர எழுத்தர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதுடன், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
    • முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றுப் பேசினார். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், து.செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக தலைமை பேச்சாளர்கள் போடி காமராஜ், பேர்ணாம்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, முன்னாள் எம்பி பரசுராமன், மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் இறை கார்குழலி, மாவட்ட நிர்வாகிகள் இறைவன் , அண்ணா, மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, செல்வராஜ், உலகநாதன், முரசொலி, செல்வகுமார், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், நீலகண்டன், சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், தஞ்சை மாநகர நிர்வாகிகள் உஷா, காளையார் சரவணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வரகூர் காமராஜ், செந்தமிழ் செல்வன், கமலா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    • மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க.15-வது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் பேரூர்க் கழகத்தேர்தலில் தேர்ந்ெதடுக்கப்பட்ட பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் விவரம் மாவட்டவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் 1 என்பது அவைத்தலைவரையும்,2 செயலாளரையும்,3 – துணைச் செயலாளரை (பொது)யும்,4 துணைச் செயலாளரை (ஆதிதிராவிடர்)யும்,5- – துணைச் செயலாளரை (மகளிர்)யும்,6 – பொருளாளரையும்,7 – மாவட்ட பிரதிநிதிகளை(இருவர்)யும்,8 ஒன்றிய பிரதிநிதிகளை(ஐவர்)யும் குறிப்பிடும்.

    திருப்பூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

    திருப்பூர் கிழக்கு மாவட்டம், ஒன்றியம் தாராபுரம், பேரூர்: சின்னக்காம்பாளையம்- 1.சி. சுப்பிரமணியம் 2. ரா.பன்னீர்செல்வம் 3. என். பூபதி 4. எம்.காளிமுத்து 5.என். சாந்தி 6.ஆர். கதிர்வேல் 7.மா. கனகராஜ், ஈ.நாட்டுத்துரை 8. க.ரத்தினசாமி, பி.காளியப் பன், கே.சம்பத்குமார், எம்.ஜெயக்குமார், கே. மகேஸ்வரன். பேரூர்: கொளத்துப்பாளையம் 1. எம். புவனேந்திரன் 2. கே.கே.துரைச்சாமி 3. பி. சிவக்குமார் 4. கே. குப்புசாமி 5.பி.முத்துமணி 6. பி. கிருஷ்ணமூர்த்தி 7.பி. ரத்தினசாமி, ந. ஜெயக்குமார் 8.ஆர். ஹரிஹரகிருஷ்ணன், ந. சிவசண்முகம், கே. செந்தில்குமார், சி.காளிதாஸ், டி. சிவராஜ்.

    மூலனூர் ஒன்றியம் -பேரூர் மூலனூர் -1. சி.விஸ்வநாதன் 2. க.தண்டபாணி 3.ப. செந்தில்குமார் 4. பி. பாலசுப்பிரமணி 5. அ.உமாதேவி 6. கு.செல்லமுத்து 7.பி.அர்ச்சணசாமி, சா.ஜெகதீஸ்வரன் 8. எஸ்.சங்கர், மு. கந்தசாமி, செ. மதன்குமார், கு. சசிக்குமார், வி. செல்லத்துரை.

    பேரூர்: கன்னிவாடி- 1.கே. எஸ். சீரங்கராயன் 2. கோ.சுரேஷ் 3. வி. பொன்மதன் 4. எஸ். சுந்தரம் 5. எம்.கலைமதி 6. ஆர்.சுப்பிரமணி 7.பி.வடிவேல், சி.பெரியசாமி 8. கே. வெள்ளைசாமி, எஸ். கிரிகுமார், வி.எஸ். ராமசாமி, எஸ்.நல்லசிவம், எஸ்.முருகேசன்.

    ஒன்றியம் குண்டடம் மேற்கு ,பேரூர் ருத்ராவதி- 1.என். கண்ணகுமார் 2. எஸ். அன்பரசு 3. டி. பிரபாகரன் 4. எஸ். பிரகாஷ் 5. எல். மோகனசெல்வி 6. பி. சிவசுப்ரமணியன் 7. என். நந்தகோபால், எஸ். எம். தங்கவேல் 8.எம். கோபிநாத், கே.சண்முகசுந்தரம், பி.தனசேகரன், கே.பாலசுப்பிரமணியம், என். ராமசாமி.

    ஒன்றியம் வெள்ளக்கோவில்- பேரூர் முத்தூர்- 1.கே. பழனிசாமி 2. கு. குப்புசாமி 3. ஆர். வீரக்குமார் 4. க.சுப்பிரமணி 5.எஸ்.தங்கமணி 6. எ.சுப்பிரமணி 7.மு.க.அப்பு. எஸ். பௌதியப்பன் 8.பி.ராஜேந்திரன், வி.சம்பத், எ. கோவிந்தராஜ், வி.எஸ். சுப்பிரமணி, எஸ்.ஜெகதீஸ்வரன்.

    ஒன்றியம்ஊத்துக்குளி வடக்கு -பேரூர் குன்னத்தூர்- 1.கே.சி. பூவராகவன் 2.சி. சென்னியப்பன் 3.டி.எஸ். கோபாலகிருஷ்ணன் 4.கு.சுப்பிரமணியம் 5.எஸ். அன்புச்செல்வி 6. மு.இளங்கோ 7. எஸ். கே. முருகசாமி, கே.எ. இளங்கோவன் 8.சி.எம். கருப்புச்சாமி, கே.ஜி. சோமசுந்தரம், தி. தீபா , சி.ராஜ்குமார், ம.ராஜேஸ்வரி.

    ஒன்றியம் ஊத்துக்குளி தெற்கு- பேரூர் ஊத்துக்குளி- 1.மா.தெய்வசிகாமணி 2. கே. கே. இராசுக்குட்டி 3. டி.ராஜேந்திரன் 4. எம். கைத்தான் 5.கா.வாசுகி 6. சி.பி. செல்வராஜ் 7. ஆ.கோபால்ராஜா, மெ. ரமேஷ்குமார் 8.சு. செந்தில்குமார், கு.ராமசாமி, கா.பாலசுப்பிரமணி, ப.ரவிச்சந்திரன், எம். வரதராஜன்.

    திருப்பூர் தெற்கு மாவட்டம் -ஒன்றியம் மடத்துக்குளம் மேற்கு- பேரூர் மடத்துக்குளம்- 1.ஆர். மாரிமுத்து 2. என். பாலகிருஷ்ணன் 3. டி. கௌதமன் 4. கே.ஆறுமுகம் 5. வி. கனகபூரணி 6. எஸ்.டி.ஏ. வதூத் 7. டி. ரங்கநாதன், கே. பாலதண்டபானி 8. ஏ. சதாசிவம், எம். கே. சிவக்குமார். ஆர். துளசிமணி, ல. பாலசுப்பிரமணியன், என்.கார்த்திக்ராஜா,

    ஒன்றியம் - மடத்துக்குளம் மத்திய- பேரூர் கணியூர்- 1. எம். சாகுல் அமீது 2. ஏ. பாலகிருஷ்ணன் 3. என். சங்கர் 4. பி. முத்துக்கிருஷ்ணன் 5. இ. பரமேஸ்வரி 6. கே.கமாலுதீன் 7. கே.எம். இம்தாதுல்லா , வி. பஞ்சலிங்கம் 8. எஸ்.சாரங்கபாணி, கே. கிருஷ்ணன், எஸ்.மதிவாணன், கே.செல்வராஜ், டி.நாகராஜ் .

    ஒன்றியம் மடத்துக்குளம் கிழக்கு- பேரூர் : குமரலிங்கம்- 1. கே.அழகர்சாமி 2. எம். ஆச்சிமுத்து 3. சி. ராஜேஷ்கண்ணன் 4. டி.சரவணன் 5. வி.கார்த்திகா 6. ஏ.லியாகத் அலி 7. ஏ.செங்கமலை, பி. முகமது ரபி, 8. பி. மகுடீஸ்வரன், கே.நடராஜன், டி. செந்தில்குமார், டி. மணிவண்ண ன், ஏ.சாகுல் அமீது.

    பேரூர்சங்கராமநல்லூர் -1.டி.ஆசைத்தம்பி 2. ஆர்.ஏ. சாதிக்அலி 3. என். முத்துக்கிருஷ்ணன் 4. பி. முருகன் 5. ஏ. மீனாட்சி 6. எஸ். வெள்ளியங்கிரி 7. ஆர்.ராஜேந்திரன், கே.கணகுராஜ் 8. டி.முத்துவேல், ஏ. பழனிச்சாமி, பி. முத்துகிருஷ்ணன், எஸ்.ராஜமாணிக்கம், கே. கிருஷ்ணசாமி

    ஒன்றியம்உடுமலைப்பேட்டை மேற்கு- பேரூர் தளி -1. ஏ. சம்சுதீன் 2. வி. உதயகுமார் 3. கே. திருமூர்த்திராஜ் 4. டி. ராதாகிருஷ்ணன் 5. கே. வீரம்மாள் 6. கே.சுப்பிரமணியன் 7. எஸ். செல்வராஜ், ஆர். ஆனந்ராஜ் 8.ஏ. ஆதம்சையது அபுதாகீர், எஸ். தேவராஜ், ஏ. ராமானுஜம், ஏ.ராமசாமி, எம்.சின்னராஜ்.

    • கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
    • விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற 6-வது கட்ட வாக்குப்பதிவை 10 நாடுகளின் தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற 6-வது கட்ட வாக்குப்பதிவை வெளிநாட்டு தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர். ரஷியா, மியான்மர், பூடான், கம்போடியா, போஸ்னியா, வங்காளதேசம், கென்யா, மெக்சிகோ, மலேசியா, இலங்கை ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

    அவர்கள் வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் 12 வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்த்தனர். ஓட்டுப்பதிவையும், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இயங்குவதையும் பார்த்து வியந்தனர்.

    இதுகுறித்து ரஷிய தேர்தல் கமிஷன் உறுப்பினர் செவ்செங்கோ கூறியதாவது:-

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இயங்குவதை பார்ப்பது சுவையாக இருந்தது. ரஷியாவில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களும் இதே போன்றவைதான். தேர்தல் பார்வையாளர்களுடனும் பேசினோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×