search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
    X

    கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    தஞ்சையில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்

    • இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
    • முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றுப் பேசினார். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், து.செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக தலைமை பேச்சாளர்கள் போடி காமராஜ், பேர்ணாம்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, முன்னாள் எம்பி பரசுராமன், மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் இறை கார்குழலி, மாவட்ட நிர்வாகிகள் இறைவன் , அண்ணா, மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, செல்வராஜ், உலகநாதன், முரசொலி, செல்வகுமார், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், நீலகண்டன், சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், தஞ்சை மாநகர நிர்வாகிகள் உஷா, காளையார் சரவணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வரகூர் காமராஜ், செந்தமிழ் செல்வன், கமலா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    Next Story
    ×