search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electoral Roll"

    • கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
    • இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவரும், பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

    அவருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

    இந்த பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இப்பணியில் அனைத்து நிலைகளிலும் வாக்கா ளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழி வகை உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி தேர்தல் ஆணையத்தால் பொது மக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

    எளியமுறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலைரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
    • அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-ஐதராபாத் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 201 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.

    4 லட்சத்து 39 ஆயிரத்து 801 பேர் வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். 54 ஆயிரத்து 259 பேர் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் உள்ளதால் வாக்கு சதவீதம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

    அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    1 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேரின் வீட்டு முகவரிகள் தவறாக இருந்தது. அவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கம்.
    • வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    மாவட்டங்களில் உள்ள  வாக்காளர் பட்டியலில் விவரம் வெளியீடு:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 41 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 10,45,551 ஆண் வாக்காளர்களும், 10,77,438 பெண் வாக்காளர்களும், 287 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 276 வாக்காளர்கள் உள்ளனர். இதில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,09,906 ஆண்கள், 15,710,93 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 595 என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 11 ஆயிரத்து 573, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 79 ஆயிரத்து 985-யும், பிற வாக்காளர்கள் 332 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கமும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியும் உள்ளது.

    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு
    • ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும் பார்வையிட்டா

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலை ப்பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை ப்பள்ளி ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் சிற ப்பு முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

    மேலும் நேற்றும், இன்றும் (26-ந்தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்கள் மேற்கண்ட முகாம்க ளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமு கம் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சுடுகாட்டு தகன கொட்டகையை கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பேரட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முதல் மேல் பாரத்நகர் சந்திப்பு வரை ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வடிநீர் கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலைப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் குமார், குன்னூர் நகராட்சி பொறி யாளர் வேலுசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சிவகங்கையில் நாளை, நாளை மறுநாள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தும் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தின் அறிவுரையின்படி வருகிற ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்க ளுக்கான சிறப்பு முகாம்கள் நாளை 25-ந் தேதி (சனிக்கிழமை), 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்படி இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Helpline செயலி / https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.கோட்டாட்சியர் சிவகங்கை, தேவ கோட்டை அலுவலகத்தில் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக் கலாம்.

    எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் திருத்தம் மேற்மேகொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்
    • கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தல்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 18, 19-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடப்பதாக இருந்தது.

    அது தற்போது வருகிற 25, 26-ந்தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது ஆகிய பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம். அதன்படி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8 ஆகியவற்றை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

    பிரத்யேக இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மொபைல் செயலியை தரவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்க இயலும்.மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை செய்வதற்கு அடுத்த மாதம் 9-ந்தேதிவரை விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் மேற்கண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர்,திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட முகாம் 2 நாட்கள் நடந்தது.

    வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் மதுமதி மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    புதியதாக பெயர்களை சேர்க்க முகாமிற்கு வந்த முதல் இளம் வாக்காளர்களை வரவேற்று அவர்களுக்கு நாற்காலிகள் போடும்படி கூறி அவர்களை அமரவைத்து கவுரவபடுத்தி பெயர் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்து கூறி பெயர்களை சேர்த்தார். இது இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

    வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி கூறியதாவது:-

    முன்பு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சேர்க்க முடிந்தது.

    ஆனால் தற்போது இளம் வக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள் ஜனவரி,ஏப்ரல், ஜூலை,அக்டோபர் என வருடத்தில் 4 முறை தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். மாவட்டம் முழுவதும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள இளம் வாக்காளர்களை சேர்க்க பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன்,நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சா வடி மையத்தில் வாக்களர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறு கிறது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண் டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யம் மற்றும் சென்னை தலை மை தேர்தல் அலுவலர் அறி வுரைகளின்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5.1.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (1.1.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பி யவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலில் 27.10.2023 ன்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த மாதம் 4,5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமை விடங்களிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
    • நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    வேங்கிக்கால்:

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அக்டோபர் 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், நீக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்காக நவம்பர் மாதம் 4,5,18,19 ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களை பயன்படுத்தி விடுபட்ட வாக்காளர் பெயர்களை சேர்த்தல், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    17 வயது நிரம்பியவர்களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது நிரம்பும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி புதிய வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்குதல், இடம் பெயர்ந்து தொகுதிக்குள் வந்துள்ள வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்து வெளியில் சென்றுள்ளவர்களை பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் தி.மு.க. நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727 உள்ளனர்.
    • இந்த வாக்காளர் பட்டியல் அங்கிகரிக்கப்பட்ட அனைத்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    சீர்காழி சட்டமன்ற தொகுதியில் (தனி) ஆண் வாக்காளர்கள் 120559, பெண் வாக்காளர்கள் 122424, திருநங்கைகள் 8 என மொத்தம் 242991, பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727, திருநங்கை 3 என மொத்தம் 264409 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனை த்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,ம ண்டல துணை வட்டாட்சியர் பாபு, அ.தி.மு.க சார்பில் சுரேஷ்குமார், வக்கீல் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், நெடுஞ்செ ழியன், சரவணன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயரெங்கன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
    • நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    தவிர நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தேனிமாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
    • இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப் படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் மறு வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டிய லானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஷஜீவனா தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

    மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலானது உத்தமபாளையம், பெரியகுளம் வாக்காளர் பதிவு அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ங்களிலும், ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளை யம், போடி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலக ங்களிலும் மற்றும் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், நகராட்சி ஆணையர் அலுவகங்களில் பொதுமக்களின் பார்வை க்காக வைக்கப்படும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலு க்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் நடத்தப்படும். வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 9-ந் தேதிக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சி யரிடம் தெரிவிக்கலாம்.

    இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    ×