என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
- வருகிற 26, 27 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.
- கடந்த 12, 13-ந் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 59 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விபரங்களை பெற்று "கருடா" செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி கடந்த 9-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதவிர பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் டிசம்பர் 8-ந் தேதி வரை மேற்கொள்ளலாம்.
வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 12, 13-ந் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1371 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 26, 27ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். எனவே சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்