என் மலர்
நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல்"
- பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
- கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்தார்.
ராஜஸ்தானின் பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் 42 வயதான அனுஜ் கார்க். அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில் நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம், மேற்கு வங்கம், உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.
- விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
- வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.
சென்னை:
சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள் என்ன? என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த படிவங்களை நிரப்புவதற்கு வசதியாக 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் தேடல் வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அதை காணலாம். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
இந்த கணக்கீட்டு படிவம் குறித்த சந்தேகங்கள் எழுந்தால் வாக்காளர் உதவி நம்பரான 1950 மற்றும் வாட்ஸ்அப் குறைதீர் நம்பரான 9444123456 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் எழும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.
இதற்காக ECINET செயலி அல்லது https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, book a call with BLO என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, செல்போன் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.
கடந்த தீவிர திருத்த பட்டியல்களில் பெயர் இருந்தால், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களான, வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினரின் பெயர், உறவு (முறை), மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், எண், பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் ஏற்கனவே சில விவரங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். அதில் புகைப்படமும் இருக்கும். அதில் கூடுதலாக, பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பம்), செல்போன் எண், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் அல்லது மனைவியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்) அவற்றை வாக்காளர் குறிப்பிட வேண்டும்.
இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
- பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
- வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் கொடுக்கும்போது குழப்பம் ஏற்படுவதாகவும், பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவர்கள் தலைமையில் இயங்கும் வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.
இந்த போன் நம்பர்களில் தொடர்பு கொண்டு அந்தந்த தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கான உதவி மைய எண்கள் விவரம் வருமாறு:-
| எண் | தொகுதி | போன் நம்பர் |
| 1 | ஆர்.கே.நகர் | 9445190204, 8072155700 |
| 2 | பெரம்பூர் | 9445190204, 8015959489 |
| 3 | கொளத்தூர் | 9445190206, 7812811462 |
| 4 | வில்லிவாக்கம் | 9445190208, 7845960946 |
| 5 | திரு.வி.க.நகர் | 9445190206, 9791755291 |
| 6 | எழும்பூர் | 9445190205, 9941634048 |
| 7 | ராயபுரம் | 9445190205, 7867070540 |
| 8 | துறைமுகம் | 9445190205, 8778381704 |
| 9 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | 9445190209, 9884759592 |
| 10 | ஆயிரம்விளக்கு | 9445190209, 9626150261 |
| 11 | அண்ணாநகர் | 9445190208, 8680973846 |
| 12 | விருகம்பாக்கம் | 9445190210, 7358275141 |
| 13 | சைதாப்பேட்டை | 9445190213, 7358032562 |
| 14 | தியாகராயநகர் | 9445190210, 7418556441 |
| 15 | மயிலாப்பூர் | 9445190209, 9789895378 |
| 16 | வேளச்சேரி | 9445190213, 9499932846 |
| 17 | மதுரவாயல் | 9445190091 |
| 18 | அம்பத்தூர் | 9445190207 |
| 19 | மாதவரம் | 9003595898 |
| 20 | திருவொற்றியூர் | 9445190201 |
| 21 | சோழிங்கநல்லூர் | 9445190214, 9445190215 |
| 22 | ஆலந்தூர் | 9445190212 |
- இந்த பணியை 4 கட்டமாக பிரித்து கொள்ளலாம்.
- 2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும்.
சென்னை:
இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கட்டமாக பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த பணி 2-ம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த பணிகள் இன்று தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியை 4 கட்டமாக பிரித்து கொள்ளலாம். முதல் கட்டமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) 4-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுப்பார்கள்.
2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். 3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பெறப்படும். 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்படும்.
- சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.
- வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி பேர் வேலைக்கு என தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்துவிடுவீர்கள். அப்படி வாக்குரிமை கொடுத்துவிட்டால் தமிழ்நாடு இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக மாறும்.
இங்கு பல்வேறு தரப்பட்டு மக்கள் இருந்தாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தி என்கிற ஒரே மொழியில் ஒற்றுமையாக நின்றுவிடுவார்கள். அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள்.
வடமாநிலத்தவர்களை தவிர்க்க முடியாத தொழிலாளியாக இங்கு அமர்த்தி, நம்மை இங்கு இருந்து விரட்டுவார்கள். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் போய்விட்டது என்றால் நான் இந்த நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அகதியாக மாற வேண்டிய சூழல் ஏற்படும்.
அதற்கு முன்பே நாம் எச்சரித்துக் கொள்ள வேண்டும். வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.. சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
- நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
என்டிஏ கூட்டணி ஏற்கனேவே 3 வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி(ஜேஎம்எம்) கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி பீகாரில் ஜேஎம்எம் ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி ஆகிய ஆகிய ஆறு இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.
பீகாரில் சில இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஜே.எம்.எம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட கட்சி முடிவு செய்தது.
நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றிருக்கும் சூழலில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
- தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.
தி.மு.க. முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப் பிய கேள்விகளுக்குத் தேர் தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்க வில்லை.
ஆட்சிகளை மாற்றி அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.
பீகாரைப் போலத் தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றால், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.
மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகா ரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பா வையாக மாறின.
இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்தி ருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி முன்கூட்டியே பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முன் னரே பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி விட்டு போனார் பிரதமர் மோடி. இதன் மூலம் தேர்தல் தேதி ரகசியத்தைத் தேர்தல் ஆணையம் காக்கத் தவறியது அப்பட்டமாகவே வெளிப் பட்டது.
பீகாரில் பல லட்சக்க ணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதி லிருந்து சில லட்சக்க ணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? என்பதற்குத் தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வில்லை.
ஜனநாயகத்தின் ஆணிவே ரான தேர்தலை நேர்மை யோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.
பீகாரில் கடைப்பிடிக் கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்ட மிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படா மலேயே நமது வாக்கா ளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்க வும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும்.
- ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு பீகார் வந்துள்ளது.
நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இந்நிலையில் ஞானேஷ் குமார் இன்று பீகாரின் வைஷாலி நகரில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார்.
அதில் பேசிய அவர், பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
மேலும், அனைத்து பொறுப்பு அதிகாரிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும். அவற்றை வெளியே வைத்துவிட்டு வந்த பின்பே வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இருக்கும்.
பீகார் தேர்தலில் 17 புதிய சோதனைகளை பரிசோதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைகளில் வாக்காளர் அடையாள எண்கள் பெரிதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணுவதில் பிழை இருந்தால், அனைத்து VVPAT, வாக்குச்சீட்டு வாக்குகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது அவசியம், பீகார் சிறப்பு தீவிர திருத்தும் சட்டப்படி நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அதை மறுபரிசீலனை செய்வது சட்டத்திற்கு முரணானது.
வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தான் பொறுப்பு. பீகாரின் 243 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை தணிக்க செய்ய ஒன்றிணைந்து பணியாற்றினர்.
நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் விடுபட்டிருந்தால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம்" என்று தெரிவித்தார்.
- இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும்.
- ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மோசடி குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2026 பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டபோது, மெஹபூபா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒரே முகவரியின் கீழ் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஜெய்த்பூர் கிராம பஞ்சாயத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், வீட்டு எண் 803 இல் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும். வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தபோது பிழை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல ஜெய்த்பூருக்கு அருகிலுள்ள பன்வாரி நகரில், 996 ஆம் எண் வீட்டில் 243 பேரும், 997 ஆம் எண் வீட்டில் 185 பேரும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது
இருப்பினும், மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஆர்.பி. விஸ்வகர்மா, வாக்காளர்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முகவரிகள் மட்டுமே தவறாக உள்ளிடப்பட்டுள்ளன என்றும், அந்தத் தவறுகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட பிழை மற்றும் கிராம மக்களின் தெளிவற்ற பதிவுகள் இதற்குக் காரணம் என்று விஸ்வகர்மா தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன
அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், " வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் S.Y.குரேஷி, O.P.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்ததுள்ளனர்.
குடிமகனோ, தேர்தலில் பங்களிப்பாளராக இருப்பவரோ குற்றச்சாட்டு முன்வைக்கும்போது அதை விசாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலையே தவிர, எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
மதிக்கத்தக்க இந்த மூன்று பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.
- முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தத்தை (SIR) நடத்திய தேர்தல் ஆணையம் (EC), இந்த மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியலில் விபர சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக கருத தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் , ஆதார் விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியதுடன், ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது.






