search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voters list"

    • தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.
    • வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்ததாக கருதுகிறோம்.

    கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே? வெயில் அதிகமாக இருந்ததால் பல பேர் ஓட்டு போட வரவில்லை என்று கூறுகிறார்களே?

    ப:- வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகமாகும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    கே:- வாக்காளர் பட்டியலில் நிறையபேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்களே?

    ப:- ஆமாம். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்திருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருக்கிறோம்.

    தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.

    ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி அப்போதே நான் பேட்டியும் கொடுத்திருந்தேன்.

    வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை தவற விட்டார்கள். இது தேர்தல் கமிஷனின் அஜாக்கிரதை என்றுதான் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    • பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக வரைவுப் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்வதற்காக 1,914 படிவங்களும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்ளேயே முகவரியை மாற்றுவதற்காக 19 ஆயிரத்து 36 படிவங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளம் மூலமும் விண்ணப்பங்களை அளித்தாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்குச்சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து வருகிறார்கள்.

    பெயர்கள் விடுபட்ட வாக்காளர்கள் உரிய விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

    பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். இதற்கான படிவங்கள் சிறப்பு முகாம்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    • தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
    • விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் அளிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும்.

    நவ. 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். இந்தப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    பெயர் சேர்க்க, நீக்க

    இதில் 2023 ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரினை சேர்க்க படிவம் 6, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நபர்களில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ள வர்களின் பெயரினை நீக்கம் செய்ய படிவம் 7, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விபரங்களை திருத்தம் செய்ய மற்றும் அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8 ஆகியவற்றை வழங்கி பொதுமக்கள் பயனடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்

    பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமாகவும், Voter Helpline Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பாளை வட்டத்திற்கு உட்பட்ட கீழ்காணும் வாக்குச்சாவடி மையங்களில் 26-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு தொடர்பான ஆயத்தபணி மற்றும் 27-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

    மாற்று மையங்கள்

    எனவே அந்த வாக்குச்சாவடி மையங்க ளுக்கு பதிலாக வேறு பள்ளி களில் வாக்குச்சாவடி மையங்களை அந்த 2 தேதிகளில் மட்டும் மாற்றிய மைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாளை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மாற்றாக பாளை ஏஞ்சலோ மெட்ரிக் பள்ளியில் செயல்படும். சாராள் தக்கர் பள்ளி வாக்குசாவடி சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும்.

    தியாகராஜநகர் புஷ்ப லதா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் ஏற்கனவே 5 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வரும் தியாகராஜநகரில் உள்ள ராம்நகர் ரோஸ் மேரி பள்ளியில் கூடுதல் வாக்குசாவடி மையமாக செயல்படும். மேலும் வி.எம்.சத்திரம் தூத்துக்குடி மெயின்ரோட்டில் உள்ள ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் கே.டி.சி நகர் ஓயாசிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்குசாவடி மையமாக செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    தென்காசி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2022 ஆம் நாளினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.11.2021 அன்று வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களது தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் வரும் 4-ந் தேதி, 5-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறும்.
    சென்னை:

    வருகிற ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற ஜனவரி 5-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

    அதன்படி இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அறிவித்து இருந்தார்.

    சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்தது. இருப்பினும் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற்றது.

    இந்த முகாம்களில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது போன்ற மாற்றங்களை செய்து கொண்டனர். மழை காரணமாக முகாம்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வந்திருந்தனர்.

    மேலும் வீட்டில் இருந்தபடியே www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், மொபைல் ஆப் மூலமும் இந்த மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

    அடுத்த முகாம் வரும் 4-ந் தேதி (சனி) 5-ந் தேதி (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறும்.
    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.
    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.

    இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வந்ததாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டதாலும், பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், பொதுமக்கள் பயனடைய வசதியாக வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மேலும் 2 சிறப்பு முகாம்களை நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இன்றும், நாளையும் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் மண்டலம் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.

    இந்தநிலையில் சென்னையில் ஏற்பட்ட தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாலும், பொதுமக்களின் நலன் கருதி மேற்படி தேதிகளில் நடைபெற இருந்த முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது உள்ளிட்டவற்றுக்காக இம்மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம்.
    சென்னை:
     
    2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை (பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம்) மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை அங்குள்ள அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் இதுவரை பட்டியலில் பெயர் பதிவுசெய்யாத அனைவரும் 6-ம் எண் விண்ணப்பத்தை அளித்து பெயர் பதிவுசெய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதி அளிக்கும் பகுதியை கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புகைப்படம் தெளிவாக இருப்பதற்காக 200 டிபிஐ ரெசல்யூசன் கொண்ட புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    ஏற்கனவே பெயர் பதிவுசெய்து, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம்மாறிய வாக்காளர்கள், திருத்தத்துக்காக 6-ம் எண் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள் 8ஏ விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டியலில் திருத்தங்கள் ஏதாவது மேற்கொள்ள 8-ம் எண் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

    வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ, தொலைந்துவிட்டாலோ, சிதைந்துவிட்டாலோ புதிய அட்டைக்காக தாலுகா அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் 001 விண்ணப்பத்தை அளிக்கவேண்டும்.

    சிறப்பு முகாம்களுக்கான பணிகளை செய்யும்போதும், சிறப்பு முகாம்கள் நடக்கும்போதும் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

    முகவர்கள் நியமிக்கப்படாத வாக்கு சாவடியில் உடனடியாக முகவர்கள் நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காக வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், வாக்குச்சாவடி நிலை முகவர்களும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    18 வயது பூர்த்தியானவர்களையும், பட்டியலில் இடம் பெறாதவர்களையும் புதியதாக குடிவந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பட்டியலில் உள்ள தவறுகளையும் சரி செய்ய வேண்டும்.

    இதற்காக முகாம்களுக்கு சென்று இந்த பணியை முழுமையாக செய்ய வேண்டும். முகவர்கள் நியமிக்கப்படாத வாக்கு சாவடியில் உடனடியாக முகவர்கள் நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும்.

    இதற்கான பணிகளை முடித்து அதன் விவரங்களை தலைமை கழகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் செய்வதற்கு வருகிற 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் 5,77,750 ஆண்கள், 5,84,047 பெண்கள் மற்றும் 62 திருநங்கைகள் என மொத்தம் 11,61,859 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதற்கு முன்பு மார்ச் 19-ந்தேதி 11,65,160 பேர் வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 2,145 ஆண்கள், 2,351 பெண்கள், 3 திருநங்கைகள் சேர்க்கப்பட்டனர்.

    இதேபோல 4 திருநங்கைகள், 4,303 ஆண்கள், 3,493 பெண்கள் என 7,800 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர், அலுவலகங் கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    www.elections.tn.gov.in மற்றும் www.nvsp.in இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் செய்வதற்கு வருகிற 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. காமாட்சிகணேசன், தாசில் தார்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
    மதுரை மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அமைந்து உள்ளது. இங்கு 3 லட்சத்து 26 ஆயிரத்து 978 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை வெளியிட்டார்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 26,81,727. இதில் ஆண் வாக்காளர் எண்ணிக்கை 13,17,631. பெண் வாக்காளர் எண்ணிக்கை 13,63,897. மூன்றாம் பாலின வாக்காளர் எண்ணிக்கை 199 ஆகும்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் அனீஷ்சேகர் நிருபர்களிடம் பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை வருகிற 30-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். இது தவிர 13, 14, 27, 28 ஆகிய 4 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 ஆக இருந்தது. அதில் 25 ஆயிரத்து 415 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதேநேரத்தில் 9 ஆயிரத்து 460 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    எனவே கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வாக்காளர் பட்டியல் எண்ணிக்கையில் 15,955 பேர் குறைந்து உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அமைந்து உள்ளது. இங்கு 3 லட்சத்து 26 ஆயிரத்து 978 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதியாக சோழவந்தான் உள்ளது. இங்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 715 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 1,164 வாக்குச்சாவடி மையங்களும், 2718 வாக்குச் சாவடிகளும் உள்ளது.

    மதுரை மேலூர் தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 250 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 904.

    மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 978 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 383.

    சோழவந்தான் தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 715 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 503.

    மதுரை வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 656 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 506.

    மதுரை தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 784 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து ஒன்று ஆகும்.

    மதுரை மத்திய தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 550 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818.

    மதுரை மேற்கு தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 547 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 715.

    திருப்பரங்குன்றத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 963 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 715.

    திருமங்கலத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 675 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 306.

    உசிலம்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 609 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் ஆண் களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 349.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம்-6ஏ, ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரை நீக்கம் செய்ய, அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபணை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கு படிவம்-8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8ஏ ஆகியவற்றில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம். அல்லது www.nvsp.in இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். செல்போனில் வாக்காளர் உதவி எண் செயலி (Voters Helpline Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    வருகிற 13, 14, 27, 28-ந் தேதிகளில் அங்கு உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் தகவலுக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
    ×