search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly constituency"

    • தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
    • பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

    இதில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பா.ஜ.க தேசிய துணை தலைவர் பைஜயந்த், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    பவன்கல்யாண் கட்சி 2 பாராளுமன்ற தொகுதி 21 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

    தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதால் வேட்பாளர்கள் தேர்வில் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி மிகவும் வலிமையானது. ஆந்திர மாநிலத்தை மீட்டெடுக்க மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் சிலக்கலுரி பேட்டையில் வருகிற 17 அல்லது 18-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அப்போது பா.ஜ.க. வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    • மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.
    • 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குகள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டி யல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற் பார்வையாளர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் கடந்த 5.01.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (01.01.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பியவர்க ளின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி, இவ்வரைவு வாக்கா ளர் பட்டியலில் 27.10.2023 ன்படி உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சா வடிகளில், 2,86,422 வாக்கா ளர்களும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளில், 2,64,572 வாக்காளர்களும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சா வடிகளில், 2,62,896 வாக்கா ளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி யில் 332 வாக்குச்சாவடி களில், 2,76,131 வாக்காளர்க ளும் என மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்க ளில் 10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கிராமங்கள் மற்றும் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொண்டு எந்த ஒரு வாக்காளரும் விடுபடா வண்ணம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனி தாசில்தார் (தேர்தல்) பசுபதி, அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது.

    நெல்லை:

    பாளை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் பள்ளமடை பாலமுருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, அமைப்பு சாரா தொழிலாளர் அணி சிவந்தி மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், மோகன், மேகை சக்திகுமார், சிந்து முருகன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு , வட்ட செயலார் பாறையடி மணி, வண்ணை கணேசன், பீர் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது, 8 பேர் கட்சி பொறுப்பிலும், 3 பேர் இளைஞர் பாசறை, 2 பேர் தகவல் தொழில்நுட்ப அணி மற்றவர்கள் அணி பொறுப்பிலும் இருக்குமாறு பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் முன்னனியில் உள்ளார்.

    வேலூர்:

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கஸ்பா ஆர்.மூர்த்தி போட்டியிட்டார்.

    தி.மு.க. வேட்பாளராக காத்தவராயன், அ.ம.மு.க. வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வெங்கடேசன், நாம்தமிழர் வேட்பாளராக கலையேந்திரி போட்டியிட்டனர்.

    குடியாத்தம் தொகுதியில் மொத்தம் 2,70,751 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,02,593 ஓட்டுகள் பதிவானது. இது 74.83 சதவீதமாகும்.

    (தி.மு.க.) - 4,811

    கஸ்பா ஆர்.மூர்த்தி

    (அ.தி.மு.க.) - 4,261

    (அ.ம.மு.க.)- 243

    (ம.நீ.ம,) - 54

    (நாம்தமிழர்) - 208

    550 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் முன்னனியில் உள்ளார்.

    4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #ADMK #DMDK #Vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.திமு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. முழு ஆதரவை அளிக்கிறது.


    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். #ADMK #DMDK #Vijayakanth

    பாராளுமன்ற தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் வர உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், அரூர் ரவுண்டானாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின், 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமை தலைமை தாங்கினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

    2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு பிரச்சினைகள் இருந்தன. தி.மு.க. ஆட்சியில் போதிய மின்சாரம் இல்லாததால், தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. விவசாய பணிகள் நலிவடைந்தன.

    தமிழக மக்களின் துன்பங்களை அறிந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் 3 ஆண்டுகளில் மின்வெட்டு பிரச்சினைகள் இருக்காது என சட்டப் பேரவையில் உறுதி அளித்தார்.

    அதன் பிறகு தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தொழில் வளமும் பெருகியுள்ளது.

    கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வுகள் இருந்தன. ஆனால், இன்று அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வுகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எந்த கிராமத்துக்கும் செல்லவில்லை. தற்போது, கிராமங்கள்தோறும் சென்று ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தியும், மக்கள் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    தற்போது ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. அரசு என்ன செய்தது என்று கேட்கிறார். தி.மு.க. ஆட்சியில் செய்யாத திட்டங்களை நாம் செய்து வருகிறோம்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியில் இருக்கும் போது இது போன்று மக்களை சந்தித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டிருக்கலாம்.

    விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதால் விவசாயப் பணிகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள் தூர்வாரப்படுகிறது. அதேபோல், ஆறுகள், ஓடைகளின் குறுக்கே அதிக அளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைநீர் சேமிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கிராமப் பகுதிகளில் அதிக அளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது. இந்திய அளவில் தமிழகம் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று விருது பெற்றுள்ளோம்.

    ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொதுமக்களிடம் பொய்பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையிலும், 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

    ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தலும் வர உள்ளது. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் விருப்பப்படி பா.ஜனதா, பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துள்ளோம். அ.தி.மு.க,. பா.ம.க., பா.ஜனதா உழைப்பை விரும்பும் கட்சிகள். இதனை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

    தமிழகம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நாட்டின் பாதுகாப்பு அவசியம். அதற்கு நிலையான அரசு வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் இணைந்துள்ளோம். நாட்டை ஆள திறமையானவர் மோடிதான்.

    தி.மு.க., மத்திய மாநில ஆட்சியில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை. அவர்களது குடும்பத்திற்கு பலன் ஏற்படுத்தி கொண்டனர்.

    ஆனால் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் காவிரி பிரச்சினைக்காக பாராளுமன்றத்தையே 23 நாட்கள் முடக்கினர். தி.மு.க. எம்.பி.க்கள் என்ன செய்தனர். தனது குடும்பத்தினர் நலனுக்காகதான் கருணாநிதி டெல்லி சென்றார். தற்போது கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினும் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு வாரிசு அரசியலை நடத்திவருகிறார்.

    அ.தி.மு.க.வில் யார் உழைக்கிறார்களோ அவர்களது வீட்டைதேடி பதவி வரும். ஜெயலலிதாவின் ஆணையை ஏற்று உழைத்த தொண்டர்கள் மூலம் வெற்றிபெற்ற அரூர் தொகுதி முருகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பழனியப்பன் ஆகியோர் துரோகம் செய்து துரோகி டி.டி.வி. தினகரனுடன் சென்றுவிட்டனர்.

    டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவருடன் சென்றவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். வரும் இடைதேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பிலோ, கூட்டணி சார்பிலோ போட்டியிடுபவர்களை வெற்றிபெற செய்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    அ.தி.மு.வுடன் பா.ம.க.வுடன் கூட்டணி சேரலாமா என்றும் உங்களுக்கு சூடு, சொரணை இல்லையா என்றும் ஸ்டாலின் கேட்கிறார். தி.மு.க.வை வைகோ கடுமையாக சாடினார். இப்போது அவர் உங்களுடன் கூட்டு சேரவில்லையா?

    இவ்வாறு அவர் பேசினார்.  #EdappadiPalaniswami




    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். #AssemblyConstituency #VotersList
    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.9.2018 அன்று வெளியிடப்பட்டது.

    1.1.2019 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகிய சரிபார்க்கும் பணிகள் நடந்தன. இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 385 பேர் தங்கள் பெயர்களை சேர்க்கும்படி மனு கொடுத்தனர்.

    ஏற்கனவே இருந்த வாக்காளர்களில் 4 ஆயிரத்து 371 பெயர்கள் நீக்கப்பட்டன. தகுதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் 80 ஆயிரத்து 293 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்திகேயன் வெளியிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த 5 மாதங்களாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் பெயர் விடுபட்டவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் யார்-யார் என்பதை கள ஆய்வு செய்து பட்டியல் திருத்தப்பட்டது. இந்த பணி இன்றுடன் நிறைவுபெற்றது.

    வழக்கத்துக்கு மாறாக இந்த முறை இந்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் 5 மாதங்களை வழங்கி இருந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளின் திருத்தப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

    இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 பேர். பெண்கள் 19 லட்சத்து 34 ஆயிரத்து 78 பேர். இதர பிரிவினர் 932 பேர்.



    தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் வரைவு வாக்காளர் பட்டியலை தவிர 26 ஆயிரத்து 873 வாக்காளர்கள் அதிகம். இது 0.71 சதவீதமாகும்.

    குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி வேளச்சேரி. இங்கு 95 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர்.

    தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 829 பேர். புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.

    கடந்த 10 நாட்களுக்குள் யாராவது இடம்மாறி இருந்தாலோ, பெயர்கள் விடுபட்டு இருந்தாலோ அவர்கள் தகுதியான சான்றிதழ் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம். இது துணை வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் பெரிதாக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என்.ரவி, ராஜேஷ் ஆகியோர் வாக்காளர் பட்டியலை பெற்றுகொண்டனர்.

    தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் மதன் மோகன், மருதுகணேஷ், காங்கிரஸ் மாவட்டதலைவர் சிவராஜசேகர், நாச்சிகுளம் சரவணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

    பேட்டியின்போது சென்னை மாநகராட்சி துணை கமி‌ஷனர் லலிதா உடன் இருந்தார். #AssemblyConstituency #VotersList

    மத்திய பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மரணம் அடைந்தார். #MadhyaPradeshElections #BJPCandidateDies
    ராஜ்பூர்:

    230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிரமாக ஆய்வு செய்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்நிலையில், ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தேவி சிங் படேல் இன்று மரணம் அடைந்தார். தூங்கிக்கொண்டிருந்தபோது அன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜ்பூர் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவி சிங். அவரது மறைவு பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் மரணம் அடைந்ததால் ராஜ்பூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்படும்.  #MadhyaPradeshElections #BJPCandidateDies
    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு கொடுத்துள்ளதாக தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    கடந்த 1.9.2018 அன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,16,756 ஆண் வாக்காளர்களும், 1,21,686 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கைகளும் இருந்தனர். இந்த நிலையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து சிவகாசியில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 18 வயது நிரம்பிய இளைஞர்கள் 4,743 பேர் நேரடியாகவும், 332 பேர் ஆன்-லைன் மூலமாகவும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு செய்து இருந்தனர். இந்த மனுக்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகுதியானவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதனை சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர் சரி பார்க்கும் பணி வாக்குச்சாவடி நிலையஅலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இதில் 3,260 பேர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் குறித்த தகவல் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையிலும், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட தகவலில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வருகிற 29-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.

    அதே போல் 18 வயது நிரம்பியவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்களதுபெயர்களை சேர்க்க கோரி மனு கொடுக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
    ×