search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    வேப்பூர் அருகே மின் ஊழியர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையம் செயல்படுகிறது. இங்கு பாசார் கிராமத்தை சேர்ந்த ராஜவேல், (வயது 58) என்பவர் சிறுபாக்கம் அடுத்த அடரி துணை மின் நிலையத்தில் கட்டுப்பாடு பிரிவு ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில், இரவு பணியிலிருந்த போது, இரவு 11:30 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் இறந்துவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த சிறுபாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அவரது பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

    மரணம் அடைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சேதுபதி மன்னா் பரம்பரை வாரிசான குமரன் சேதுபதி, இளைய மன்னா் என அழைக்கப்பட்டு வந்தாா். பல மாதங்களாக உடல் நலப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவா் நேற்று காலையில் வீட்டிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாா்.

    அவருக்கு மனைவிலக்குமி குமரன் சேதுபதி, மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திரசேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியாா் உள்ளனா்.குமரன் சேதுபதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    குமரன் சேதுபதி, ராமேசுவரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

    அவரது உடல் அரண்மனை வளாகம் ராமலிங்க விலாசத்தில் உள்ள தா்பாா் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    சகோதரரின் உடலுக்கு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியாா், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    அமைச்சர் ராஜகண்ணப்பன்,  ராமநா தபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கா்லால் குமாவத், கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன், அரண்மனை வகையறாவைச் சோ்ந்தவரும், தி.மு.க.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி, பா.ஜனதா பிரமுகா் சுப.நாகராஜன்.

     மதுரை 4-ம் தமிழ்ச்சங்க செயலா் மாரியப்பமுரளி, முன்னாள் அமைச்சா் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆா்.ராமசாமி, முதுகுளத்தூா் முருகன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வத்தின் மகன் பிரதீஷ், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிா்வாகி திருமாறன், ராமநாதபுரம் நகரசபை தலைவா் காா்மேகம் உள்பட பிரமுகர்கள், பொதுமக்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். 

    இன்று (புதன்கிழமை)மாலை அரண்மனை வளாகத்தில் உள்ள ராமலிங்க விலாசத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 
    ×